Friday, May 27, 2016

தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 9

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 9
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 9

_________________________________________________________

1. இன்ப நிலை
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[பொறிகளுக்கு எட்டாது, உணர்விடையே நிகழும் தன்மையான இன்பநிலை பற்றியும், ஐம்புலன்களால் பெறப்படும் இன்பநிலை பற்றியும்,  தமிழிலக்கியங்களில் இன்பம், துன்பம் ஆகியன பற்றி கொடுக்கப்படும் கருத்துக்களையும் ஆராய்கிறார் கட்டுரை ஆசிரியர்]

2. கம்பர் உவமக்கவின்
R. P. அமிர்தலிங்கம் பிள்ளை
[கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி ஆண்டு நிறைவு விழாவில் கட்டுரை ஆசிரியரால் நிகழ்த்தப் பெற்ற உரை கட்டுரை வடிவில் தமிழ்ப்பொழிலில் வழங்கப்பட்டுள்ளது. உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளை ஒப்புமையாகக்  கூறுவது. கம்பராமாயணத்தில் எடுத்தாளப்பட்ட உவமைகளின் நயத்தினைப் பாராட்டும் ஒரு தொடர் கட்டுரை இது]

3.  தஞ்சை - திருச்சி ஜில்லா, தமிழர் மகாநாடு, துறையூர்
இதழாசிரியர்

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment