Tuesday, June 14, 2016

தமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 3

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு:  (1934-1935) துணர்: 10 - மலர்: 3
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பத்தாம் ஆண்டு:  (1934-1935)
துணர்: 10 - மலர்: 3

_________________________________________________________


1. தமிழகத்து உழவின் நலமும்  வாணிகத்தின் சிறப்பும்
K. சோமசுந்தரம் பிள்ளை
[நீர் மேலாண்மையிலும், வேளாண்மையை வளப்படுத்துவதில்   தமிழக மன்னர்கள் காட்டிய ஊக்கம்,  புலவர்கள் உழவினைச் சிறப்பித்துப் பாடியது; அக்காலத் தமிழர்கள் கடல் கடந்த அளவிலும் பருத்தி  ஆடை, முத்துக்கள் விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தது ஆகியன குறித்து இலக்கிய மேற்கோள்கள் துணை கொண்டு விளக்கப்படும் இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

2. பொருளின் அமைப்பு  (தொடர்ச்சி ...)
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
[அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்,  கட்டுரையின் இப்பகுதியில் அணுக்களைப் பகுத்தல், கதிரியக்கம் பற்றியும் விளக்குகிறார்.  இது ஒரு தொடர் கட்டுரை]

3. தேம்பாவணி  (தொடர்ச்சி ...)
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[ தேம்பாவணியின் ஆசிரியர் வீரமாமுனிவர் பெண்களை, அவர்களின் பண்புகளை, பெண்மையைக் குறித்து தமது பாடல்களில் கையாண்ட விதம் இப்பகுதியில் குறிப்பிடப்படுகிறது. நம் நாட்டு இலக்கியங்கள் பெண்களின் அங்கங்களை விவரிப்பதில் காட்டிய அக்கறையை வீரமாமுனிவர் பின்பற்றவில்லை, அவரது 830 செய்யுட்களிலும் இரு இடங்களில் மட்டுமே "முலைவல்லார்"  (23-84) எனக் குறிப்பிடுவது தவிர்த்து வேறெங்கும் பெண்களின் அங்கங்களை வர்ணிக்கும் முறை ஏதும் காணக் கிடைக்கவில்லை. இருப்பினும், தமிழ் இலக்கிய மரபு வழியில்  மற்றப் பாடல்கள் தமிழ் மணம் கமழும் வகையில் அமைந்துள்ளன. அவரது இயற்கை வர்ணனைகள் தமிழிலக்கியங்களை ஒத்திருக்கிறது என்கிறார் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை.  இக்கட்டுரை தொடர்கிறது ]

4. நகைச்சுவையும் புலவர்களும்
S. இராமச்சந்திரன்
[பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களும், கவிராயர்களும், அவர்களது புரவலர்களான மன்னர்களும், மடாதிபதிகளும் இரட்டுரமொழிந்து, சிலேடையாகப் பேசி பாராட்டு பெற்றதையும்; கேட்பவரை அவர்கள் தமது அறிவுக் கூர்மையாலும், சொல் நயத்தாலும் மகிழவைத்ததையும் குறிப்பிடும்  16 நிகழ்வுகளை இக்கட்டுரை தொகுத்து வழங்குகிறது]

5. சென்னை மாகாணத் தமிழர் முதலாவது மாநாடு, திருநெல்வேலி - தலைமைப் பேருரை
த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
[ஜூன் 10, 11 1934 இல், திருநெல்வேலியில் நடைபெற்ற சென்னை மாகாணத் தமிழர் முதலாவது மாநாட்டிற்குத் தலைமையேற்ற த.வே. உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் நிகழ்த்திய தலைமைப் பேருரை. இக்காலத்திலும் தமிழ் வளர்ச்சிக்காக முன்வைக்கப்படும் அனைத்துக் கருத்துக்களும் உமாமகேசுவரம் பிள்ளை உரையில் இடம் பெறுகின்றன; எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் மொழிக்கொலைக்கு உடன் போவதைத் தவிர்ப்பது, தமிழ் வழி கற்பிப்பதை ஆதரிப்பது, தமிழ்வழி கற்பிப்பதற்கு உதவும் வகையில் பிறதுறைசார்ந்த கல்வியின்  கலைச்சொற்களை உருவாக்கி/தமிழ்ப்படுத்தி நூல்கள் பல உருவாக்குவது, அந்த நூல்கள் எழுதுவோரை ஊக்கப்படுத்தும் வகையில் தக்க ஊக்கத்தொகை அளிப்பது, தமிழ் மாநாடுகள் என்ற முறையில் கூட்டங்கள் கூட்டி, கூட்டங்களில் தீர்மானங்கள் உருவாக்கி பின்னர்  தமிழ் வளர்ச்சிக்காக அதனைச் செயல்படுத்தாமல் விடுவது, கல்லூரியில் தமிழ் வகுப்புகளை அதிகரிப்பது என இன்றளவும் விவாதத்திற்கு உள்ளாகும் கருத்துக்கள் இடம் பெற்ற உரையை நிகழ்த்தியுள்ளார் ]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்



வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment