Friday, May 13, 2016

தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 6

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்: 6
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.


இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்: 6

________________________________________________

1. நான்மொழி நாடு
அ. கந்தசாமிப் பிள்ளை
[சேலம் மாவட்டம் 'நாமக்கல்' பகுதியே 'நான்மொழிக் கோசர் நாடு' என அழைக்கப்பட்ட 'நாமக்கல் நாடு', என்பதாக 'மு. இராகவையங்கார்' எழுதிய 'சேரன் செங்குட்டுவன்' நூல் இரண்டாம் பதிப்பின், பக்கம் 108-9 இல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தகவல் "பிழையானது" நாமக்கல்லுக்கும், நான்மொழிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மகேந்திர பல்லவனால் உருவாக்கப்பட்ட இந்தக் குடைவரை திருமால் கோயில் 'அதிகேந்திர விண்ணகரம்' என்பதாகும். மலையில் நாமங்கள் தீட்டப்பட்டதால் இப்பெயர் பெற்றது. இதன் பழைய பெயர் 'திருஅறைக்கல்'  (அறை = பாறை, கல்=குன்று). கல்வெட்டுத் தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 'மதுரைக் காஞ்சி' குறிக்கும்  'நான்மொழிக் கோசர் நாடு'  இதுவன்று ]

2. பண்டைக்காலப் பாவலரும் காவலரும் (தொடர்ச்சி...)
அ. வரத நஞ்சைய பிள்ளை
[தஞ்சை மற்றும் பல்லாவரம் தமிழ்ச்சங்கங்களில் படிக்கப்பட்ட கட்டுரை.  அந்நாட்களில் பழந்தமிழ்ப் பாவலர் வாழ்க்கை நிலை பற்றிய குறிப்புகள்,  பாவலரின் அறவுரைகள், பாவலர்கள் உற்றுழியதவும் அருஞ்செயல்கள், இது ஒரு தொடர் கட்டுரை]

3. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்பு  25 -  கட்டுரையின் இப்பகுதியில் இடம் பெறுகிறது ... ]

4. பரணர்   (தொடர்ச்சி...)
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[சேரன் செங்குட்டுவனின்  மேல்  பரணர் பாடிய பாடல்களின் குறிப்புகள் காணப்படுகின்றன]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment