Wednesday, May 18, 2016

தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 11

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்: 11
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.


இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்: 11

________________________________________________

1. திருக்குறளும் கம்பரும்
R. P. அமிர்தலிங்கம் பிள்ளை
[திருக்குறளின் கருத்துக்களை கம்பர் தனது கம்பராமாயணத்தில் எடுத்தாண்ட செய்யுள்களை எடுத்துக்காட்டுகிறார் கட்டுரை ஆசிரியர், இக்கட்டுரையில் 34 திருக்குறள்களின் கருத்துகள் கம்பரால் தனது செய்யுள்களில் எடுத்தாளப்பட்டதைப் பட்டியலிட்டுள்ளார்  அமிர்தலிங்கம் பிள்ளை, இது ஒரு தொடர்கட்டுரை]

2. ஒளியலைகள்
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
[ஒளியென்பது யாது? என்ற கட்டுரையைத் தொடர்ந்து அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார் ஒளியைப் பற்றி எழுதும்  மற்றொரு இயற்பியல் கட்டுரை. இக்கட்டுரை காந்த அலைகள், மின்காந்த அலைகள், மின்சாரம் ஆகியவற்றின்  அறிவியல் பண்புகளை  விளக்குகிறது]

3. சிதம்பரம் கல்வெட்டுகள்
S. K. கோவிந்தசாமி
[அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று ஆசிரியர், சிதம்பரம் நடராசர் கோவிலில் காணப்படும் 3 கல்வெட்டுகளின் தகவல்களைத் தருகிறார் ]

4. "சைவமும் தமிழிலக்கியமும்" என்னும் கட்டுரையின் ஐயவுரை
G. சுப்பையா
['துணர்: 7  -  மலர்: 8' இல் வெளியான 'வை. சுந்தரேச வாண்டையார்'  அவர்களின் 'சைவமும் தமிழிலக்கியமும்' என்ற கட்டுரை, தலைப்பிற்கேற்ற செய்திகளைக் கூறவில்லை என்பது ஐயவுரை எழுதியுள்ள சுப்பையா அவர்களின் கருத்து, சுந்தரேச வாண்டையாரின் கட்டுரை மீது விமர்சனங்கள் வைக்கிறார்]

5.  கல்வி நிலை  (தொடர்ச்சி...)
இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[இளமைக் காலத்திலேயே கற்பதன் அருமை, ஆசிரியர் உதவியுடன் கற்கவேண்டியதன் தேவை, மாணவர்களின் பண்பு, கற்கக் கூடிய பாடங்களின் வகைகள், அவற்றைக் கற்க வேண்டிய சரியான காலப் பொழுது ஆகியன விளக்கப் படுகின்றன]

6. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரை மறுப்பின் மறுப்பு
P. S. வேதாசலய்யர்
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது மறுப்புரைகளைப் பதிவு செய்து வருகிறார்  ம. நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள்.  சோமசுந்தரம் பிள்ளை  எழுதிவரும் இத்தொடர்  கட்டுரையின் மீது  தனது மறுப்புரைகளைப் பதிவு செய்கிறார்  P. S. வேதாசலய்யர் அவர்கள்.  கூறப்படும் மறுப்புரைகள் பெரும்பாலும்  சாத்திரியாரின் உரைநடையைப் பற்றியக் கண்டனங்களாகவே உள்ளனவே, இக்கட்டுரை கற்போருக்கு பயனளிக்கும் வகையில் உள்ளதா என்பது வேதாசலய்யர் முன் வைக்கும் கேள்வி, மறுப்புகளுக்கு மறுப்பு என்னும் இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை  ... ]

7. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்புக்கள்  35 - 36 கட்டுரையின் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன... ]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment