Monday, May 2, 2016

தமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 3, 4 & 5 (பகுதி 1)

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஆறாம் ஆண்டு:  (1930 -1931) துணர்: 6    மலர்: மலர்: 3, 4  & 5 (பகுதி 1)

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

** 3 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின்  'முதல் பகுதியின்' உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஆறாம் ஆண்டு:  (1930 -1931)
துணர்: 6   மலர்: மலர்: 3, 4  & 5 (பகுதி 1)

________________________________________________

1.  திருத்தக்கதேவரும் கம்பநாடரும்  
வரதநஞ்சைய பிள்ளை
[சீவக சிந்தாமணியும், கம்பராமாயணமும், காப்பிய இலக்கணங்கள் முற்றும் நிரம்பி, அழகுச்சுவை மலிந்தவை. இவற்றை எழுதிய ஆசிரியர்களின் எழுத்துத் திறமையை ஒப்பிட்டு இலக்கிய நயம் பாராட்டும் கட்டுரை. இவ்விரண்டிலும், சிந்தாமணி காலத்தில் முற்பட்ட இலக்கியம், எழுதியவர் இருவரும் பிற சமயங்களைப் பழித்துரைக்காப் பண்பாளர்கள்]

2.  உடல் இயலும் உடல் நல வழியும்  (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி,    தொற்றுநோய், நோய் வளர்க்கும் கிருமிகள்  ... தொடர்கின்றன, அறிவியல் கலைச்சொற்கள் பலவும்  இடம் பெறுகின்றன ]

3. "வந்தெதிரே தொழுதானை வணங்கினான்" என்னும் கம்பராமாயணப் பாட்டின் உரை
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[பலரும் பலவாறாகப் பொருள் கூறும் அயோத்தியா காண்டம், குகப்படலத்தின் இப்பாடலுக்கு விளக்கவுரை, குறிப்பாக தொழுதெழும் செயலுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. இக்கட்டுரை இதே இதழில் இரு பகுதிகளாகப் பிரித்து வெளியிடப் பட்டுள்ளது]

4. சிலப்பதிகார நாடகப்பகுதி   (தொடர்ச்சி...)
?? ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படவில்லை
[மாணவர் பக்கங்கள்: சிலப்பதிகார நாடகம், மதுரையிலும் புறஞ்சேரியிலும் காட்சிகள், இது ஒரு தொடர்]

________________________________________________


நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment