Thursday, September 22, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 7

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 7
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 7

_________________________________________________________

1.  திருக்குறணுதலிய நெறிமுறை (தொடர்ச்சி ...)
K. சோமசுந்தரம் பிள்ளை
[திருக்குறள் ஒழுக்க நெறியையும், அன்பையும் அறத்தையும் முதன்மைப்படுத்துகிறது என்பதை எடுத்துக் காட்டும் நோக்கில் சோமசுந்தரம் பிள்ளை    'இருமனப் பெண்டிர், பெண்வழிச்சேறல், கள், கவறுகள், இரவு, இரவச்சம்' ஆகியன  நல்வாழ்விற்குத்  தரும் இடர்களைக் குறித்து எழுதினார்.   இத்தொடர் கட்டுரையின் இப்பகுதியில்;  வாய்மை, ஈகை, உடல்நலம், பிணி, மருந்து ஆகியன குறித்து  வள்ளுவர் அறிவுறுத்தியவை விளக்கப்படுகிறது.  இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

2. திருவிளையாடற் புராண வாராய்ச்சி  (தொடர்ச்சி ...)
E.R. நரசிம்ம ஐயங்கார்
[பெரும் பற்றப்புலியூர் நம்பியார் மற்றும் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராண நூல்கள் அகச்சான்றுகள் இல்லாத நூல்களென்பதும்,  அதனால் காலவரையறுக்க உதவும் குறிப்புகளற்ற நூல்களென்பதும் அறிஞர் முடிபு.   இது தவறான கருத்து என இக்கட்டுரையின் வழி  காட்ட விரும்புவது  நரசிம்ம ஐயங்கார் அவர்களின் நோக்கம்.
பெரும் பற்றப்புலியூர் நம்பியார் மற்றும் பரஞ்சோதி முனிவர் இருவருமே 13 ஆம் நூற்றாண்டினர்  என அவர்கள்  தனது  பாடலில் கையாண்ட  குறிப்புகள் காட்டுவதாகவும் கூறுகிறார். பெரும் பற்றப்புலியூர் நம்பியார் நூலில் சேக்கிழார் மற்றும் பரஞ்சோதி முனிவர் கருத்துகள் இடம் பெறுவதாகவும் கூறுகிறார்]

3. இயைபு நூல்  (தொடர்ச்சி ...)
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
[பொருளின் அமைப்பு   என்ற தலைப்பில் கட்டுரை எழுதி வந்த   அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார் அவர்கள், 'இயைபுநூல்' என்ற  தலைப்பில் தொடர்கிறார்.
2. இயன் மாற்றமும் நிறையும்  - என்ற அத்தியாயத்தில்: பொருண்மையும் நிறையும், இயன்மாற்றத்தில் நிறைமாற்றம், நிலவியம், இயன் மாற்றத்திற்குக் காரணம், இயன் மாற்றத்தின் சிறப்பியல்புகள்  ஆகியவற்றைக் குறித்து விளக்கம் தருகிறார், இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

4. கருவிலே வாய்த்த திரு
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[மக்களின் செயல்பாடுகள் பலவகை; தாமே திட்டமிட்டு அடுத்தவர் உதவியின்றி செயல்படுத்துதல், அடுத்தவர் உதவியுடன் செயலாற்றல், பிறர் ஏவி வழி காட்டிய பின்னர் முடித்தல் என வகைப்படுத்தலாம்.  தாமே கூர்த்த மதியுடன் திட்டமிட்டு செயல்படுத்திக் காட்டுபவரின் திறமையின் சிறப்பியல்பினை  அவருக்கு அது 'கருவிலேயே வாய்க்கப்பட்ட திரு'  எனலாம் என்பது ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களது கருத்து. இக்கருத்தை விளக்க, பறவைகளிடம் இயற்கையில் அமையப் பெற்ற நுண்ணறிவுத் திறன் கொண்ட செயல்களைச் சுட்டிக்  காட்டி விளக்குகிறார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை ]

5. காலவாராய்ச்சி
ம.வி. இராகவன்
[III. பண்டைப் பெருமக்கள் வாழ்ந்த காலவாராய்ச்சி செய்வது குறித்து விளக்குவது கட்டுரை  ஆசிரியரின் நோக்கம்.  தமிழக இலக்கியங்கள் காலவாராய்ச்சி செய்வதற்கு போதிய சான்றுகள் தருவதில்லை என்பது இவர் கருத்து.  இக்கோணத்தில் தமிழ்ப்பொழிலில் முன்னர்  வெளியான, E.R. நரசிம்மையங்கார் அவர்களின் "உரையாசிரியர் ஒருவர், பேராசிரியர் பலர்" என்ற தொல்காப்பியம் தொடர்பான கட்டுரையை மீள்பார்வை செய்து மதிப்புரை அளிக்கிறார். ஒன்றை ஆராய முற்படுபவர், முதலில் அந்தக்  கோட்பாட்டை  எடுத்துக்காட்டு கொடுத்து விளக்கிய பிறகு, தனது கருதுகோளை சான்றுகளுடன் வைத்துச் சாதிப்பதே ஆய்விற்குரிய முறை, தனது விருப்பத்திற்கு முதன்மை கொடுப்பது சார்புநிலையில் அமைந்துவிடும்  என விளக்குகிறார். சீரிய ஆய்வுநெறிகளைப் பின்பற்றாத   நரசிம்மையங்கார் அவர்களின் ஆய்வு நேர்மையற்ற வகையில் அமைந்துள்ளதாகக் கருத்தும் தெரிவிக்கிறார். 
இக்கட்டுரையில் தனது கோணத்தை விளக்க மேலும் பல எடுத்துக் காட்டுகளைத் தருகின்றார்  ம.வி. இராகவன்.  இது ஒரு தொடர் கட்டுரை]

6. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Tuesday, September 13, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 6

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 6
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 6

_________________________________________________________

1.  திருவிளையாடற் புராண வாராய்ச்சி
E.R. நரசிம்ம ஐயங்கார்
[பெரும் பற்றப்புலியூர் நம்பியார் மற்றும் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராண நூல்கள் அகச்சான்றுகள் இல்லாத நூல்களென்பதும்,  அதனால் காலவரையறுக்க உதவவும் குறிப்புகளற்ற நூல்களென்பதும் அறிஞர் முடிபு.   இது தவறான கருத்து என இக்கட்டுரையின் வழி  காட்ட விரும்புவது  நரசிம்ம ஐயங்கார் அவர்களின் நோக்கம்.
பெரும் பற்றப்புலியூர் நம்பியார் நூல் உவேசா  அவர்களால் பதிப்பிக்கப்பட்டது.  இதனை எழுதிய  பெரும் பற்றப்புலியூர் நம்பியார் 13 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் , 14  ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் வாழ்ந்தவர் என்பதைக் கல்வெட்டுத் தகவல் மூலம் காட்டுகிறார் கட்டுரை ஆசிரியர். பரஞ்சோதி முனிவர் 16-17ஆம் நூற்றாண்டினர்  என அவர் தனது  பாடலில் கையாண்ட இலக்கணக் குறிப்புகள் காட்டுவதாகவும் கூறுகிறார். இது ஒரு தொடர் கட்டுரை]

2. திருக்குறணுதலிய நெறிமுறை (தொடர்ச்சி ...)
K. சோமசுந்தரம் பிள்ளை
[திருக்குறள் ஒழுக்க நெறியையும், அன்பையும் அறத்தையும் முதன்மைப்படுத்துகிறது என்பதை எடுத்துக் காட்டும் நோக்கில் சோமசுந்தரம் பிள்ளை எழுதும் தொடர் கட்டுரையின் இப்பகுதியில்;  'தெரிந்துசெயல்வகை'  என   வள்ளுவர் அறிவுறுத்தியவை விளக்கப்படுகிறது.  இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

3. மகாபலிபுரத்தின் பண்டையப் பெயர்
C.M. இராமச்சந்திர செட்டியார்
பல்லவர் ஆட்சிக்கு முன்னர் 'மகாபலிபுரம்' ஏற்பட்டதென்றும், அப்பொழுது அதன்  பெயர் 'தலசயனம்' என்று H. ஹீராஸ்  தனது நூலில் எழுதியுள்ளார்.  பின்னர் மாமல்லன்   நரசிம்மவர்மனுக்கு பிறகு அவ்வூருக்கு  'கடல்மல்லை தலசயனம்' என்று பெயர் ஏற்பட்டது; அதாவது,  'தலசயனம் என்ற பெயர் பெற்ற  கடல் அருகில்  மலை' என்பது ஹீராஸ் அவர்கள் தரும் விளக்கம். இது தவறு.  மல்லை என்பதற்கு மலை என்ற பொருள் கிடையாது. 'கடற்கரையில் உள்ள மலையில் அமைந்துள்ள  தலசயனம் என்னும் கோயில் ' என்பதுதான் அதன் பொருள்.

மேலும் ஊரின் பெயரும் அதனைத் தொடர்ந்து கோயிலின் பெயரும் இணைத்து வழங்கப்படுவதுதான் வழக்கம், 'தஞ்சை ராஜராஜேஸ்வரம்' என்பது போல, 'கச்சி ராஜசிம்மேஸ்வரம்'  என்பது போல அது 'மல்லை தலசயனம்' என்று அமையும் என விளக்குகிறார்  இராமச்சந்திர செட்டியார்.  மேலும், 'மல்லை ஜலசயனம்' என்ற கடல் நீர் அருகிருந்த  ஆலயம் ஒன்றினை  கல்வெட்டுகள்  குறிக்கின்றன. இது நிலத்தில் இருப்பதால் இக்கோயில் 'தலசயனம்' ஆகும். இத்தலசயனம் குறித்து பெரிய திருமொழியில் இரண்டு பதிகங்களைக் காணலாம்.  மாமல்லைக்கு பண்டைய பெயர் இருந்திருந்தாலும், அது தலசயனம் என இருந்திருக்க வாய்ப்பில்லை  என விளக்குகிறார் அவர்.

4.  காலவாராய்ச்சி
ம.வி. இராகவன்
[பண்டைப் பெருமக்கள் வாழ்ந்த காலவாராய்ச்சி செய்வது குறித்து விளக்குவது கட்டுரை  ஆசிரியரின் நோக்கம்.  தமிழக இலக்கியங்கள் காலவாராய்ச்சி செய்வதற்கு போதிய சான்றுகள் தருவதில்லை என்பது இவர் கருத்து.  இக்கோணத்தில் தமிழ்ப்பொழிலில் முன்னர்  வெளியான, E.R. நரசிம்மையங்கார் அவர்களின் "உரையாசிரியர் ஒருவர், பேராசிரியர் பலர்" என்ற தொல்காப்பியம் தொடர்பான கட்டுரையை மீள்பார்வை செய்து மதிப்புரை அளிக்கிறார். ஒன்றை ஆராய முற்படுபவர், முதலில் அந்தக்  கோட்பாட்டை  எடுத்துக்காட்டு கொடுத்து விளக்கிய பிறகு, தனது கருதுகோளை சான்றுகளுடன் வைத்துச் சாதிப்பதே ஆய்விற்குரிய முறை, தனது விருப்பத்திற்கு முதன்மை கொடுப்பது சார்புநிலையில் அமைந்துவிடும்  என விளக்குகிறார். சீரிய ஆய்வுநெறிகளைப் பின்பற்றாத   நரசிம்மையங்கார் அவர்களின் ஆய்வு நேர்மையற்ற வகையில் அமைந்துள்ளதாகக் கருத்தும் தெரிவிக்கிறார்.  இது ஒரு தொடர் கட்டுரை]

5. தமிழ்ச்செய்திகள்
இதழாசிரியர்
[1936- ஆம் ஆண்டின் திருப்பனந்தாள் தமிழ்ப்பரிசு பெறுபவர் சங்குப்புலவர் அவர்கள்; சென்னை தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த  'தமிழ்க் கலைச்சொற்கள்  மாநாடு' நிகழ்வு குறித்த தகவல்கள்  இடம் பெறுகின்றன]

6. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Friday, September 2, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 5

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 5
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 5

_________________________________________________________

1. பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்  (தொடர்ச்சி ...)
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[முன்னர் தமிழ்ப் பொழிலில் பரணர் குறித்து ஆய்வுக் கட்டுரையை  எழுதியவர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை. இக்கட்டுரையில், சென்னைப் பல்கலைக் கழக விரிவுரையாளரும், பன்மொழி அறிஞருமான வே. வேங்கடராஜுலு ரெட்டியார் எழுதிய 'பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்' மீது நூல் மதிப்புரை  எழுதியுள்ளார்.]

2. செருத்துணையாரும் புகழ்த்துணையாரும் அவதரித்த திருப்பதிகள்  (தொடர்ச்சி ...)
T.V. சதாசிவப்பண்டாரத்தார்
[செருத்துணையாரைத் தொடர்ந்து வரும் இப்பகுதி புகழ்த்துணை நாயன்மார் குறித்த பகுதி;
திருத்தொண்டர் திருவந்தாதியும், பெரியபுராணமும் புகழ்த்துணை நாயன்மார் பிறந்ததாகக் குறிப்பிடுவது செருவிலிபுத்தூர் என்ற ஊர்தனை.  ஆயினும், கொற்றங்குடி உமாபதிசிவனார் தான் இயற்றிய திருத்தொண்டர் புராண சாரத்தில்  அவ்வூரை 'அழகார் திருப்பத்தூர்' என்று காட்டுகிறார்.  உமாபதிசிவனாரும்  சுந்தரமூர்த்தி நாயனாரும்  இவ்வாறாகக்  குறிப்பிடுவது  அரிசிற்களாப்புத்தூர் பதிகத்தின் அடியொட்டி என்பது புலப்படுகிறது. சம்பந்தரும் தம் பதிகத்தில் இவ்வூரைக்  குறிப்பிடுவார்.

இக்காலத்தில்  செருவிலிபுத்தூர் என்ற ஊர் காணப்பெறவில்லை.   அழகார் திருப்புத்தூர் இந்நாளில் அழகாத்திரிப்புத்தூர் எனவும் அழகாப்புத்தூர் எனவும் திரித்து அழைக்கப்படுகிறது. இத்தலம் கும்பகோணத்திலிருந்து குடவாயில் செல்லும் பெருவழியில் அரிசில் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது   எனக் காட்டுகிறார் சதாசிவப்பண்டாரத்தார். ]

3. திருக்குறணுதலிய நெறிமுறை (தொடர்ச்சி ...)
K. சோமசுந்தரம் பிள்ளை
[திருக்குறள் ஒழுக்க நெறியையும், அன்பையும் அறத்தையும் முதன்மைப்படுத்துகிறது என்பதை எடுத்துக் காட்டும் நோக்கில் சோமசுந்தரம் பிள்ளை எழுதும் தொடர் கட்டுரையின் இப்பகுதியில்;  'சினம் காக்க'  என   வள்ளுவர் அறிவுறுத்தியவை விளக்கப்படுகிறது.  இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

4. நெடுந் தொகைக் குறும்பொருள் (தொடர்ச்சி ...)
முத்து சு. மாணிக்கவாசக முதலியார்
[சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களுள் நெடுந்தொகை என்றும் கூறப்படும் அகநானூற்றுப் பாடல்களுக்கு சிற்றுரை வரைகிறார் மாணிக்கவாசக முதலியார்.

தொடர் கட்டுரையின் இப்பகுதியில்,  'கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் புழுகின்' எனத் துவங்கும் 9  ஆம் பாடலுக்கு (பாலை; வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது)  தனது சிற்றுரையை  எழுதியுள்ளார் மாணிக்கவாசக முதலியார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

5. புத்தக மதிப்புரை
இதழாசிரியர்
உவேசா அவர்களின் 'புதியதும் பழையதும்',  'கனம் கிருஷ்ணையர்', கோபாலகிருஷ்ண பாரதியார்'  ஆகிய  மூன்று நூல்களும்;
R. V. இராமசுவாமி எழுதிய 'சிந்தனைக் களஞ்சியம்' என்ற கட்டுரைத் தொகுதியும்;
ஆ.  மாரிமுத்து அவர்களின் புத்தரின் அறவுரைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலான 'சமயங்களின் சக்கரச் சுழற்சி' என்ற நூலும் பொழிலின் வாசகர்களுக்கு  இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

6. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


Friday, August 5, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 4

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 4
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 4

_________________________________________________________

1. பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்  (தொடர்ச்சி ...)
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[முன்னர் தமிழ்ப் பொழிலில் பரணர் குறித்து ஆய்வுக் கட்டுரையை  எழுதியவர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை. இக்கட்டுரையில், சென்னைப் பல்கலைக் கழக விரிவுரையாளரும், பன்மொழி அறிஞருமான வே. வேங்கடராஜுலு ரெட்டியார் எழுதிய 'பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்' மீது நூல் மதிப்புரை  எழுதியுள்ளார்.  இக்கட்டுரை ... தொடரும்]

2. கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[5 ஆம்  அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதி, சம்பா வித தாட்டாந்தம், சம்பாவித அந்நுவயங்கள்,  வியோக அந்நுவயங்கள், இருதலைப்பாடு,   போலி இருதலைப்பாடு, தொகுதிப்போலி,  பகுதிப்போலி, கிழமைப்போலி, ஒன்றினை ஒன்று பற்றுதல், மற்றொன்று மறுத்தல், கேள்விப்போலி,  காகதாலிய நியாயம்  ஆகிய கருத்தாக்கங்களை விளக்குகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

3. திருவாதவூரார் திருவாய்மொழி  (தொடர்ச்சி ...)
வி. குமாரசாமி ஐயர்
[அறம், பொருள், இன்பம், வீடு பேறு குறித்து தமிழிலக்கியங்கள் கூறுகின்றன. குறிப்பாக முதல் மூன்றும் மும்முதற் பொருளாகக் கருதுவது தமிழிலக்கிய மரபு.  இக்கருத்துக்கள் திருவாதவூரடிகள் எழுதிய திருவாசகம், திருக்கோவையார் நூல்களில் எங்ஙனம் கையாளப்படுகிறது என ஆராய்கிறார் குமாரசாமி ஐயர்.  இது ஒரு தொடர் கட்டுரை]

4. பெருங்காற்றும், மின்னலும், இடியும்
K. கோவிந்தன்
[மாணவர் யாத்த இந்த சிறு  அறிவியல் கட்டுரை, பெருங்காற்று, மின்னல், இடி  ஆகியவற்றின் தோற்றம், பண்பு ஆகியவற்றை விவரிக்கிறது]

5. ஏமநல்லூர் என்னும் வைப்புத் தலம்
வை. சுந்தரேச வாண்டையார்
[தேவாரத்தில் தமக்கென சிறப்பாக தனிப்பதிகம் பெற்ற சிவதலங்கள்  'பாடல் பெற்ற தலங்கள்' என்றும், பிற பதிகங்களின் பாடல்களில் பொதுவாக வைத்துப் பாடப்பெற்ற தலங்கள் 'வைப்புத் தலங்கள்' எனவும் அறியப்படும்.   காலப்போக்கில் பலவகைக் காரணங்களால் சில ஊர்கள் பெயர் மாற்றம் பெற்று, அவ்வூரின்  இருப்பிடம் அறிய முடியாமல் போனாலும், ஊர்க் கோவில்களில் இருக்கும் பழைய கல்வெட்டுகள் அவ்வூர் முன்னர் எவ்வாறு அழைக்கப்பட்டது என்ற தகவலைத் தந்துதவும்.

திருநாவுக்கரசர் பாடல் ஒன்றில் 'ஏமநல்லூர்' என்ற தலம் வைக்கப்பட்டுள்ளது.  அது இக்காலத்தில் கும்பகோணத்தின் அருகில் உள்ள திருப்பனந்தாள் ஊருக்கு அண்மையில் உள்ள 'திரைலோக்கி'  என  அழைக்கப்படும்  ஊராகும் என்பதை, 'ஏமநல்லூராகிய திரைலோக்கி மகாதேவி சதுர்வேதிமங்கலம்' என்ற கல்வெட்டுக் குறிப்பொன்றால் அறிய முடிகிறது.  இது பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஊர்களில் ஒன்று  என்கிறார் சுந்தரேச வாண்டையார்]

6. பெண்ணின் பெருமை
R. மங்கையர்க்கரசி
[ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவியான மங்கையர்க்கரசி தஞ்சை விநாயகர் தமிழ்க் கழகத்தின் ஆண்டுவிழாவில் 'பெண்ணின் பெருமை' குறித்து  நிகழ்த்திய சொற்பொழிவு கட்டுரை வடிவில் தமிழ்ப்பொழிலில் இடம்பெற்றுள்ளது. பெண்கல்வி பறித்து  பிறகு, பெண்கள் ஒடுக்கப்பட்ட பிறகு பாரதம் தனது  பெருமை குன்றியது எனக்குறிப்பிட்டு பெண்ணுரிமைக்கு குரல்  கொடுக்கிறார்]

7. செருத்துணையாரும் புகழ்த்துணையாரும் அவதரித்த திருப்பதிகள்
T.V. சதாசிவப்பண்டாரத்தார்
[செருத்துணை நாயன்மார் பிறந்ததாகக் குறிக்கப்படும்  தஞ்சாவூர் சோழநாட்டின் தலைநகராக விளங்கிய தஞ்சை மாநகர் அன்று.  அவர் பிறந்த ஊரான தஞ்சாவூர் என்பது,  இந்நாளின் தஞ்சை மாவட்டத்தின் நன்னிலம் வட்டத்தில் அமைந்திருந்த, அந்நாளைய மருகல்நாட்டுத் தஞ்சாவூர் எனக் கல்வெட்டுத் தகவல் மூலம் காட்டுகிறார் சதாசிவப்பண்டாரத்தார். இது ஒரு தொடர் கட்டுரை]

8. ஒரு துயரம்
இதழாசிரியர்
திவான்பகதூர் சர். தி. நெ. சிவஞானம் பிள்ளை மறைந்தார்.

9. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Wednesday, August 3, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 3

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 3
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 3

_________________________________________________________

1.  கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[4 ஆம்  அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதி, அப்பியாசங்கள், வழியளவை  ஆகிய கருத்தாக்கங்களை விளக்குகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

2. இந்தியாவும் சீனாவும்  (தொடர்ச்சி ...)
T.S. நடராசன்
[சீனப் பேராசிரியர் 'டான்-யுன்-ஷன்'   சாந்திநிகேதனத்தில் நிகழ்த்திய சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு- பண்டைய  காலம் தொட்டு சீனாவும் இந்தியாவும் கல்வி, மொழி ஆகியவற்றில் மேம்பட்டு உலகில் சிறந்து விளங்கியமை பற்றியும்; இரு நாடுகளின் பெளத்த மத நூல்கள் மற்ற  நாட்டைப் பற்றி குறிப்பிடுவதைப் பற்றியும்; வாழ்வியல் , மக்கள் கொண்ட நல்லொழுக்கப் பண்புகளின் ஒற்றுமை, கலைவளர்ச்சி, நாகரிகம் எனப் பலவற்றிலும்   தொடர்ந்து 5,000 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளும்  சிறந்து விளங்குவது பற்றியும்  விவரிக்கிறது.

டான்-யுன்-ஷன்  அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் போர்வெறி மனநிலை, நவீன ஆயுதங்கள் தயாரிக்கும்  போக்கு ஆகியவற்றைப் பற்றிக் கவலை தெரிவிக்கிறார் (இவர் கவலையை உறுதிப்படுத்தும் வகையில் இவர் உரையாற்றிய இரண்டாண்டுகளில் 2 ஆம் உலகப்போர் துவங்கி, அணுஆயுதம் அழிவு வேலையைக் காட்டியது இங்குக் குறிப்பிடத்தக்கது) இக்கட்டுரை நிறைவுறுகிறது]

3. 'பரணர்' மறுப்பின் ஆராய்ச்சி
ஐ. நடேசப்பிள்ளை
[சென்னைப் பல்கலைக் கழக விரிவுரையாளரும், பன்மொழி அறிஞருமான வே. வேங்கடராஜுலு ரெட்டியார் எழுதிய 'பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்' மீது நூல் மதிப்புரை  எழுதினார் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை (பார்க்க துணர் 11: மலர் 9).  இக்கட்டுரையில் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் வைத்த விமர்சனங்களுக்கு விளக்கமளித்துள்ளார் ஐ. நடேசப்பிள்ளை]

4. பண்டைத் தமிழர் மணமுறை
மா. இராசமாணிக்கனார்
[பண்டைத் தமிழர் மணமுறை , தமிழர் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கம் உண்டா என்பது குறித்து இலக்கியத்தில் ஆழ்ந்த ஆய்வுகளைச் செய்தவர் மா. இராசமாணிக்கனார். 1950  களில் தமிழ் இலக்கிய உலகமே  மா. இராசமாணிக்கனார், சிலம்புச் செல்வர் ம பொ சி ஆகிய இருவரின் பின்னணியில் இரண்டுபட்டு எதிரெதிர் அணியில் பண்டைத் தமிழர் மணமுறை குறித்து விவாதித்தனர். பிறகு இந்த விவாதங்கள் நூலாகவும்  வெளியிடப்பட்டன என்பது  தமிழகத்தில் நிகழ்ந்த   ஒரு  சுவையான வரலாற்று நிகழ்வு.  இந்த நிகழ்வுக்கும் முன்னரே 1936இல்  மா. இராசமாணிக்கனார் எழுதிய கட்டுரை இது.  பண்டைத் தமிழர் மணமுறை  குறித்து இக்கட்டுரையில் பல இலக்கியச் சான்றுகளைத் தருகிறார் மா. இராசமாணிக்கனார்]

5. பாண்டியர் வரலாறு  (தொடர்ச்சி...)
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[இம்முறை, கிபி 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல், 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை தென்பாண்டி நாட்டில் ஆட்சி புரிந்த பிற்காலப் பாண்டியர்களின் வரலாற்றுத் தகவல்களை, அவர்களது  கல்வெட்டுகள், சாசனங்கள் தரும் குறிப்புகளுடன் விளக்குகிறார் சதாசிவப் பண்டாரத்தார்.  இவர்களில் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் சிறந்த மன்னனாக விளங்கினான் என்றும், சிறந்த தமிழ் அறிஞனாகவும் விளங்கினான் என்றும் கூறுகிறார்.  அதற்கு இம்மன்னன் அவன்  கட்டிய திருநெல்வேலி மாவட்டம், தென்காசி, விசுவநாத சுவாமிக் கோவிலின், முன்புறம் இடிந்துள்ள கோபுரச் சுவரில் எழுதி வைத்த  சாசனச் செய்யுள்களைசான்று தருகிறார். (இச்செய்யுள்களைத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் -  மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் நூலான "தமிழக ஆவணங்கள்" சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள், மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14  இல் [http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=303&pno=123]படிக்கலாம்). 

அடுத்து,    சடையவர்மன் பராக்கிரம பாண்டியனின் இளவல் சடையவர்மன் குலசேகரப் பாண்டியன், அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன், அபிராம பராக்கிரம பாண்டியன், ஆகாரவர்மன், சடையவர்மன் சீவல்லப பாண்டியன், சடையவர்மன் பராக்கிரம குலசேகர பாண்டியன், நெல்வேலிமாறன், சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் (நைடதம் நூல் எழுதிய அரசன்), வரதுங்க ராம பாண்டியன்  ஆகியோர் பற்றிய செய்திகளைத் தருகிறார் ஆசிரியர். இப்பாண்டியர்களில்  சிலர் சிறந்த தமிழ்ப் புலவர்களாகவும், சிவபக்தர்களாகவும், சிவனுக்குக் கோவில் எழுப்பியவர்களாகவும் அறியப்படுகிறார்கள். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

6. திருவாதவூரார் திருவாய்மொழி
வி. குமாரசாமி ஐயர்
[அறம், பொருள், இன்பம், வீடு பேறு குறித்து தமிழிலக்கியங்கள் கூறுகின்றன. குறிப்பாக முதல் மூன்றும் மும்முதற் பொருளாகக் கருதுவது தமிழிலக்கிய மரபு.  இக்கருத்துக்கள் திருவாதவூரடிகள் எழுதிய திருவாசகம், திருக்கோவையார் நூல்களில் எங்ஙனம் கையாளப்படுகிறது என ஆராய்கிறார் குமாரசாமி ஐயர்.  இது ஒரு தொடர் கட்டுரை]

7. புத்தக மதிப்புரை
இதழாசிரியர்
[அனந்த கிருஷ்ணையங்கார் எழுதிய 'தனிப்பா மஞ்சரி' ஆசிரியர் புலவர் காளமேகம் போன்ற திறமை கொண்ட ஒரு  புலவர் எனக் காட்டுகிறது என்றும்; 
சிவானந்தையர் எழுதிய 'புலியூர்ப் புராணம்' சிறந்த பொருள் நயம், சொல் நயம் கொண்ட பாடல்களைக் கொண்டது எனவும் பாராட்டப்படுகிறது. இந்த நூலை நிறைவு செய்யாமல் சிவானந்தையர் மறைந்துவிட்டாலும், தனது கணவரின் நினைவு மலராக வெளிக்கொணர உதவிய அவரது மனைவியும்  பதிப்பித்த தம்பையாப்பிள்ளையும் பாராட்டப் பட்டுள்ளார்கள்]

8. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்


________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்



வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Wednesday, July 27, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 2

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 2
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 2

_________________________________________________________

1. வல்வடுகு நான்கு  (தொடர்ச்சி ...)
K.S. சுந்தரம் பிள்ளை
[விஜயநகர மன்னர்களின் பிரதிநிதிகளாக ஆண்ட தஞ்சை நாயக்க மன்னர்கள் பற்றி சுந்தரம் பிள்ளை இக்கட்டுரையில் விவரிக்கிறார். கட்டுரையின் இப்பகுதி தரும் செய்திகள்:     பீஜப்பூர் சுல்தான் உதவியுடன் தஞ்சையை மீட்டத் தஞ்சை நாயக்கர் வாரிசான செங்கமலதாசை, பீஜப்பூர் சுல்தான் மறைவிற்குப்பின்னர் ஆட்சி ஆசை கொண்ட சுல்தானின் பிரதிநிதி தஞ்சை நாயக்கரை விரட்டியடித்துக் கவர்ந்து கொள்கிறார்.  தஞ்சையில் ஏற்பட்ட கலவரத்தைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு  மராட்டிய மன்னர் சிவாஜி தஞ்சையைக் கைப்பற்ற, 17 ஆம்  நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தஞ்சை  மராட்டியரின் கைகளுக்கு மாறுகிறது என்ற வரலாற்றுத் தகவலும், நாயக்க மன்னர்களது இறைமாட்சி  இப்பகுதியில்  இடம் பெற்றுள்ளது]

2. கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[4 ஆம்  அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதி, முதல் நிலை பிரதானம், அந்நுவயக் காட்சியின் ஆதார உரைமொழி, மில்லின் உரைகள், நிலைமாற்றல், மாறுகோணிலை மாற்றம், தொடையலியல், கணித முறைகளை அந்நுவய முறையாகக் காட்டுதல் ஆகிய கருத்தாக்கங்களை விளக்குகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

3. வாழ் நாள் (தொடர்ச்சி ...)
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[உடலுடன் உயிர் இணைந்து செயலாற்றும் காலமான 'வாழ் நாள்' குறித்த சிந்தனை; வாழ்நாள் குறித்த  கருத்தாக்கங்கள், இலக்கியம் கூறும்  விளக்கங்கள், உலகளாவிய தத்துவங்கள், செய்திகள், சான்றுகள்   ஆகியவற்றின் தொகுப்பு]

4. தமிழ்ப் பத்திரிக்கையின் வரலாறு (தொடர்ச்சி ...)
ப. கலியாணசுந்தரம் பிள்ளை
[பத்திரிக்கை வளர்ச்சிக்கு உதவுவது உரைநடை.  தமிழகத்தில் பத்திரிக்கைகளின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் வரலாற்றுப் பார்வையாக அறிமுகப்படுத்துகிறார் கலியாணசுந்தரம் பிள்ளை]

5. இந்தியாவும் சீனாவும்  (தொடர்ச்சி ...)
T.S. நடராசன்
[சீனப் பேராசிரியர் 'டான்-யுன்-ஷன்'   சாந்திநிகேதனத்தில் நிகழ்த்திய சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு- பண்டைய  காலம் தொட்டு சீனாவும் இந்தியாவும் கல்வி, மொழி ஆகியவற்றில் மேம்பட்டு உலகில் சிறந்து விளங்கியமை பற்றியும்; இரு நாடுகளின் பெளத்த மத நூல்கள் மற்ற  நாட்டைப் பற்றி குறிப்பிடுவதைப் பற்றியும்; வாழ்வியல் , மக்கள் கொண்ட நல்லொழுக்கப் பண்புகளின் ஒற்றுமை, கலைவளர்ச்சி, நாகரிகம் எனப் பலவற்றிலும்   தொடர்ந்து 5,000 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளும்  சிறந்து விளங்குவது பற்றியும்  விவரிக்கும் இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]


________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்



வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, July 17, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 1




வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 1
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 1

_________________________________________________________

1. வாழ் நாள்
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[உடலுடன் உயிர் இணைந்து செயலாற்றும் காலமான 'வாழ் நாள்' குறித்த சிந்தனை; வாழ்நாள் குறித்த இந்தியக் கருத்தாக்கங்கள், தமிழ் இலக்கியம் கூறும்  விளக்கங்கள், உலகளாவிய தத்துவங்கள் குறித்த மறுபார்வை ஆகியவற்றின் தொகுப்பு. இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]


2. தமிழ்ப் பத்திரிக்கையின் வரலாறு
ப. கலியாணசுந்தரம் பிள்ளை
[பத்திரிக்கை வளர்ச்சிக்கு உதவுவது உரைநடை. பண்டைய இலக்கிய, இலக்கண, நிகண்டுகள் 'பாடல்' வடிவில் அமைந்து கல்வியிற் சிறந்தாருக்கே  பயனளிக்கும் வகையில் அமைந்தது.  பாடல்களில் ஆங்காங்கே உரைநடை அமைந்த சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களைத் தமிழர் பலகாலமாக அறிந்திருப்பினும், பாக்களையே பெரிதும் போற்றி வளர்க்க முற்பட்டனர்.
மொழி வளர்க்க உதவும் 'இலக்கிய பத்திரிக்கைகள்', சமயம் வளர்க்க உதவும் 'சமயப் பத்திரிக்கைகள்', சமுதாய முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட 'சமுதாய சீர்திருத்தப் பத்திரிக்கைகள்', குறிப்பிட்ட வகுப்பினரின் நலம் காக்க வெளியிடப்படும் 'வகுப்பு முன்னேற்றப் பத்திரிக்கைகள்', இவ்வாறு உயர் நோக்கங்கள் தவிர்த்து பொதுமக்களை மகிழ்விக்க என்னும் 'நகைச்சுவைப் பத்திரிக்கைகள்', நாட்டின் அரசியல் முன்னற்றதைக் கருதும் 'தேசீயப்  பத்திரிக்கைகள்' எனப் பல வகை பத்திரிக்கைகள் தோன்றின.
இந்த ஆறு வகை பத்திரிக்கைகளின் பண்புகளை ஆராய்ந்து,   தமிழகத்தில் இவ்வகைப் பத்திரிக்கைகளின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் வரலாற்றுப் பார்வையாக அறிமுகப்படுத்துகிறார் கலியாணசுந்தரம் பிள்ளை. இது  ஒரு தொடர் கட்டுரை]

3. கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[4 ஆம்  அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதி, அப்பியாசங்கள், முதல் நிலைத் துறைகள், முதல், இரண்டாம், மூன்றாம்  நிலைச் சிறப்பு விதிகள்,  அவற்றைப் பற்றியக் குறிப்புரைகள் ஆகிய கருத்தாக்கங்களை விளக்குகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

4. பிரம்பில் என்னும் வைப்புத் தலம்
வை. சுந்தரேச வாண்டையார்
[அப்பரால் பாடப்பட்ட தேவார வைப்புத் தலமான பிரம்பில் என்ற ஊரின் வரலாறு இக்கட்டுரையில்  ஆராயப்படுகிறது.  தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் 'வேளாண் பிரம்பூர்' மற்றும் 'கள்ளப் பிரம்பூர்' என்ற இரு ஊர்கள் அவ்வூர்க் கோவில்  கல்வெட்டுகளில் பிரம்பில்  அழைக்கப்பட்டுள்ளன.  இருப்பினும், பிரம்பில் எனக் குறிப்பிடும் வேளாண் பிரம்பூர் கல்வெட்டு காலத்தால் முற்பட்டது.  ஆனால் பிரம்பில்  எனக் குறிப்பிடும் கள்ளப் பிரம்பூர் கல்வெட்டு பிற்காலத்தியது மட்டுமல்ல, அதற்கும் முன்னர் அவ்வூர் வேறு பெயரில் (ராஜ சுந்தர சதுர்வேதி மங்கலம், என்று ) அழைக்கப்பட்டதாகவும் கோவிலின் காலத்தால்  முந்திய பிற கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகிறது.  எனவே, காலத்தால் முந்திய கல்வெட்டில் பிரம்பில் என்ற  குறிப்பு கொண்ட  வேளாண் பிரம்பூர் என்ற ஊரே அப்பர் காலத்தில் பிரம்பில்  அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நிறுவுகிறார் கட்டுரை ஆசிரியர்.  தென்னிந்தியக் கல்வெட்டு நூல்களில் இடம் பெறாத அவ்வூர்களின் கல்வெட்டுகளையும்,  சோழ நாட்டின் வளநாடு, கூற்றம் போன்ற ஆட்சிப் பிரிவுகள் பற்றியும் இக்கட்டுரை தகவல்கள் பல தருகின்றது]

5. இந்தியாவும் சீனாவும்
T.S. நடராசன்
[சீனப் பேராசிரியர் 'டான்-யுன்-ஷன்'   சாந்திநிகேதனத்தில் நிகழ்த்திய சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு- பண்டைய  காலம் தொட்டு சீனாவும் இந்தியாவும் கல்வி, மொழி ஆகியவற்றில் மேம்பட்டு உலகில் சிறந்து விளங்கியமை பற்றியும்; இரு நாடுகளின் பெளத்த மத நூல்கள் மற்ற  நாட்டைப் பற்றி குறிப்பிடுவதைப் பற்றியும்; வாழ்வியல் , மக்கள் கொண்ட நல்லொழுக்கப் பண்புகளின் ஒற்றுமை, கலைவளர்ச்சி, நாகரிகம் என பலவற்றிலும்   தொடர்ந்து 5,000 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளும்  சிறந்து விளங்குவது பற்றியும்  விவரிக்கும் இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

6. வல்வடுகு நான்கு - A Chapter in the History of Tanjore. The Nayak Kings.
K.S. சுந்தரம் பிள்ளை
[சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னர் (1200 களில்) தமிழ் மன்னர்கள் தங்களுக்குள் ஒற்றுமையின்றி இருந்த பொழுது, தமிழகத்தில் அமைதி குலைந்த பொழுது, அலாவுதீன் கில்ஜி அனுப்பிய அவரின் தளபதி மாலிக்காபூரும் படைகளும் மதுரையை ஆட்சி செய்த  இராசசிம்ம பாண்டியனை விரட்டியடித்து தமிழகப்பகுதியை சூறையாடி ஆட்சியைக்  கைப்பற்றினர்.  அந்நாளில் இருந்து அன்னியர் ஆட்சியின் கீழ் சென்ற தமிழகத்தை முகமதியரிடம் இருந்து தங்கள் வசம் கைப்பற்றினர் விஜயநகர மன்னர்கள்.
அவர்களின் பிரதிநிதிகளாக ஆண்ட தஞ்சை நாயக்க மன்னர்கள் பற்றி சுந்தரம் பிள்ளை இக்கட்டுரையில் விவரிக்கிறார். கட்டுரையின் இப்பகுதி தரும் செய்திகள்  வழியாகத்  தஞ்சையை ஆண்ட அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர், விஜய ராகவ நாயக்கர் ஆகியோர் குறித்தும்;
மதுரை நாயக்கர்களுடன் ஏற்பட்ட பகையால் மதுரை நாயக்கர்கள் போரில் தஞ்சை நாயக்கர்களை வென்று, 17 ஆம்  நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தஞ்சையை தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள் என்ற வரலாற்றுத் தகவலும் இப்பகுதியில்  இடம் பெற்றுள்ளது.  இக்கட்டுரை தொடரும்]

7. தமிழ்ச்செய்திகள்
இதழாசிரியர்
[கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா (மே  13, 1936) குறித்த ஏற்பாடுகள் குறித்த தகவல்கள்; அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தமிழ் வளர்ச்சி நோக்கத்தில் உருவாக்கப்பட்டது என்றாலும் நிர்வாகம் தமிழ்க் கல்விக்கும், தமிழிசைப் புலமைக்கும் ஏற்றம் அளிக்கும் வகையில் பாடத்திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது; சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம், திருநெல்வேலி பிரிவின் செப்டெம்பர் 1936 விழா ஏற்பாடு குறித்த தகவல்கள்; இம்மாதத்தில் சங்கக் கல்லூரிக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களின் பெயர், வழங்கிய தொகை விவரம் குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.



________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]