Friday, April 15, 2016

தமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 1 & 2

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
நான்காம் ஆண்டு:  (1928-1929) துணர்: 4   மலர்: 1 & 2

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...


________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
நான்காம் ஆண்டு: 1928-1929
துணர்: 4   மலர்: மலர்: 1 & 2
________________________________________________

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________


1. இராசராசன் (தொடர்ச்சி...)
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[இராஜராஜ சோழனின் திருவரிஞ்சியீச்வரம் ஆலயம், இராசராசன் திருமுறை கண்டது  பற்றி தொடர்கிறது]

2. குமரகுருபரவடிகளும், அவர் நூல்களும்  (தொடர்ச்சி...)
-- இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[குமரகுருபரர் வாழ்க்கை  வரலாறு, அவர்   படைப்புகளின் இலக்கிய நயம் பாராட்டல்]

3.  துயரம்
-- R. வேங்கடாசலம் பிள்ளை
[பண்டிதர் தண்டாயுதபாணிக் காடவராயர் மறைவுச் செய்தி  R. வேங்கடாசலம் பிள்ளை வழங்கிய இரங்கற்பாவுடன்]

4. வரனென்னும் வைப்பு
-- ஔவை சு. துரைசாமி பிள்ளை
[ஓர் ஆங்கில நூலில் இருந்து ...]

5. நட்பு
-- R. நரசிம்மலு நாயுடு
[புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சியொத்தல் என மூவகைப்படும் நட்பு, அதன் இன்றியமையாமை, நட்பாராய்தல், நட்புக்குரியார், நட்பினர் கடமை, நட்பின் பெருமை, கூடாநட்பு, நட்பிற் பிழை பொறுத்தல் பற்றிய விளக்கங்கள்]

6.  அண்ணாமலைப்பல்கலைக்கழகம்
-- சி. வேதாசலம் பிள்ளை
[சென்னை சட்டசபையில் அண்ணாமலைப்பல்கலைக்கழகம் குறித்த மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்டது, தமிழ் வளர்க்கும் பணியில் பல்கலைக்கழகம் ஆவன செய்ய கருத்துரைகள்]

7. ஓர் ஆராய்ச்சி - திருவிசையமங்கையும் கோவந்தபுத்தூரும்
-- வை. சுந்தரேச வாண்டையார்
[ சோழநாட்டுத் தேவாரம் பெற்ற தலம் திருவிசையமங்கை, பதிகம் பெற்ற இத்தலம்  கோவந்தபுத்தூரிலுள்ள சிவாலயமே என்பது கட்டுரையாசிரியர் முடிவு]

8. ஐயவினாத்தொடர்
-- ஊ. சா. வேங்கடராம ஐயர்
[ஏழாம் வேகம் என்றால் என்ன?]

9. பச்சையப்ப முதலியார் 1754-1794
-- R. வேங்கடாசலம் பிள்ளை
[மாணவர் பக்கம், பச்சையப்ப முதலியார் வாழ்க்கை வரலாறு, பள்ளியிறுதி மாணவர்களின் பாடம் சுருக்கமாகக் கொடுக்கப்படுகிறது. இத்துடன், காஞ்சீபுரம் சபாபதி முதலியார் பாடிய 'பொன்மாலை' யில் உள்ள செய்யுட்கள்  சிலவும்]

10. மார்க்கண்டேயர்  அல்லது முயற்சியின் வெற்றி
-- ந. மு. வேங்கடசாமி நாட்டார், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தலைமைத் தமிழாசிரியர்
[இல்லறம் நடத்தி பின்னர் துறவறம் மேற்கொள்ளுமாறு அறிவுரை]

11. பதி பசு பாச வகை
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[சைவத்தின் முடிந்த பொருளாகிய பசு, பதி, பாசம் ஆகியவற்றை வகைப்படுத்தியுரைத்ததால் இப்பெயர் பெற்றது, இயற்றியவர் பெயர் அறியக் கூடவில்லை... இது ஒரு தொடர்]

12. திருச்சுழியல் வெண்பா அந்தாதி  (தொடர்ச்சி...)
-- கி. அரங்கராசன்
[ திருச்சுழியல் வெண்பா அந்தாதி  பற்றிய தகவல்கள் அறியப்படவில்லை, உரையுடன் தமிழ்ப்பொழிலில் வழங்கப் படுகிறது]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment