Wednesday, June 29, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 6

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 6
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 6

_________________________________________________________

1. நெடுந் தொகைக் குறும்பொருள் (தொடர்ச்சி ...)
S. மாணிக்கவாசக முதலியார்
சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களுள் நெடுந்தொகை என்றும் கூறப்படும் அகநானூற்றுப் பாடல்களுக்கு சிற்றுரை வரைகிறார் மாணிக்கவாசக முதலியார். தொடர் கட்டுரையின் இப்பகுதியில்,  5  ஆம் பாடலுக்கு தனது சிற்றுரையை  எழுதியுள்ளார் மாணிக்கவாசக முதலியார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

2. திருக்குறணுதலிய நெறிமுறை (தொடர்ச்சி ...)
K. சோமசுந்தரம் பிள்ளை
[திருக்குறள் ஒழுக்க நெறியையும், அன்பையும் அறத்தையும் முதன்மைப்படுத்துகிறது என்பதை எடுத்துக் காட்டும் நோக்கில் சோமசுந்தரம் பிள்ளை எழுதும் தொடர் கட்டுரையின் இப்பகுதியில்;  இனியவை கூறல் குறித்தும், தீய எண்ணங்களை வெளிப்படுத்தும்  தீமை பயப்பனவாகிய தீய சொற்களை அறவே ஒழிப்பது இன்றியமையாதது, என  வள்ளுவர் கூறியவை  விளக்கப்படுகிறது.  இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

3. நயன நூல் நவநீதம் (தொடர்ச்சி ...)
S. அமிர்தலிங்கம் பிள்ளை
[ஐம்பொறிகளில் முக்கியத்துவம் வாய்ந்த கண் குறித்த கட்டுரை: கண்ணின் அமைப்பு, தொழில் என உயிரியல் அடிப்படை கொண்ட விளக்கங்களுடன் விழிகள் குறித்த ஒரு  விரிவான விளக்கக் கட்டுரை.
கட்டுரையின் இப்பகுதியில்; கண் நோய்கள் குறித்த தகவல் தொடர்கிறது. இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

4. தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பாராய்ச்சி (தொடர்ச்சி ...)
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது ம. நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் ' தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும்' என்ற  விமர்சனம் எழுதி வருகிறார்.  ஆனால், இதற்கிடையில் அந்த நூல் சென்னை பல்கலைக்கழத்தின் தமிழ் வித்துவான் தேர்வுக்குக்குரிய பாடநூலாக அறிவிக்கப்பட்டு விட்டமையால் , ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களும், மாணவர்கள்  சாத்திரியார் நூலை அவ்வாறே ஏற்றுக் கொள்ளாமல் ஆய்ந்து படித்து உண்மையை அறிய  உதவும் நோக்கில் தானும் ஒரு  கட்டுரை எழுதி வருகிறார். கட்டுரையின் இப்பகுதியில் தொல்காப்பியச்  சூத்திரங்களுக்கான  விளக்கவுரைகளை ஆராய்வதைத் தொடர்கிறார்  ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை]

5. உரையாசிரியர் ஒருவர், பேராசிரியர் பலர்
E.R. நரசிம்ம அய்யங்கார்
[தொடர்ந்து கொண்டிருக்கும் தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பாராய்ச்சி விவாதத்தை ஒட்டி, நரசிம்ம அய்யங்கார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்களின் சிறப்புக்கள் குறித்து விளக்குகிறார். இப்பகுதியில் 12 ஆம் நூற்றாண்டினரான குணவீர பண்டிதர் இயற்றிய இலக்கண நூலான  நேமிநாதம், நேமிநாதம் நூலின் பெருமை, நேமிநாத உரையாசிரியர் பெருமை ஆகியன  குறித்தும் விரிவாக உரைக்கிறார்.  இக்கட்டுரை தொடர்கிறது]

6. வரருசி கதை (தொடர்ச்சி ...)
R. பொன்னுசாமி பிள்ளை
வடமொழிப் புலவர் பாணினி முனிவர் எழுதிய 'அஷ்டாத்யாயீ' என்ற இலக்கண நூலுக்கு 'வார்த்திகம்' என்ற உரைநூலை எழுதியவர் வரருசி என்பவர். வரருசியாரின் வாழ்க்கை வரலாறு 'கதாசரித்சாகரம்' என்ற கதைநூலில் இடம்பெற்றுள்ளது. அக்கதையைத் தழுவி வரருசியாரின்  கதையை பொன்னுசாமி பிள்ளை எழுதியுள்ளார்.
இப்பகுதியில்; சிவனை நோக்கி அருந்தவம் மேற்கொண்ட வரருசியார், சிவனின் அருளால் பாணினி இயற்றிய நூலின் பொருள் தெளிவாக அறிந்து, ஊர் திரும்பி, தனது ஆசிரியருக்கும்  அதனைத் தெரிவித்து, பாணினியின் நூலுக்கு ஒட்டியும் வெட்டியும்  'வார்த்திகம்' என்ற உரைநூலை எழுதினார் என்பது குறிப்பிடப்படுகிறது]

7. இம்மாதத்தில் சங்கக் கல்லூரிக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களின்
 பெயர், வழங்கிய தொகை விவரம் குறிப்பிட்டு, அவர்களுக்கு நன்றி நவிலல்.
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


No comments:

Post a Comment