Wednesday, May 11, 2016

தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 4

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்: 4
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.


இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்: 4

________________________________________________

1. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும்
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் உள்ளது என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார்.
நூலாசிரியருக்குத் தமிழிலக்கணத்தில் ஆழ்ந்த பயிற்சியும், வடமொழி இலக்கணத்தில் பயிற்சியும் இல்லை என்பதையே அவரது நூல் காட்டுகிறது, அவரது எழுத்துகூட சரியான தமிழின் நடையில்  காணப்படவில்லை என்பதோடு, ஆங்கில நடையுடனும் எழுதுகிறார் என்பது  இக்கட்டுரை ஆசிரியரான சோமசுந்தரம் பிள்ளை அவர்களின்  கருத்து.
மறுப்புக்கள்  1 - 20 கட்டுரையின் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன... ஆனால் இந்த மறுப்புக்கள் கட்டுரை மேலும் தொடரப்போவதாகத் தெரிகிறது.  குறிப்பாக, கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் பெரியோர்களில்  பலர்  இக்கட்டுரை ஆசிரியர் இக்கட்டுரையை எழுதுவதற்கு ஆதரவும் வேண்டுகோள்களும் வைத்துள்ள குறிப்பும் கட்டுரையின் முன்னுரையில் காணப்படுகிறது. இந்த இதழில் 48 பக்கங்களுக்கு இந்த ஒரு கட்டுரை மட்டுமே அமைந்துள்ளது.  இது ஒரு தொடர் கட்டுரை]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment