Sunday, May 22, 2016

தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 4

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 4
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 4

________________________________________________________________


1. துறையூர் மாநாடுகள்
த.வே. உமாமகேசுவரன்
கா. நமச்சிவாய முதலியார், வி. கலியாணசுந்தர முதலியார், S. குமாரசாமி ரெட்டியார் ஆகியோர் முறையே; தமிழ்ப்புலவர், தமிழ் மாணவர், தமிழ் ஆர்வலர் மாநாடுகளுக்குத் தலைமை வகிக்க துறையூரில் தமிழ்  மாநாடுகள் (ஆகஸ்ட் 6, 1932) நடைபெற்றன. மாநாட்டில் தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கு அதிக நிதி, தமிழைப் பயிற்றுமொழியாக்கல், பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படல், தமிழில் பயிற்றுவிக்க அதிக மொழி பெயர்ப்பு நூல்கள் தமிழில் எழுத வேண்டுதல், பெண் கல்வி  என இன்றும் கோரப்படும் வேண்டுகோள்களை  அன்றும் '6' தீர்மானங்களாக  மாநாட்டில் கொண்டு வந்துள்ளனர்]

2. துறையூரில்  நடைபெற்ற தமிழ்ப்புலவர் மாநாட்டில்,  மாநாட்டைத் துவக்கி வைத்த பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் அவர்கள் நிகழ்த்திய துவக்கப் பேருரை
மு. கதிரேசச் செட்டியார்

3. துறையூரில்  நடைபெற்ற தமிழ்ப்புலவர் மாநாட்டில்,  ந. மு. வேங்கடசாமி நாட்டார்  அவர்கள் நிகழ்த்திய வரவேற்புரை
 ந. மு. வேங்கடசாமி நாட்டார்

4. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்பு 33-34 கட்டுரையின் இப்பகுதியிலும்  தொடர்கிறது ... ]

5. வித்துவான் வேதாலசய்யர் என்பார் போலிமறுப்பு
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[வேதாலசய்யர் அவர்கள் பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் நூலுக்கு ஆதரவாக வைத்த  மறுப்புகளைக் குறிப்பிட்டு,  வேதாலசய்யர்  முன் வைத்த  மறுப்புகளுக்கும் அடுத்து விளக்கம் அளிக்கத் துவங்கியுள்ளார்; மறுப்பு 1 இன் விளக்கம் இக்கட்டுரையில் இடம் பெறுகிறது]


________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment