Saturday, April 16, 2016

தமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 3 & 4

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
நான்காம் ஆண்டு:  (1928-1929) துணர்: 4   மலர்: 3 & 4

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

நான்காம் ஆண்டு: 1928-1929
துணர்: 4   மலர்: 3 & 4


1. இராசராசன் (தொடர்ச்சி...)
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[இராஜராஜ சோழனின் நில அளவை, வரிவிதிப்பு பற்றிய அரியத் தகவல்கள் தொல்லியல் சான்றுகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன]

2. எனது நனவிற் கனா
-- அ. வரத நஞ்சைய பிள்ளை
[வயிற்றுக் கடுப்பினை சற்றே மறக்க, பகலில் உறங்க முற்பட்டு, உறக்கம் வராமல்  கனவு காண முயன்றதில் கட்டுரையாசிரியரின் சிந்தனை வெளிப்பாடுகள் ]

3. பதி பசு பாசப் பனுவல்  (தொடர்ச்சி...)
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[மறைஞானசம்பந்தர் இயற்றிய சைவசித்தாந்தம் உணர்த்தும் நூல்களுள் ஒன்று ]

4. மாதங்கள்
-- இ. மு.  சுப்பிரமணிய பிள்ளை
[கதிரவனை அடிப்படையாகக் கொண்டு காலக் கணக்கிடும் முறை பற்றிய ஒரு பார்வை, பண்டைத் தமிழர் மாதங்களுக்கு எவ்வாறு பெயரிட்டிருந்தனர் ...பார்க்க பக்கம் 107, தமிழ்ப் பெயர்கள் எவ்வாறு மாற்றப்பட்டன? ஒரே மாதத்தில் இரண்டு நிறைமதிகள் வந்தால் எப்படிப் பெயரிடுவது? உலகளாவிய நாள் கணக்கிடும் முறை  குறித்த வரலாற்றுப் பார்வைகள் ]

5. பாண்டியர் வரலாறு
-- T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[பாண்டியர்களின் தொன்மை, கடைச்சங்கக் காலத்திற்கு முந்திய பாண்டியர்கள், இலக்கியம் வழி நாமறியும் பாண்டியர்கள்...இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

6.  எனது பற்பல வேலைகள்
-- R. வேங்கடாசலம் பிள்ளை   (இதழாசிரியர்)
[மாணவர் பக்கங்கள்: 'நீங்கள் புரிந்துவரும் பற்பல வேலைகட்கிடையே இதனையும் மேற்கொளல் வேண்டும்' என வரும் வேண்டுகோள்களைத் தொடர்ந்து, கட்டுரையாசிரியர் தனது 'பற்பல வேலைகள் என்ன' என்று தனது வாழ்வை மறுபார்வை செய்கிறார்]

7. பெருமிழலைக் குறும்ப நாயனாரது திருப்பதி
-- T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[63 நாயன்மார்களுள் ஒருவரான பெருமிழலைக் குறும்ப நாயனார் வாழ்ந்த பெருமிழலை பற்றிய கட்டுரை, பெருமிழலையும் திருவீழிமிழலையும் (அப்பரும் சம்பந்தரும் படிக்காசு பெற்ற தலம்) ஒரே இடமா? இல்லை, குறும்ப நாயனார் வாழ்ந்த  பெருமிழலையே மிழலை எனக் குறிப்பிடப்படுகிறது என்பது ஆசிரியரின் முடிவு]

8. திருச்சுழியல் வெண்பா அந்தாதி  (தொடர்ச்சி...)
-- கி. அரங்கராசன்
[ திருச்சுழியல் வெண்பா அந்தாதி  பற்றிய தகவல்கள் அறியப்படவில்லை, உரையுடன் தமிழ்ப்பொழிலில் வழங்கப் படுகிறது]


________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment