Saturday, May 7, 2016

தமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 10

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஆறாம் ஆண்டு:  (1930 -1931) துணர்: 6    மலர்: 10
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஆறாம் ஆண்டு:  (1930 -1931)
துணர்: 6    மலர்: 10

________________________________________________

1. பல்லவர் கற்றளிகள்
S. K. கோவிந்தசாமி
[முதன் முதலில் மகேந்திரவர்ம பல்லவன்  மரம், செங்கல், சுண்ணாம்பு, உலோகம் இன்றி கற்றளிகளை எடுப்பித்ததே தமிழகக் கற்றளிகளின் துவக்கம். மகேந்திரன் முதல் அபராஜித  பல்லவனின் திருத்தணி கோயில்  வரை கற்றளிகளின் அமைப்பு, சிற்பநடை ஆகியன பற்றிய ஆய்வுக்கட்டுரை ]

2. பதி பசு பாசப்பனுவல்  (தொடர்ச்சி...)
L. உலகநாத பிள்ளை
[மறைஞானசம்பந்தர் இயற்றிய சைவசித்தாந்தம் உணர்த்தும் நூல்களுள்  இரண்டாவது மற்றும், மூன்றாவது  பதி சாதக வியல் ]

3. மூவர் தமிழ் (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[நான்மறைகள், தமிழ் மறைகள் பற்றிய ஆய்வுக்கட்டுரை.  நான்மறைகள் இயற்றியமைக்கும் தேவாரம் முதலாகிய தமிழ் மறைகள் இயற்றப்பட்டமைக்கும் காணப்படும் மாறுபாடுகளின் மீது ஆய்வு]

4. ஓர் வழக்கீடு
அ. கந்தசாமிப் பிள்ளை
[ரா. இராகவையங்கார் அவர்களுக்கு மறுப்பு.  தமிழ்மகனார் என்ற வழக்குத் தொடுப்பவர், வடமொழியாளர்  என்ற எதிரி மீது தொடுத்த வழக்கின் மீது உயர்நீதிமன்றத்தில் நடக்கும் கற்பனையான வழக்காடுமன்ற நாடகம்.  இதில், திருக்குறள் வடமொழியில் இருந்து வந்ததென்று கூறும் வடமொழியாளருடன் சான்றுகளோடு வழக்காடுகின்றார் தமிழ்மகனார் ]

5. தமிழ் நிகழ்ச்சிகள்
R. வேங்கடாசலம் பிள்ளை
[சாமி. வேலாயுதம் பிள்ளை அவர்களின் பரிந்துரையின்படி  இணைக்கப்படும்  இப்பகுதி இனியும் தமிழ்ப் பொழில் இதழ்களில் தொடரும்.  இம்முறை ஆங்கிலம் படித்தோர் அவையில் தமிழ்ப் பண்டிதர்கள் அவமதிக்கப்படுவது கண்டிக்கப்படுகிறது, தமிழாசிரியர்களின் ஆசிரியர்  தகுதி அங்கீகரிக்கப் பெறாமை பற்றிய நடவடிக்கை ஒன்று கவனத்திற்குக் கொண்டுவரப்படுகிறது]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment