Wednesday, May 27, 2015

நாடார்குல மித்திரன் - 1923 - ஜனவரி மாதத்தின் 2 வது இதழ்


வணக்கம்.

நாடார்குல மித்திரன் மின் சஞ்சிகை 1923ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) என  மூன்று  வெளியீடுகளாக  வெளிவந்துள்ளன.


நாடார்குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில்  இன்று ...
1923 ம் ஆண்டு ஜனவரி 11  வெளிவந்த இரண்டாவது  இதழ் (மலர் 4, இதழ் 14)
இதழ் மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில் ...
பக்கம் 1:
சௌந்தரகாந்தி நூல், அமரர் புராணம் நூல், ஆநந்தமகிளா, நாடார்குல மித்திரன் புத்தகசாலை நூல்களுக்கான விளம்பரங்களும்,  தூத்துக்குடி நவீன சுகபோஜன சாலை உணவு விடுதிக்கான விளம்பரமும், பரமன் குறிச்சி நாடார் உயர்தர எலிமெண்டரி பாடசாலைக்காக நன்கொடை வேண்டுகோளும் வெளியிடப்பட்டுள்ளன

பக்கம் 2:
வீரமாமுனி எழுதிய "ஸ்ரீகிரிஷ்ணலீலை" என்ற தொடரும், சுதேசபரிபாலினி எழுதிய "மனமும் எண்ணமும்" என்ற மனவளக்கட்டுரையும்  இரண்டாம் பக்கத்தில் இடம் பெறுகின்றன.

பக்கம் 3:
நாடார்குல மித்திரனின் தலையங்கம் மூன்றாம் பக்கத்தில்; அன்றைய ஜாதிக்கலவர நிகழ்வொன்றை விவரித்து கண்டனத்தைப் பதிவு செய்கிறது.  தனது கனவில் முருகன் கூறியதால் அக்கினிக்காவடி எடுத்து தென்திருவிதாங்கூரில் உள்ள குமாரக்கோயில் என்ற கோயிலுக்குள் நுழைய முற்பட்டார் நாடார் இன மக்களில் ஒருவர்.  இது வதந்தியாகப் பரவி, காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இருந்தும் கலவரம் வெடித்து, நாடார்குலமக்கள் பலமாகத் தாக்கப்பட்டு விரட்டப்பட்டிருக்கின்றனர்.  பலர் பலத்த காயங்களுடன், ஆடைகள் இழந்து அவமானப்பட்டு, உயிர்தப்பிக்க நீர்நிலைகளில் குதித்து நீந்தி தப்பிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.  

"அக்கினிக் காவடியும் அடிபிடியும்" என்ற தலைப்பில் இத்தாக்குதலைக் கண்டித்த "லெட்சுமணப் பிள்ளையின் வீரமொழி" என்று அவர் ஜாதித்துவேஷப் போலிகளுக்கு விடுத்த எச்சரிக்கை பாராட்டப்பட்டுள்ளது.

பரமசிவன் பார்வதிக்கிடையில் நடைபெறும் கற்பனை உரையாடலில், உமையவள் சிவனிடம் பிச்சை எடுக்கவேண்டாம் தொழில் புரியலாம் என வேண்டுகோள் வைக்கிறார் என்ற பதிவும் இப்பக்கத்தில் உண்டு.

பக்கம் 4 மற்றும் 5:
அயல்நாட்டு  நாடார்சங்கங்ளின் நிகழ்வுகள் இப்பக்கங்களில்  பதிவு செய்யப்பட்டுள்ளன.

பக்கம் 6:
இப்பக்கத்தில்  இடம் பெறும் "செய்தித்திரட்டு" பத்திகள் இந்தியச் செய்திகள், நாடார்சங்கச் செய்திகள், வாசகர் கடிதங்கள், மாநாடுகளின் அறிவிப்புகள், துணுக்குகள் ஆகியவற்றைத் தாங்கி வந்துள்ளன.

பக்கம் 7:
"வித்யாதானமே சிறந்தது" என்ற கல்வியின் மேன்மை கூறும் கட்டுரை ஒன்றும், "தியாகராஜன் அல்லது திறமையுள்ள வாலிபன்" என்ற தொடரின் ஏழாம் பாகமும், நன்கொடையாளர்களின் பட்டியலையும் இப்பக்கத்தில் காணலாம்.



நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி





அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:

Sunday, May 10, 2015

திருவாவடுதுறை ஆதீனத்தின் தலபுராணங்கள் பட்டியல்! 15


1221 வேதாரண்யம் புராணம்
1222 திருக்கோயில் தலவரலாறு
1223 சிவதிருப்பதிகங்கள்
1224 திருத்தல வழிகாட்டி
1225 திருப்பரம்பரம் வரலாறு
1226 வனதுர்க்காதேவி வரலாறு கதிரை
1227 திருவாமாத்தூர் தலவரலாறு
1228 திருக்கழிப்பாலைப்புராணம்
1229 இந்தியத் திருக்கோயில் தர்சனம்
1230 ண்டுசேர் குழலி சமேத பாம்புரநாதர் திருக்கோயில்
1231 ஆபத்து நிவாரண கணபதி கோயில் நெய்வேலி (ஆங்கிலம்)
1232 மாயூரநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக மலர்
1233 மாயூரநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக மலர்
1234 ஸ்ரீ ஜெய்சந்தோஷிமாதா திருக்கோயில் திருவெறும்பூர் கும்பாபிஷேகமலர்
1235 சேந்தங்குடி படைவெட்டிமாரியம்மன் கும்பாபிஷேகமலர்
1236 திருநெடுங்களநாதர் திருக்கோயில் கும்பாபிஷேகமலர்
1237 குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகமலர்
1238 Maha Kumbabisegam Malar - Hindu Sankarar Sri Kamatchi Ampal Temple
1239 திருவாவடுதுறை ஸ்ரீ கோமுக்தீஸ்வ்ர் திருக்கோயில் தலவரலாறு
1240 ஐயப்ப தரிசனம் இலங்கை
1241 பினாங்கு கொடிமலை - ஸ்ரீ அருளொளி திருமுருகன் கோயில் கும்பாபிஷேகமலர்
1242 குருமண்காடு - வவுனியா - கொழும்பு - காளியம்மன் தேவஸ்தானம் கும்பாபிஷேகமலர்
1243 திருவானைக்கா புராணம் - ஞானஉபதேசம் - உரை
1244 கண்டி - ஸ்ரீ செல்வவிநாயகர் - மீனாட்சி சோமசுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகமலர்
1245 பர்வதவர்த்தினி அம்மன் கோயில் தளவாய்சுவாமி கோயில் - ரெட்டியார்பட்டி
1246 பழனி - தண்டாயுதபாணிகோயில் (கும்பாபிஷேகமலர்)
1247 சித்திர திருவிளையாடல் புராணம்
1248 சித்திர திருவிளையாடல் புராணம்
1249 மகாமகம் - குறிஞ்சிமலர் (பல கோயில் வரலாறு)
1250 ஹிந்துமித்திரன் - தமிழத்திருக்கோயில் திருவிழாக்கள் சிறப்பு மலர்
1251 சதுர கிரித்தலபுராணம்
1252 சதுர கிரித்தலபுராணம்
1253 சதுர கிரித்தலபுராணம்

சுபா