Wednesday, July 27, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 2

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 2
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 2

_________________________________________________________

1. வல்வடுகு நான்கு  (தொடர்ச்சி ...)
K.S. சுந்தரம் பிள்ளை
[விஜயநகர மன்னர்களின் பிரதிநிதிகளாக ஆண்ட தஞ்சை நாயக்க மன்னர்கள் பற்றி சுந்தரம் பிள்ளை இக்கட்டுரையில் விவரிக்கிறார். கட்டுரையின் இப்பகுதி தரும் செய்திகள்:     பீஜப்பூர் சுல்தான் உதவியுடன் தஞ்சையை மீட்டத் தஞ்சை நாயக்கர் வாரிசான செங்கமலதாசை, பீஜப்பூர் சுல்தான் மறைவிற்குப்பின்னர் ஆட்சி ஆசை கொண்ட சுல்தானின் பிரதிநிதி தஞ்சை நாயக்கரை விரட்டியடித்துக் கவர்ந்து கொள்கிறார்.  தஞ்சையில் ஏற்பட்ட கலவரத்தைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு  மராட்டிய மன்னர் சிவாஜி தஞ்சையைக் கைப்பற்ற, 17 ஆம்  நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தஞ்சை  மராட்டியரின் கைகளுக்கு மாறுகிறது என்ற வரலாற்றுத் தகவலும், நாயக்க மன்னர்களது இறைமாட்சி  இப்பகுதியில்  இடம் பெற்றுள்ளது]

2. கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[4 ஆம்  அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதி, முதல் நிலை பிரதானம், அந்நுவயக் காட்சியின் ஆதார உரைமொழி, மில்லின் உரைகள், நிலைமாற்றல், மாறுகோணிலை மாற்றம், தொடையலியல், கணித முறைகளை அந்நுவய முறையாகக் காட்டுதல் ஆகிய கருத்தாக்கங்களை விளக்குகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

3. வாழ் நாள் (தொடர்ச்சி ...)
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[உடலுடன் உயிர் இணைந்து செயலாற்றும் காலமான 'வாழ் நாள்' குறித்த சிந்தனை; வாழ்நாள் குறித்த  கருத்தாக்கங்கள், இலக்கியம் கூறும்  விளக்கங்கள், உலகளாவிய தத்துவங்கள், செய்திகள், சான்றுகள்   ஆகியவற்றின் தொகுப்பு]

4. தமிழ்ப் பத்திரிக்கையின் வரலாறு (தொடர்ச்சி ...)
ப. கலியாணசுந்தரம் பிள்ளை
[பத்திரிக்கை வளர்ச்சிக்கு உதவுவது உரைநடை.  தமிழகத்தில் பத்திரிக்கைகளின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் வரலாற்றுப் பார்வையாக அறிமுகப்படுத்துகிறார் கலியாணசுந்தரம் பிள்ளை]

5. இந்தியாவும் சீனாவும்  (தொடர்ச்சி ...)
T.S. நடராசன்
[சீனப் பேராசிரியர் 'டான்-யுன்-ஷன்'   சாந்திநிகேதனத்தில் நிகழ்த்திய சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு- பண்டைய  காலம் தொட்டு சீனாவும் இந்தியாவும் கல்வி, மொழி ஆகியவற்றில் மேம்பட்டு உலகில் சிறந்து விளங்கியமை பற்றியும்; இரு நாடுகளின் பெளத்த மத நூல்கள் மற்ற  நாட்டைப் பற்றி குறிப்பிடுவதைப் பற்றியும்; வாழ்வியல் , மக்கள் கொண்ட நல்லொழுக்கப் பண்புகளின் ஒற்றுமை, கலைவளர்ச்சி, நாகரிகம் எனப் பலவற்றிலும்   தொடர்ந்து 5,000 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளும்  சிறந்து விளங்குவது பற்றியும்  விவரிக்கும் இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]


________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்



வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, July 17, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 1




வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 1
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 1

_________________________________________________________

1. வாழ் நாள்
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[உடலுடன் உயிர் இணைந்து செயலாற்றும் காலமான 'வாழ் நாள்' குறித்த சிந்தனை; வாழ்நாள் குறித்த இந்தியக் கருத்தாக்கங்கள், தமிழ் இலக்கியம் கூறும்  விளக்கங்கள், உலகளாவிய தத்துவங்கள் குறித்த மறுபார்வை ஆகியவற்றின் தொகுப்பு. இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]


2. தமிழ்ப் பத்திரிக்கையின் வரலாறு
ப. கலியாணசுந்தரம் பிள்ளை
[பத்திரிக்கை வளர்ச்சிக்கு உதவுவது உரைநடை. பண்டைய இலக்கிய, இலக்கண, நிகண்டுகள் 'பாடல்' வடிவில் அமைந்து கல்வியிற் சிறந்தாருக்கே  பயனளிக்கும் வகையில் அமைந்தது.  பாடல்களில் ஆங்காங்கே உரைநடை அமைந்த சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களைத் தமிழர் பலகாலமாக அறிந்திருப்பினும், பாக்களையே பெரிதும் போற்றி வளர்க்க முற்பட்டனர்.
மொழி வளர்க்க உதவும் 'இலக்கிய பத்திரிக்கைகள்', சமயம் வளர்க்க உதவும் 'சமயப் பத்திரிக்கைகள்', சமுதாய முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட 'சமுதாய சீர்திருத்தப் பத்திரிக்கைகள்', குறிப்பிட்ட வகுப்பினரின் நலம் காக்க வெளியிடப்படும் 'வகுப்பு முன்னேற்றப் பத்திரிக்கைகள்', இவ்வாறு உயர் நோக்கங்கள் தவிர்த்து பொதுமக்களை மகிழ்விக்க என்னும் 'நகைச்சுவைப் பத்திரிக்கைகள்', நாட்டின் அரசியல் முன்னற்றதைக் கருதும் 'தேசீயப்  பத்திரிக்கைகள்' எனப் பல வகை பத்திரிக்கைகள் தோன்றின.
இந்த ஆறு வகை பத்திரிக்கைகளின் பண்புகளை ஆராய்ந்து,   தமிழகத்தில் இவ்வகைப் பத்திரிக்கைகளின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் வரலாற்றுப் பார்வையாக அறிமுகப்படுத்துகிறார் கலியாணசுந்தரம் பிள்ளை. இது  ஒரு தொடர் கட்டுரை]

3. கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[4 ஆம்  அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதி, அப்பியாசங்கள், முதல் நிலைத் துறைகள், முதல், இரண்டாம், மூன்றாம்  நிலைச் சிறப்பு விதிகள்,  அவற்றைப் பற்றியக் குறிப்புரைகள் ஆகிய கருத்தாக்கங்களை விளக்குகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

4. பிரம்பில் என்னும் வைப்புத் தலம்
வை. சுந்தரேச வாண்டையார்
[அப்பரால் பாடப்பட்ட தேவார வைப்புத் தலமான பிரம்பில் என்ற ஊரின் வரலாறு இக்கட்டுரையில்  ஆராயப்படுகிறது.  தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் 'வேளாண் பிரம்பூர்' மற்றும் 'கள்ளப் பிரம்பூர்' என்ற இரு ஊர்கள் அவ்வூர்க் கோவில்  கல்வெட்டுகளில் பிரம்பில்  அழைக்கப்பட்டுள்ளன.  இருப்பினும், பிரம்பில் எனக் குறிப்பிடும் வேளாண் பிரம்பூர் கல்வெட்டு காலத்தால் முற்பட்டது.  ஆனால் பிரம்பில்  எனக் குறிப்பிடும் கள்ளப் பிரம்பூர் கல்வெட்டு பிற்காலத்தியது மட்டுமல்ல, அதற்கும் முன்னர் அவ்வூர் வேறு பெயரில் (ராஜ சுந்தர சதுர்வேதி மங்கலம், என்று ) அழைக்கப்பட்டதாகவும் கோவிலின் காலத்தால்  முந்திய பிற கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது.  எனவே, காலத்தால் முந்திய கல்வெட்டில் பிரம்பில் என்ற  குறிப்பு கொண்ட  வேளாண் பிரம்பூர் என்ற ஊரே அப்பர் காலத்தில் பிரம்பில்  அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நிறுவுகிறார் கட்டுரை ஆசிரியர்.  தென்னிந்தியக் கல்வெட்டு நூல்களில் இடம் பெறாத அவ்வூர்களின் கல்வெட்டுகளையும்,  சோழ நாட்டின் வளநாடு, கூற்றம் போன்ற ஆட்சிப் பிரிவுகள் பற்றியும் இக்கட்டுரை தகவல்கள் பல தருகின்றது]

5. இந்தியாவும் சீனாவும்
T.S. நடராசன்
[சீனப் பேராசிரியர் 'டான்-யுன்-ஷன்'   சாந்திநிகேதனத்தில் நிகழ்த்திய சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு- பண்டைய  காலம் தொட்டு சீனாவும் இந்தியாவும் கல்வி, மொழி ஆகியவற்றில் மேம்பட்டு உலகில் சிறந்து விளங்கியமை பற்றியும்; இரு நாடுகளின் பெளத்த மத நூல்கள் மற்ற  நாட்டைப் பற்றி குறிப்பிடுவதைப் பற்றியும்; வாழ்வியல் , மக்கள் கொண்ட நல்லொழுக்கப் பண்புகளின் ஒற்றுமை, கலைவளர்ச்சி, நாகரிகம் என பலவற்றிலும்   தொடர்ந்து 5,000 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளும்  சிறந்து விளங்குவது பற்றியும்  விவரிக்கும் இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

6. வல்வடுகு நான்கு - A Chapter in the History of Tanjore. The Nayak Kings.
K.S. சுந்தரம் பிள்ளை
[சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னர் (1200 களில்) தமிழ் மன்னர்கள் தங்களுக்குள் ஒற்றுமையின்றி இருந்த பொழுது, தமிழகத்தில் அமைதி குலைந்த பொழுது, அலாவுதீன் கில்ஜி அனுப்பிய அவரின் தளபதி மாலிக்காபூரும் படைகளும் மதுரையை ஆட்சி செய்த  இராசசிம்ம பாண்டியனை விரட்டியடித்து தமிழகப்பகுதியை சூறையாடி ஆட்சியைக்  கைப்பற்றினர்.  அந்நாளில் இருந்து அன்னியர் ஆட்சியின் கீழ் சென்ற தமிழகத்தை முகமதியரிடம் இருந்து தங்கள் வசம் கைப்பற்றினர் விஜயநகர மன்னர்கள்.
அவர்களின் பிரதிநிதிகளாக ஆண்ட தஞ்சை நாயக்க மன்னர்கள் பற்றி சுந்தரம் பிள்ளை இக்கட்டுரையில் விவரிக்கிறார். கட்டுரையின் இப்பகுதி தரும் செய்திகள்  வழியாகத்  தஞ்சையை ஆண்ட அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர், விஜய ராகவ நாயக்கர் ஆகியோர் குறித்தும்;
மதுரை நாயக்கர்களுடன் ஏற்பட்ட பகையால் மதுரை நாயக்கர்கள் போரில் தஞ்சை நாயக்கர்களை வென்று, 17 ஆம்  நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தஞ்சையை தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள் என்ற வரலாற்றுத் தகவலும் இப்பகுதியில்  இடம் பெற்றுள்ளது.  இக்கட்டுரை தொடரும்]

7. தமிழ்ச்செய்திகள்
இதழாசிரியர்
[கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா (மே  13, 1936) குறித்த ஏற்பாடுகள் குறித்த தகவல்கள்; அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தமிழ் வளர்ச்சி நோக்கத்தில் உருவாக்கப்பட்டது என்றாலும் நிர்வாகம் தமிழ்க் கல்விக்கும், தமிழிசைப் புலமைக்கும் ஏற்றம் அளிக்கும் வகையில் பாடத்திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது; சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம், திருநெல்வேலி பிரிவின் செப்டெம்பர் 1936 விழா ஏற்பாடு குறித்த தகவல்கள்; இம்மாதத்தில் சங்கக் கல்லூரிக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களின் பெயர், வழங்கிய தொகை விவரம் குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.



________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Tuesday, July 5, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 12

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 12
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 12

_________________________________________________________

1. பாண்டியர் வரலாறு  (தொடர்ச்சி...)
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[இம்முறை கிபி 1310  ஆம் ஆண்டிற்குப் பிறகு  ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களின் வரலாறு கொடுக்கப்படுகிறது. மாறவர்மன் குலசேகரப் பாண்டியனின் மைந்தர்களான சடையவர்மன் சுந்தர பாண்டியனும் சடையவர்மன் வீரபாண்டியனும் பதவிக்காகப் போட்டியிட்டதும், சர்ச்சையில் வலுவற்றுப் போன பாண்டிய நாட்டை மாலிக்காபூர் கொள்ளையிட்டதும்  பாண்டிய அரசின் அழிவுக்கு வழி வகுத்தது.  தொடர்ந்து விசயநகர பேரரசின் படையெடுப்பும் நிகழ்ந்தது.  மகமதியர்கள் விரட்டப்பட்டாலும் பாண்டியர்கள் மீண்டும் நல்ல நிலையில் ஆட்சி புரியவில்லை என்பது கல்வெட்டுச் சான்றுகள் மூலம் தெரிகிறது. இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

2. வள்ளல்  ஆய் அண்டிரன் - ஒரு சிறு நாடகம்
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[தமிழ்ப்பொழிலில் தமிழகமன்னர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை நாடக வடிவில் வழங்கிய சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்களால், இம்முறை வள்ளல்  ஆய் அண்டிரன் வாழ்க்கை வரலாறு  நாடக வடிவில் வழங்கப்படுகிறது.
இப்பகுதியில், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் தோன்றுகிறார்.  ஆய் அண்டிரனைக் காண விழைந்த விறலி ஒருத்தியை தன்னுடன் அழைத்துச் சென்று அவனைச் சந்திக்க உதவ முன்வருகிறார்; அவர்களுக்கும்  குட்டுவன் கீரனார்,  மருதநாகன், துறையூர் ஓடைக்கிழார் ஆகியோருக்கும் ஆய் அண்டிரன் பரிசுகள் வழங்குகிறார் என்ற  காட்சிகள்   இடம் பெறுகின்றன.  இந்நாடகம் நிறைவுற்றது.  வழக்கம்போல இந்த நாடகமும் கல்லூரி ஆண்டுவிழாவிற்காக சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்களால் எழுதப்பெற்று, கல்லூரி மாணவர்களால் நடத்திக் காட்டப்பட்டது]

3. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்   (தொடர்ச்சி ...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  அத்துடன், நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்களின்  தொல்காப்பிய உரையை ஆதரித்து   நாராயணையங்கார் கொடுத்த மறுமொழியையும் இதில் மறுக்கிறார்.  அதற்கான  மறுப்பின் தொடர்ச்சி ...]

4. புத்தக மதிப்புரை
இதழாசிரியர்
[ - சென்னைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட 'கலைச்சொற்கள்' என்ற நூல் மேல்நாட்டுக் கலைகளைத் தமிழில் பயில உதவும் என்று பாராட்டப்பட்டுள்ளது.
 - வே. வேங்கடராசலு ரெட்டியார் எழுதி, சென்னைப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட "கபிலர்" என்ற நூலில், பல தலைப்புகளிலும் கோணங்களிலும் கபிலர் குறித்து ஆய்வு செய்த ஆசிரியரின் ஆய்வுத்திறம் சிறப்பாக அமைந்திருப்பது பாராட்டப்பட்டுள்ளது.
 - ஆறாண்டுகளாகத் தொடர்ந்து அரசியல், சமூகம், தமிழ்மொழி, தமிழர்நாகரிகம் ஆகியவற்றில் பதிவுகளைத்  தாங்கி வெளிவரும் வாரஇதழ் வெளியிட்ட ஈழகேசரி ஆண்டு மடலின் சிறப்பு கண்டு அவ்விதழ்  வாசகர்களுக்குப் பரிந்துரைக்கப் பட்டுள்ளது]

5.  செய்திகள்
  - இம்மாதத்தில் சங்கக் கல்லூரிக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களின் பெயர், வழங்கிய தொகை விவரம் குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
 - இரங்கற்பா:  கரந்தைத் தமிழ்ச் சங்கத்துப் பேரன்பர் கூடலூர் வே. இராமசாமி வன்னியர் மறைவு குறித்து எழுதப்பட்ட இரங்கற்பா
 - இணைப்பு:  தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் - வெள்ளிவிழா விண்ணப்பம் - 25 ஆண்டுகள் நிறைவையொட்டி சங்கம் முன்னெடுக்கவிருக்கும் பல தமிழ்ப்பணித் திட்டங்கள் கொடுக்கப்பட்டு, அவற்றை நிறைவேற்ற மக்களின் செயலுதவியும் பொருளுதவியும் கோரப்பட்டுள்ளது.
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Monday, July 4, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 11

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 11
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 11

_________________________________________________________

1. நெடுந் தொகைக் குறும்பொருள் (தொடர்ச்சி ...)
முத்து சு. மாணிக்கவாசக முதலியார்
[சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களுள் நெடுந்தொகை என்றும் கூறப்படும் அகநானூற்றுப் பாடல்களுக்கு சிற்றுரை வரைகிறார் மாணிக்கவாசக முதலியார்.
தொடர் கட்டுரையின் இப்பகுதியில்,  8  ஆம் பாடலுக்கு தனது சிற்றுரையை  எழுதியுள்ளார் மாணிக்கவாசக முதலியார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

2. கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[4 ஆம்  அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதி, பூர்வபதக் கள்ளநடை, 5, 6, 7, 8  ஆம் விதிகளின் விளக்கம்,   நிலைகள்  ஆகிய கருத்தாக்கங்களை விளக்குகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

3. மக்கள் வாழ்க்கை
அ. சிதம்பரநாதஞ் செட்டியார்
[செயலால் வாழ்கிறோம், ஆண்டினால் அன்று
உள்ளத்தால் வாழ்கிறோம் உயிர்ப்பினால் அன்று
உணர்ச்சியால் வாழ்கிறோம், நாழிகையால் அன்று...உண்டு உடுத்து உறங்குவதோடு வாழ்க்கை முற்றுவதில்லை, மனித இச்சையால் வாழ்க்கை தொடருகிறது. ஒருவரது உணர்ச்சி, சிந்தை, செயல்  ஆகியவற்றால் வாழ்க்கை நோக்கப்படும்  என்று கூறும் வள்ளுவர் கருத்துக்களின்  தொகுப்பு இக்கட்டுரை]

4. காவிரி
K. கோவிந்தன்
[மாணவர் ஒருவரது கட்டுரை.  காவிரியின் துவக்கம் முதல், அது கடலில் கலக்கும் வரை அதன் பாதையை விவரித்து, இலக்கிய மேற்கோள்களுடன் காவிரியின் சிறப்பைக் கூறும் கட்டுரை]

5. வள்ளல்  ஆய் அண்டிரன் - ஒரு சிறு நாடகம்
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[தமிழ்ப்பொழிலில் தமிழகமன்னர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை நாடக வடிவில் வழங்கிய சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்களால், இம்முறை வள்ளல்  ஆய் அண்டிரன் வாழ்க்கை வரலாறு  நாடக வடிவில் வழங்கப்படுகிறது.
இப்பகுதியில், ஆய் அண்டிரன் பொதிகைவேளின் மகள் பொற்பூங்கோதையை மணந்து கொள்ளும்  காட்சி  இடம் பெறுகிறது.  இந்நாடகத்தின் காட்சிகள் தொடரும்...]

6. புத்தக மதிப்புரை
இதழாசிரியர்
[- O.A. நாராயணசாமி ஐயர் அவர்களின் 'கிராம முன்னேற்றம்' என்ற நூல் கிராம மக்கள் நலத்தினை மேம்படுத்த நல்ல வழிமுறைகளைக் காட்டும் நூல் எனப் பாராட்டப் படுகிறது.
- அ. முத்துச்சாமி பிள்ளை 1843 இல் வெளியிட்ட "வீரமாமுனிவர் சரித்திரமும், பாடல் தொகுதிகள் முதலியனவும்" என்ற நூலின் பிரதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு,  ஆ.பொன்னுசாமி நாடாராலும், த. பொ. கை. அளகிரிசாமி பிள்ளையாலும் மறுபதிப்பாக வெளியிடப்பட்ட அந்நூல்  சிறப்புற அமைந்துள்ளதற்குப் பாராட்டுகள் கூறப்பட்டுள்ளது.
- சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பி. ஜெ. தாமஸ் ஆங்கிலத்தில் எழுதிய நூலை, பொருளாதார ஆய்வாளர் பா. நடராசன் தமிழில்  மொழிபெயர்த்து 'வேளாண்மைக்கடன்' என்ற தலைப்பில்  வெளியிட்ட நூல் காலத்தினால் செய்த பேருதவி எனப் பாராட்டப் பட்டுள்ளது.
- சிங்கப்பூர் அன்பு நிலையத்தார் வெளியிட்ட சுவாமி சுத்தானந்த பாரதியாரின் "பைந்தமிழ்ச்சோலை" சிறந்த தமிழ்ப்பணி என்று போற்றப்பட்டுள்ளது.

7.  செய்திகள்
[மற்றும்  இம்மாதத்தில் சங்கக் கல்லூரிக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களின் பெயர், வழங்கிய தொகை விவரம் குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, July 3, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 10

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 10
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 10

_________________________________________________________

1.  பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[முன்னர் தமிழ்ப் பொழிலில் பரணர் குறித்து ஆய்வுக் கட்டுரையை  எழுதியவர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை. இக்கட்டுரையில், சென்னைப் பல்கலைக் கழக விரிவுரையாளரும், பன்மொழி அறிஞருமான வே. வேங்கடராஜுலு ரெட்டியார் எழுதிய 'பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்' மீது நூல் மதிப்புரை  எழுதியுள்ளார். 
'கலம் தொடா மகளிர்' குறித்த ஆய்வு செய்வோர், 'ஆகில்கலங்கழீ இயற்றும்' மற்றும்   'தொடுகலம்' குறித்து இக்கட்டுரை கூறும் கருத்துக்களில் ஆர்வம் கொண்டிருப்பர்.  இப்பகுதியில், பண்டைய நூல்களைப் பிழையின்றிப் பொருள் கொள்ள உதவிடும்  நோக்கில்,   பழைய நூல்களைப் பதிப்பிக்கும் செயல்பற்றி அறிய வேண்டிய செய்திகளைத்தருகிறார். இக்கட்டுரை ... தொடரும்]

2. வரருசி கதை (தொடர்ச்சி ...)
R. பொன்னுசாமி பிள்ளை
[வடமொழிப் புலவர் பாணினி முனிவர் எழுதிய 'அஷ்டாத்யாயீ' என்ற இலக்கண நூலுக்கு 'வார்த்திகம்' என்ற உரைநூலை எழுதியவர் வரருசி என்பவர். வரருசியாரின் வாழ்க்கை வரலாறு 'கதாசரித்சாகரம்' என்ற கதைநூலில் இடம்பெற்றுள்ளது. அக்கதையைத் தழுவி வரருசியாரின்  கதையை பொன்னுசாமி பிள்ளை எழுதியுள்ளார்.
இப்பகுதியில்; தன்னைக் கொல்ல விரும்பிய மன்னனிடம் இருந்து தப்பிக்க மறைந்து வாழ்ந்த வரருசியார் தக்கதருணத்தில் வெளிப்பட்டு, துன்பத்தில் இருந்த மன்னனுக்கு உதவி செய்து விடுதலை பெறுகிறார். தனது மனைவியுடன் துறவறம் மேற்கொண்டு கானகம் செல்கிறார்.  மன்னனும் அவனது மைந்தனும் இறந்த பிறகு அமைச்சர் சந்திரகுப்தனை அரசனாக்கி, சாணக்கியரைத் தனது அமைச்சர் பதவியில் இருத்திவிட்டு அவரும் துறவறம் மேற்கொள்கிறார்.  இக்கதை நிறைவுற்றது]

3. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்   (தொடர்ச்சி ...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  அத்துடன், நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்களின்  தொல்காப்பிய உரையை ஆதரித்து   நாராயணையங்கார் கொடுத்த மறுமொழியையும் இதில் மறுக்கிறார்.  அதற்கான  மறுப்பின் தொடர்ச்சி ...]

4. கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[4 ஆம்  அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதி, பத்தளவை,   வழியளவை, மேனாட்டு அந்நுவயம், அந்நுவய விதிகள், ஐயமத்தி, ஈயாமத்தி  ஆகிய கருத்தாக்கங்களை விளக்குகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

5. வள்ளல்  ஆய் அண்டிரன் - ஒரு சிறு நாடகம்
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[தமிழ்ப்பொழிலில் தமிழகமன்னர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை நாடக வடிவில் வழங்கிய சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்களால், இம்முறை வள்ளல்  ஆய் அண்டிரன் வாழ்க்கை வரலாறு  நாடக வடிவில் வழங்கப்படுகிறது.
இப்பகுதியில், கொங்கு மன்னன் தனது நாட்டின் மீது போர் தொடுக்கும் திட்டத்தை  ஒற்றன் மூலம் அறிந்து அமைச்சருடனும் படைத் தலைவனுடனும் ஆய் அண்டிரன் திட்டம் வகுக்கும் காட்சியும், வேட்டைக்குச்  செல்லும் ஆய் அண்டிரன் பொதிகைவேளின் மகள் பொற்பூங்கோதையைச் சந்திக்கும் காட்சியும்  இடம் பெறுகிறது.  இந்நாடகத்தின் காட்சிகள் தொடரும்...]

6. தமிழ்ச்செய்தி
L. உலகநாத பிள்ளை
[சங்கத்தின் ஆண்டுவிழாவிற்குத் தலைமையேற்ற L. உலகநாத பிள்ளை  அவர்களின் தலைமையுரை. தமிழ் என்னும் சொல் திராவிடம் > திரமிளம் என்று திரிந்த சொல்லன்று.  தமிழ் மொழியை உருவாக்கியவர் அகத்தியரும் அல்லர். வேத காலம் என ஆய்வு நூல்கள் காட்டும் காலத்திற்கும் முற்பட்டது தமிழ், தமிழ்ச்சங்கங்களின் காலங்கள் என வரையறுக்கப்பட்ட காலங்கள், எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றிற்கு இலக்கணம் கண்ட தொல்காப்பியத்தின் சிறப்பு, அதிலும் அகம் புறம் என்று வகுத்த பொருளதிகாரத்தின் சிறப்பு, சங்க இலக்கியங்களின் சிறப்பு, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழின் சிறப்பு எனத் தமிழின் சிறப்புகளை மாணவர்களுக்கு உரைக்கிறார்  உலகநாத பிள்ளை .
இந்தியாவிற்கே வந்து இந்திய மன்னராக முடிசூட்டிக் கொண்ட முதல் ஆங்கில மன்னர், ஐந்தாவது ஜார்ஜ் மன்னர் மறைந்தார். அன்னாருக்கு  இரங்கலும், அவருக்குப் பின்னர் மன்னரான எட்டாம் எட்வர்ட் மன்னருக்கு வாழ்த்துக்களும் கூறப்பட்டுள்ளது.
மற்றும்  இம்மாதத்தில் சங்கக் கல்லூரிக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களின் பெயர், வழங்கிய தொகை விவரம் குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, July 2, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 9

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 9
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 9

_________________________________________________________

1. வரருசி கதை (தொடர்ச்சி ...)
R. பொன்னுசாமி பிள்ளை
[வடமொழிப் புலவர் பாணினி முனிவர் எழுதிய 'அஷ்டாத்யாயீ' என்ற இலக்கண நூலுக்கு 'வார்த்திகம்' என்ற உரைநூலை எழுதியவர் வரருசி என்பவர். வரருசியாரின் வாழ்க்கை வரலாறு 'கதாசரித்சாகரம்' என்ற கதைநூலில் இடம்பெற்றுள்ளது. அக்கதையைத் தழுவி வரருசியாரின்  கதையை பொன்னுசாமி பிள்ளை எழுதியுள்ளார்.
இப்பகுதியில்; வரருசியார்  இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அவர் மனைவி உடன்கட்டை ஏற முயல, துறவி ஒருவரால் அம்முயற்சி  தடுக்கப்படுகிறது]

2. நெடுந் தொகைக் குறும்பொருள் (தொடர்ச்சி ...)
S. மாணிக்கவாசக முதலியார்
[சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களுள் நெடுந்தொகை என்றும் கூறப்படும் அகநானூற்றுப் பாடல்களுக்கு சிற்றுரை வரைகிறார் மாணிக்கவாசக முதலியார்.
தொடர் கட்டுரையின் இப்பகுதியில்,  7  ஆம் பாடலுக்கு தனது சிற்றுரையை  எழுதியுள்ளார் மாணிக்கவாசக முதலியார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

3. அஜந்தாவும் குடைவரைக் கோயில்களும் - மொழிபெயர்ப்பு (தொடர்ச்சி ...)
சி. கு. நாராயணசாமி முதலியார்
[அவுரங்கபாத் அருகிலுள்ள 'எல்லோரா'வில், 'இந்தியாத்திரிமலை' யின் சரிவில் கிழக்கு மேற்காக அமைந்த 29 குடைவரைக் கோயில்களைப் பற்றிய ஒரு கட்டுரையின் மொழிபெயர்ப்பு. எல்லோரா 10 ஆம் நூற்றாண்டிலிருந்தே புகழ்பெற்ற இறைவழிபாட்டுத் தலமாக இருந்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அஜந்தா குடைவரைகளில் அருமை, பெருமை, அழகு, சிறப்பு ஆகியவற்றை விவரிக்கிறது இக்கட்டுரை.
கட்டுரையின் இப்பகுதி; 29 குடைவரை கோவில்களையும் உருவாக்கப்பட்ட காலத்தின் அடிப்படையில் 4 காலத் தொகுதிகளில் வகைப்படுத்துகிறது.  கி.மு. 200 களில் துவங்கி கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வரை, ஒவ்வொரு காலகட்டத்திலும் குகை அமைக்க உதவியவர்கள், குகையின் சிறப்பு, அவற்றில் அமைந்துள்ள சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் குறித்த விளக்கம் தரப்படுகிறது.  இதில் மூன்றாம் தொகுதி குகைகள் 2 ஆம் புலிகேசி காலத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
அஜந்தா குகைகள் ஓவியத்திற்காகச் சிறப்பு பெற்றவை. அங்கு சுவர்களில் பூசிய சாந்துக்கலவை தயாரிக்கப்பட்ட முறை, நீண்டகாலம் நிலைத்திருக்கும் வண்ணங்கள் உருவாக்கப்பட்ட முறை, ஓவியங்கள் வரையப்பட்டு வண்ணம் தீட்டப்பட்ட விதம், ஓவியங்களில் பிறநாட்டு ஓவியக்கலையின், குறிப்பாக காந்தாரக் கலையின்  தாக்கம், புத்தமதத்தின்  தொன்மக்கதைகள்  எவையெவை அந்த ஓவியங்களில் இடம்பெற்றன போன்ற செய்திகள் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளன]

4. கலித்தொகையும் நச்சினார்க்கினியரும்   (தொடர்ச்சி...)
அ. வரத நஞ்சைய பிள்ளை
[கற்றறிந்தோர் ஏத்தும் கலி என்று புகழப்படும்  கலித்தொகையின்  சிறப்பைப் போற்றுகிறது  இக்கட்டுரை.  கலித்தொகையில் இடம் பெறும் உள்ளுறை உவமங்கள் மற்றும் மெய்ப்பாடுகள் குறித்து முன்னர் இலக்கிய நயம் பாராட்டப் பட்டது.
கட்டுரையின் இப்பகுதியில்; தொல்காப்பிய இலக்கணம் கருப்பொருளை சிறப்பிப்பதாகக் குறிக்கும் "இறைச்சிப் பொருள்" (கருப்பொருட்கு நேயம்) கலித்தொகை செய்யுட்களில் விரவியிருக்கும்  இடங்களை  நச்சினார்க்கினியர் விளக்கும் திறம் குறித்து ஆராய்கிறார் வரத நஞ்சைய பிள்ளை]

5.பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[முன்னர் தமிழ்ப் பொழிலில் பரணர் குறித்து ஆய்வுக் கட்டுரையை  எழுதியவர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை. இக்கட்டுரையில், சென்னைப் பல்கலைக் கழக விரிவுரையாளரும், பன்மொழி அறிஞருமான வே. வேங்கடராஜுலு ரெட்டியார் எழுதிய 'பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்' மீது நூல் மதிப்புரை  எழுதியுள்ளார்.  ஒவ்வொரு நூலாசிரியருக்கும் இவரைப் போல நூல் மதிப்புரை வழங்குபவர் ஒருவர் கிடைத்தால் அது ஒரு பெரும்பேறு என்று போற்றத்தக்க வகையில் அமைந்துள்ள இக்கட்டுரை ... தொடரும்]

6. வள்ளல்  ஆய் அண்டிரன் - ஒரு சிறு நாடகம்
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[தமிழ்ப்பொழிலில் தமிழகமன்னர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை நாடக வடிவில் வழங்கிய சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்களால் இம்முறை வள்ளல்  ஆய் அண்டிரன் வாழ்க்கை வரலாறு  நாடக வடிவில் வழங்கப்படுகிறது. இப்பகுதியில், அண்டிரன் மீது கொங்கு மன்னர் போர் தொடுக்கத் திட்டமிடும் காட்சி இடம் பெறுகிறது.  இந்நாடகத்தின் காட்சிகள் தொடரும்...]

7. செய்திகள்
இதழாசிரியர்
[லூதர் பர்பேங்க்* (Luther Burbank)என்ற அமெரிக்க தோட்டக்கலை அறிஞரின் வாழ்க்கை வரலாற்றை  ஒரு நூலாகத் தமிழில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டது. அந்நூலுக்கு  மதிப்புரை  வழங்கப்பட்டுள்ளது.
மற்றும்  இம்மாதத்தில் சங்கக் கல்லூரிக்கும், மருத்துவ சாலைக்கும்  நன்கொடை வழங்கிய அன்பர்களின் பெயர், வழங்கிய தொகை விவரம் குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது]

-------------------------------------------------------------------------------

லூதர் பர்பேங்க்* குறித்துத்  திரட்டப்பட்ட மேலதிகத் தகவல்:
லூதர் பர்பேங்க்  - https://en.wikipedia.org/wiki/Luther_Burbank
இவர் 'Autobiography of a Yogi' என்ற நூலை எழுதிய புகழ் பெற்ற பரமஹம்ச யோகானந்தரின் நண்பர். யோகி எழுதிய இந்த  நூல் லூதர் பர்பேங்கிற்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்நூலில்...
Chapter 38 – Luther Burbank, A Saint Amidst the Roses
https://en.wikisource.org/wiki/Autobiography_of_a_Yogi/Chapter_38

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Friday, July 1, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 8

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 8
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 8

_________________________________________________________

1. சிலசொற்களின் பொருள்  (தொடர்ச்சி ...)
வே. வேங்கடராசலு ரெட்டியார்
[தமிழகராதியில் பொருள் தரப்பட்டுள்ள தொண்டு, பண்டு, பஞ்சு, முற்றும், வடி  ஆகிய சொற்களின் பொருள் விரிவாக விளக்கப்படுகிறது]

2. கன்னட நாட்டு ஹோய்சள அரசர்களின் சிற்பச் சிறப்புகள்  - ஹள பீட் ஹோய்சளேச்சுரர் ஆலயம்   (தொடர்ச்சி ...)
சி.கு. நாராயணசாமி முதலியார்
[தொடர் கட்டுரையின் இப்பகுதியில், 'ஹள பீட் ஹோய்சளேச்சுரர் ஆலயம்  முகமதியர்கள் படையெடுப்பினால் கொள்ளையடிக்கப்பட்டுச் சீர்குலைந்தது; இவ்வூரில் இருந்த  720 ஆலயங்களில் எஞ்சியிருப்பவை இக்கோவிலும்,  ஆதிநாதேசுரர், சாந்தீசுரர், மற்றும் பார்சுவநாதேசுரர் ஆலயங்கள் மட்டுமே என்ற தகவலும்;  ஆலயத்தின் சிற்பிகள் குறித்தும்,  மேலைநாட்டுச் சிற்ப அறிஞர் கோவிலின் சிற்பங்கள் குறித்துக் கூறிய கருத்துக்களும்; இக்கோவிலின் சிற்பக்கலையின் சிறப்பிற்குக் காரணம் ஹளபீட் பகுதியின் 'புஷ்பகிரி' என்ற மலையில் கிடைக்கும் "பலபக்கல்கள்" என்ற மாக்கற்களே காரணம் என்ற தகவல்களும் கொடுக்கப் பட்டுள்ளன]

3. வரருசி கதை (தொடர்ச்சி ...)
R. பொன்னுசாமி பிள்ளை
[வடமொழிப் புலவர் பாணினி முனிவர் எழுதிய 'அஷ்டாத்யாயீ' என்ற இலக்கண நூலுக்கு 'வார்த்திகம்' என்ற உரைநூலை எழுதியவர் வரருசி என்பவர். வரருசியாரின் வாழ்க்கை வரலாறு 'கதாசரித்சாகரம்' என்ற கதைநூலில் இடம்பெற்றுள்ளது. அக்கதையைத் தழுவி வரருசியாரின்  கதையை பொன்னுசாமி பிள்ளை எழுதியுள்ளார்.
இப்பகுதியில்; வரருசியார்  அமைச்சர் பதவி ஏற்று நடத்திய செயல்கள் குறிப்பிடப்படுகிறது, கதையின் போக்கு பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை போன்று நம்ப  இயலாத புனைவுகள் பல நிரம்பியவை]

4. நயன நூல் நவநீதம் (தொடர்ச்சி ...)
S. அமிர்தலிங்கம் பிள்ளை
[ஐம்பொறிகளில் முக்கியத்துவம் வாய்ந்த கண் குறித்த கட்டுரை: கண்ணின் அமைப்பு, தொழில் என உயிரியல் அடிப்படை கொண்ட விளக்கங்களுடன் விழிகள் குறித்த ஒரு  விரிவான விளக்கக் கட்டுரை.
கட்டுரையின் இப்பகுதியிலும்; கண் நோய்கள் குறித்த தகவல் தொடர்கிறது. இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

5. முல்லைத்தேர் - ஒரு சிறு நாடகம்
கு. நா. சுந்தரேசன்
[பாரி முல்லைக்கு வழங்கிய தேரை, கள்வர் இருவர் கவர முற்படும் செயலை பாரி முறியடிக்கும்  காட்சி]

6. தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி, கலைமகள் கல்லூரி  ஆண்டுவிழாக்கள்
சிவ. குப்புசாமி
[அக்டோபர் 1935 இல் இருநாட்கள் நடைபெற்ற கல்லூரி ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன]

7. செய்திகள்
இதழாசிரியர்
[1935 ஆம் ஆண்டின் திருக்குறள் நாட்குறிப்புக்கு மதிப்புரை  மற்றும்  இம்மாதத்தில் சங்கக் கல்லூரிக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களின் பெயர் , வழங்கிய தொகை விவரம் குறிப்பு]


________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]