Monday, May 9, 2016

தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்:1

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்:1
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்:1

________________________________________________

1. முன்னுரை
R. வேங்கடாசலம் பிள்ளை
[ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ்ப் பொழில் எதிர்கொள்ளும் நிலைகள்]

2. சோழர் பேரரசு
S. K. கோவிந்தசாமி
[முதலாம் அதிகாரம் - அடிகோலல், அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று ஆசிரியர் எழுதும் தொடர், சோழர் பேரரசு (கி.பி. 970 முதல் கி.பி. 1268  ஆண்டுவரை). திருப்புறம்பியப் போருக்குப்பின்னர், விஜயாலயன் மறைவிற்குப் பின்னர் கி. பி. 881 இல் சோழ அரசு பேரரசானது, இது ஒரு தொடர் கட்டுரை]

3. தமிழ்நாடும் தமிழ்நாட்டு வழக்கவொழுக்கங்களும் - இல்லறவாழ்க்கை   (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[ஆறறிவு கொண்ட உயிர்கள் எவ்வாறு வேறுபடுகின்றன, எங்ஙனம் அவை சிறப்புப் பெற்றவை என்ற விளக்கங்கள் கொடுக்கப்படுகிறது ].

4. பண்டைக்காலப் பாவலரும் காவலரும்
அ. வரத நஞ்சைய பிள்ளை
[தஞ்சை மற்றும் பல்லாவரம் தமிழ்ச்சங்கங்களில் படிக்கப்பட்ட கட்டுரை.  ஒரு நாட்டின் பெருமைக்கும் சிறுமைக்கும் அடிகோலுபவர் கற்றறிந்தோரே, அந்நாட்களில் பழந்தமிழ்ப் பாவலர் வாழ்க்கை நிலை, இது ஒரு தொடர் கட்டுரை]

5. பரணர்   (தொடர்ச்சி...)
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[வையாவிக் கோப் பெரும் பேகன் பற்றியும், பேகனையும் அவன் மனைவி கண்ணகியையும் இணைத்து வைக்க  கபிலர், பரணர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் செய்த முயற்சி பற்றிய குறிப்புகள்]

6. மதிப்புரைகள்
[காசிவாசி சாமிநாத சாமி அவர்களின்  'மதுரைச் சொக்கநாதர் உலா',   செகவீரபாண்டியக் கவிராயர் அவர்களின் 'திருக்குறட் குமரேச வெண்பா' ஆகிய நூல்களின் மீதான மதிப்புரைகள்]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment