Thursday, March 31, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 9

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 9 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 9
________________________________________________


1.  மகிழ்ச்சி
-- இதழாசிரியர்
[ T.N. சிவஞானம் பிள்ளை, R. கிருஷ்ணராவ் பான்சலே , வெ.பெ.  சுப்ரமணிய முதலியார் ஆகிய தமிழறிஞர்கள், முறையே,  சர், இராவ் பகதூர், இராவ்சாகேபு பட்டம் பெற்றமைக்கு வாழ்த்துகள்]

2. ஏறு தழுவுதல் (தொழுமாடு பிடித்தல்)
-- இதழாசிரியர்
[இலக்கியங்களில் ஏறுதழுவுதலுக்குச் சான்றுகள் கொடுக்கும் விரிவான கட்டுரை ]

3. தமிழ்நாட்டுக் கல்வி
-- பண்டிதர் அ. கோபாலையர்
[முன்னர் வழக்கில் இருந்த 'அரிச்சுவடி'  கல்விமுறை பற்றிய விளக்கம் தரும் கட்டுரை, இதழ் வெளிவந்த காலத்தில் (1926)  கல்வியின் தரம், மாணவரின் தரம் குறைந்ததென்ற புலம்பல்!!! ]

4. கட்டுரை எழுதுதல் (கட்டுரை = வியாசம்)
-- இதழாசிரியர்
[கட்டுரை எழுதுதலைக் கற்பித்தற்கு உரியார் யார், தாய்மொழிப் பயிற்சி இன்மையால் தமிழ்க்கல்வி குறைந்தது, கட்டுரை எழுதும் பயிற்சி உதவலாம்,  பள்ளியில் 8, 9 வகுப்புகளில் தொடங்கல் வேண்டும்]

5. நக்கீரர் - ஒரு நாடகம்  (தொடர்ச்சி ...)
-- மு. கோவிந்தராய நாட்டார்
[நக்கீரர் - ஒரு நாடகத் தொடர்]

6. தமிழர் வரலாறு - முதல் பாகம் - கி. மு. 450 வரையில்
-- ப.மு. சிதம்பர முத்தரையர்
[தமிழகத்தில் பட்டப்பெயர்கள் சாதிகளாக உருவெடுத்தது பற்றிய விளக்கம் (பக்கம் - 320), நாடு முன்னேற்றம் அடைய மக்கள்  தங்கள் வரலாற்றை அறிந்திருக்க வேண்டும், கடல் கோள் காலம் பற்றிய குறிப்புமுண்டு] 

7. திருவாசகச் சிற்றாராய்ச்சி (தொடர்ச்சி ...)
-- இராவ்சாகிபு சு. வி. கனகசபைப்பிள்ளை
[திருவாதவூரர் காலம் - மாணிக்கவாசகர் காலம் பற்றிய குறிப்பு தொடர்கிறது]

8. கலிங்கத்துப்பரணியாராய்ச்சி
-- மு. இராகவையங்கார்
[முன்னர் வெளிவந்த அ. கோபாலையன் அவர்களின் கலிங்கத்துப்பரணியாராய்ச்சி மறுப்பு கட்டுரையின் மீது விமர்சனம், இதழாசிரியரின், எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்க வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் வெளியிடப்பட்டுள்ளது]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!




அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment