Thursday, September 22, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 7

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 7
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 7

_________________________________________________________

1.  திருக்குறணுதலிய நெறிமுறை (தொடர்ச்சி ...)
K. சோமசுந்தரம் பிள்ளை
[திருக்குறள் ஒழுக்க நெறியையும், அன்பையும் அறத்தையும் முதன்மைப்படுத்துகிறது என்பதை எடுத்துக் காட்டும் நோக்கில் சோமசுந்தரம் பிள்ளை    'இருமனப் பெண்டிர், பெண்வழிச்சேறல், கள், கவறுகள், இரவு, இரவச்சம்' ஆகியன  நல்வாழ்விற்குத்  தரும் இடர்களைக் குறித்து எழுதினார்.   இத்தொடர் கட்டுரையின் இப்பகுதியில்;  வாய்மை, ஈகை, உடல்நலம், பிணி, மருந்து ஆகியன குறித்து  வள்ளுவர் அறிவுறுத்தியவை விளக்கப்படுகிறது.  இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

2. திருவிளையாடற் புராண வாராய்ச்சி  (தொடர்ச்சி ...)
E.R. நரசிம்ம ஐயங்கார்
[பெரும் பற்றப்புலியூர் நம்பியார் மற்றும் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராண நூல்கள் அகச்சான்றுகள் இல்லாத நூல்களென்பதும்,  அதனால் காலவரையறுக்க உதவும் குறிப்புகளற்ற நூல்களென்பதும் அறிஞர் முடிபு.   இது தவறான கருத்து என இக்கட்டுரையின் வழி  காட்ட விரும்புவது  நரசிம்ம ஐயங்கார் அவர்களின் நோக்கம்.
பெரும் பற்றப்புலியூர் நம்பியார் மற்றும் பரஞ்சோதி முனிவர் இருவருமே 13 ஆம் நூற்றாண்டினர்  என அவர்கள்  தனது  பாடலில் கையாண்ட  குறிப்புகள் காட்டுவதாகவும் கூறுகிறார். பெரும் பற்றப்புலியூர் நம்பியார் நூலில் சேக்கிழார் மற்றும் பரஞ்சோதி முனிவர் கருத்துகள் இடம் பெறுவதாகவும் கூறுகிறார்]

3. இயைபு நூல்  (தொடர்ச்சி ...)
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
[பொருளின் அமைப்பு   என்ற தலைப்பில் கட்டுரை எழுதி வந்த   அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார் அவர்கள், 'இயைபுநூல்' என்ற  தலைப்பில் தொடர்கிறார்.
2. இயன் மாற்றமும் நிறையும்  - என்ற அத்தியாயத்தில்: பொருண்மையும் நிறையும், இயன்மாற்றத்தில் நிறைமாற்றம், நிலவியம், இயன் மாற்றத்திற்குக் காரணம், இயன் மாற்றத்தின் சிறப்பியல்புகள்  ஆகியவற்றைக் குறித்து விளக்கம் தருகிறார், இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

4. கருவிலே வாய்த்த திரு
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[மக்களின் செயல்பாடுகள் பலவகை; தாமே திட்டமிட்டு அடுத்தவர் உதவியின்றி செயல்படுத்துதல், அடுத்தவர் உதவியுடன் செயலாற்றல், பிறர் ஏவி வழி காட்டிய பின்னர் முடித்தல் என வகைப்படுத்தலாம்.  தாமே கூர்த்த மதியுடன் திட்டமிட்டு செயல்படுத்திக் காட்டுபவரின் திறமையின் சிறப்பியல்பினை  அவருக்கு அது 'கருவிலேயே வாய்க்கப்பட்ட திரு'  எனலாம் என்பது ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களது கருத்து. இக்கருத்தை விளக்க, பறவைகளிடம் இயற்கையில் அமையப் பெற்ற நுண்ணறிவுத் திறன் கொண்ட செயல்களைச் சுட்டிக்  காட்டி விளக்குகிறார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை ]

5. காலவாராய்ச்சி
ம.வி. இராகவன்
[III. பண்டைப் பெருமக்கள் வாழ்ந்த காலவாராய்ச்சி செய்வது குறித்து விளக்குவது கட்டுரை  ஆசிரியரின் நோக்கம்.  தமிழக இலக்கியங்கள் காலவாராய்ச்சி செய்வதற்கு போதிய சான்றுகள் தருவதில்லை என்பது இவர் கருத்து.  இக்கோணத்தில் தமிழ்ப்பொழிலில் முன்னர்  வெளியான, E.R. நரசிம்மையங்கார் அவர்களின் "உரையாசிரியர் ஒருவர், பேராசிரியர் பலர்" என்ற தொல்காப்பியம் தொடர்பான கட்டுரையை மீள்பார்வை செய்து மதிப்புரை அளிக்கிறார். ஒன்றை ஆராய முற்படுபவர், முதலில் அந்தக்  கோட்பாட்டை  எடுத்துக்காட்டு கொடுத்து விளக்கிய பிறகு, தனது கருதுகோளை சான்றுகளுடன் வைத்துச் சாதிப்பதே ஆய்விற்குரிய முறை, தனது விருப்பத்திற்கு முதன்மை கொடுப்பது சார்புநிலையில் அமைந்துவிடும்  என விளக்குகிறார். சீரிய ஆய்வுநெறிகளைப் பின்பற்றாத   நரசிம்மையங்கார் அவர்களின் ஆய்வு நேர்மையற்ற வகையில் அமைந்துள்ளதாகக் கருத்தும் தெரிவிக்கிறார். 
இக்கட்டுரையில் தனது கோணத்தை விளக்க மேலும் பல எடுத்துக் காட்டுகளைத் தருகின்றார்  ம.வி. இராகவன்.  இது ஒரு தொடர் கட்டுரை]

6. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Tuesday, September 13, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 6

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 6
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 6

_________________________________________________________

1.  திருவிளையாடற் புராண வாராய்ச்சி
E.R. நரசிம்ம ஐயங்கார்
[பெரும் பற்றப்புலியூர் நம்பியார் மற்றும் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராண நூல்கள் அகச்சான்றுகள் இல்லாத நூல்களென்பதும்,  அதனால் காலவரையறுக்க உதவவும் குறிப்புகளற்ற நூல்களென்பதும் அறிஞர் முடிபு.   இது தவறான கருத்து என இக்கட்டுரையின் வழி  காட்ட விரும்புவது  நரசிம்ம ஐயங்கார் அவர்களின் நோக்கம்.
பெரும் பற்றப்புலியூர் நம்பியார் நூல் உவேசா  அவர்களால் பதிப்பிக்கப்பட்டது.  இதனை எழுதிய  பெரும் பற்றப்புலியூர் நம்பியார் 13 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் , 14  ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் வாழ்ந்தவர் என்பதைக் கல்வெட்டுத் தகவல் மூலம் காட்டுகிறார் கட்டுரை ஆசிரியர். பரஞ்சோதி முனிவர் 16-17ஆம் நூற்றாண்டினர்  என அவர் தனது  பாடலில் கையாண்ட இலக்கணக் குறிப்புகள் காட்டுவதாகவும் கூறுகிறார். இது ஒரு தொடர் கட்டுரை]

2. திருக்குறணுதலிய நெறிமுறை (தொடர்ச்சி ...)
K. சோமசுந்தரம் பிள்ளை
[திருக்குறள் ஒழுக்க நெறியையும், அன்பையும் அறத்தையும் முதன்மைப்படுத்துகிறது என்பதை எடுத்துக் காட்டும் நோக்கில் சோமசுந்தரம் பிள்ளை எழுதும் தொடர் கட்டுரையின் இப்பகுதியில்;  'தெரிந்துசெயல்வகை'  என   வள்ளுவர் அறிவுறுத்தியவை விளக்கப்படுகிறது.  இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

3. மகாபலிபுரத்தின் பண்டையப் பெயர்
C.M. இராமச்சந்திர செட்டியார்
பல்லவர் ஆட்சிக்கு முன்னர் 'மகாபலிபுரம்' ஏற்பட்டதென்றும், அப்பொழுது அதன்  பெயர் 'தலசயனம்' என்று H. ஹீராஸ்  தனது நூலில் எழுதியுள்ளார்.  பின்னர் மாமல்லன்   நரசிம்மவர்மனுக்கு பிறகு அவ்வூருக்கு  'கடல்மல்லை தலசயனம்' என்று பெயர் ஏற்பட்டது; அதாவது,  'தலசயனம் என்ற பெயர் பெற்ற  கடல் அருகில்  மலை' என்பது ஹீராஸ் அவர்கள் தரும் விளக்கம். இது தவறு.  மல்லை என்பதற்கு மலை என்ற பொருள் கிடையாது. 'கடற்கரையில் உள்ள மலையில் அமைந்துள்ள  தலசயனம் என்னும் கோயில் ' என்பதுதான் அதன் பொருள்.

மேலும் ஊரின் பெயரும் அதனைத் தொடர்ந்து கோயிலின் பெயரும் இணைத்து வழங்கப்படுவதுதான் வழக்கம், 'தஞ்சை ராஜராஜேஸ்வரம்' என்பது போல, 'கச்சி ராஜசிம்மேஸ்வரம்'  என்பது போல அது 'மல்லை தலசயனம்' என்று அமையும் என விளக்குகிறார்  இராமச்சந்திர செட்டியார்.  மேலும், 'மல்லை ஜலசயனம்' என்ற கடல் நீர் அருகிருந்த  ஆலயம் ஒன்றினை  கல்வெட்டுகள்  குறிக்கின்றன. இது நிலத்தில் இருப்பதால் இக்கோயில் 'தலசயனம்' ஆகும். இத்தலசயனம் குறித்து பெரிய திருமொழியில் இரண்டு பதிகங்களைக் காணலாம்.  மாமல்லைக்கு பண்டைய பெயர் இருந்திருந்தாலும், அது தலசயனம் என இருந்திருக்க வாய்ப்பில்லை  என விளக்குகிறார் அவர்.

4.  காலவாராய்ச்சி
ம.வி. இராகவன்
[பண்டைப் பெருமக்கள் வாழ்ந்த காலவாராய்ச்சி செய்வது குறித்து விளக்குவது கட்டுரை  ஆசிரியரின் நோக்கம்.  தமிழக இலக்கியங்கள் காலவாராய்ச்சி செய்வதற்கு போதிய சான்றுகள் தருவதில்லை என்பது இவர் கருத்து.  இக்கோணத்தில் தமிழ்ப்பொழிலில் முன்னர்  வெளியான, E.R. நரசிம்மையங்கார் அவர்களின் "உரையாசிரியர் ஒருவர், பேராசிரியர் பலர்" என்ற தொல்காப்பியம் தொடர்பான கட்டுரையை மீள்பார்வை செய்து மதிப்புரை அளிக்கிறார். ஒன்றை ஆராய முற்படுபவர், முதலில் அந்தக்  கோட்பாட்டை  எடுத்துக்காட்டு கொடுத்து விளக்கிய பிறகு, தனது கருதுகோளை சான்றுகளுடன் வைத்துச் சாதிப்பதே ஆய்விற்குரிய முறை, தனது விருப்பத்திற்கு முதன்மை கொடுப்பது சார்புநிலையில் அமைந்துவிடும்  என விளக்குகிறார். சீரிய ஆய்வுநெறிகளைப் பின்பற்றாத   நரசிம்மையங்கார் அவர்களின் ஆய்வு நேர்மையற்ற வகையில் அமைந்துள்ளதாகக் கருத்தும் தெரிவிக்கிறார்.  இது ஒரு தொடர் கட்டுரை]

5. தமிழ்ச்செய்திகள்
இதழாசிரியர்
[1936- ஆம் ஆண்டின் திருப்பனந்தாள் தமிழ்ப்பரிசு பெறுபவர் சங்குப்புலவர் அவர்கள்; சென்னை தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த  'தமிழ்க் கலைச்சொற்கள்  மாநாடு' நிகழ்வு குறித்த தகவல்கள்  இடம் பெறுகின்றன]

6. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Friday, September 2, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 5

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 5
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 5

_________________________________________________________

1. பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்  (தொடர்ச்சி ...)
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[முன்னர் தமிழ்ப் பொழிலில் பரணர் குறித்து ஆய்வுக் கட்டுரையை  எழுதியவர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை. இக்கட்டுரையில், சென்னைப் பல்கலைக் கழக விரிவுரையாளரும், பன்மொழி அறிஞருமான வே. வேங்கடராஜுலு ரெட்டியார் எழுதிய 'பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்' மீது நூல் மதிப்புரை  எழுதியுள்ளார்.]

2. செருத்துணையாரும் புகழ்த்துணையாரும் அவதரித்த திருப்பதிகள்  (தொடர்ச்சி ...)
T.V. சதாசிவப்பண்டாரத்தார்
[செருத்துணையாரைத் தொடர்ந்து வரும் இப்பகுதி புகழ்த்துணை நாயன்மார் குறித்த பகுதி;
திருத்தொண்டர் திருவந்தாதியும், பெரியபுராணமும் புகழ்த்துணை நாயன்மார் பிறந்ததாகக் குறிப்பிடுவது செருவிலிபுத்தூர் என்ற ஊர்தனை.  ஆயினும், கொற்றங்குடி உமாபதிசிவனார் தான் இயற்றிய திருத்தொண்டர் புராண சாரத்தில்  அவ்வூரை 'அழகார் திருப்பத்தூர்' என்று காட்டுகிறார்.  உமாபதிசிவனாரும்  சுந்தரமூர்த்தி நாயனாரும்  இவ்வாறாகக்  குறிப்பிடுவது  அரிசிற்களாப்புத்தூர் பதிகத்தின் அடியொட்டி என்பது புலப்படுகிறது. சம்பந்தரும் தம் பதிகத்தில் இவ்வூரைக்  குறிப்பிடுவார்.

இக்காலத்தில்  செருவிலிபுத்தூர் என்ற ஊர் காணப்பெறவில்லை.   அழகார் திருப்புத்தூர் இந்நாளில் அழகாத்திரிப்புத்தூர் எனவும் அழகாப்புத்தூர் எனவும் திரித்து அழைக்கப்படுகிறது. இத்தலம் கும்பகோணத்திலிருந்து குடவாயில் செல்லும் பெருவழியில் அரிசில் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது   எனக் காட்டுகிறார் சதாசிவப்பண்டாரத்தார். ]

3. திருக்குறணுதலிய நெறிமுறை (தொடர்ச்சி ...)
K. சோமசுந்தரம் பிள்ளை
[திருக்குறள் ஒழுக்க நெறியையும், அன்பையும் அறத்தையும் முதன்மைப்படுத்துகிறது என்பதை எடுத்துக் காட்டும் நோக்கில் சோமசுந்தரம் பிள்ளை எழுதும் தொடர் கட்டுரையின் இப்பகுதியில்;  'சினம் காக்க'  என   வள்ளுவர் அறிவுறுத்தியவை விளக்கப்படுகிறது.  இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

4. நெடுந் தொகைக் குறும்பொருள் (தொடர்ச்சி ...)
முத்து சு. மாணிக்கவாசக முதலியார்
[சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களுள் நெடுந்தொகை என்றும் கூறப்படும் அகநானூற்றுப் பாடல்களுக்கு சிற்றுரை வரைகிறார் மாணிக்கவாசக முதலியார்.

தொடர் கட்டுரையின் இப்பகுதியில்,  'கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் புழுகின்' எனத் துவங்கும் 9  ஆம் பாடலுக்கு (பாலை; வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது)  தனது சிற்றுரையை  எழுதியுள்ளார் மாணிக்கவாசக முதலியார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

5. புத்தக மதிப்புரை
இதழாசிரியர்
உவேசா அவர்களின் 'புதியதும் பழையதும்',  'கனம் கிருஷ்ணையர்', கோபாலகிருஷ்ண பாரதியார்'  ஆகிய  மூன்று நூல்களும்;
R. V. இராமசுவாமி எழுதிய 'சிந்தனைக் களஞ்சியம்' என்ற கட்டுரைத் தொகுதியும்;
ஆ.  மாரிமுத்து அவர்களின் புத்தரின் அறவுரைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலான 'சமயங்களின் சக்கரச் சுழற்சி' என்ற நூலும் பொழிலின் வாசகர்களுக்கு  இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

6. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]