Friday, September 2, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 5

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 5
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 5

_________________________________________________________

1. பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்  (தொடர்ச்சி ...)
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[முன்னர் தமிழ்ப் பொழிலில் பரணர் குறித்து ஆய்வுக் கட்டுரையை  எழுதியவர் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை. இக்கட்டுரையில், சென்னைப் பல்கலைக் கழக விரிவுரையாளரும், பன்மொழி அறிஞருமான வே. வேங்கடராஜுலு ரெட்டியார் எழுதிய 'பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்' மீது நூல் மதிப்புரை  எழுதியுள்ளார்.]

2. செருத்துணையாரும் புகழ்த்துணையாரும் அவதரித்த திருப்பதிகள்  (தொடர்ச்சி ...)
T.V. சதாசிவப்பண்டாரத்தார்
[செருத்துணையாரைத் தொடர்ந்து வரும் இப்பகுதி புகழ்த்துணை நாயன்மார் குறித்த பகுதி;
திருத்தொண்டர் திருவந்தாதியும், பெரியபுராணமும் புகழ்த்துணை நாயன்மார் பிறந்ததாகக் குறிப்பிடுவது செருவிலிபுத்தூர் என்ற ஊர்தனை.  ஆயினும், கொற்றங்குடி உமாபதிசிவனார் தான் இயற்றிய திருத்தொண்டர் புராண சாரத்தில்  அவ்வூரை 'அழகார் திருப்பத்தூர்' என்று காட்டுகிறார்.  உமாபதிசிவனாரும்  சுந்தரமூர்த்தி நாயனாரும்  இவ்வாறாகக்  குறிப்பிடுவது  அரிசிற்களாப்புத்தூர் பதிகத்தின் அடியொட்டி என்பது புலப்படுகிறது. சம்பந்தரும் தம் பதிகத்தில் இவ்வூரைக்  குறிப்பிடுவார்.

இக்காலத்தில்  செருவிலிபுத்தூர் என்ற ஊர் காணப்பெறவில்லை.   அழகார் திருப்புத்தூர் இந்நாளில் அழகாத்திரிப்புத்தூர் எனவும் அழகாப்புத்தூர் எனவும் திரித்து அழைக்கப்படுகிறது. இத்தலம் கும்பகோணத்திலிருந்து குடவாயில் செல்லும் பெருவழியில் அரிசில் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது   எனக் காட்டுகிறார் சதாசிவப்பண்டாரத்தார். ]

3. திருக்குறணுதலிய நெறிமுறை (தொடர்ச்சி ...)
K. சோமசுந்தரம் பிள்ளை
[திருக்குறள் ஒழுக்க நெறியையும், அன்பையும் அறத்தையும் முதன்மைப்படுத்துகிறது என்பதை எடுத்துக் காட்டும் நோக்கில் சோமசுந்தரம் பிள்ளை எழுதும் தொடர் கட்டுரையின் இப்பகுதியில்;  'சினம் காக்க'  என   வள்ளுவர் அறிவுறுத்தியவை விளக்கப்படுகிறது.  இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

4. நெடுந் தொகைக் குறும்பொருள் (தொடர்ச்சி ...)
முத்து சு. மாணிக்கவாசக முதலியார்
[சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களுள் நெடுந்தொகை என்றும் கூறப்படும் அகநானூற்றுப் பாடல்களுக்கு சிற்றுரை வரைகிறார் மாணிக்கவாசக முதலியார்.

தொடர் கட்டுரையின் இப்பகுதியில்,  'கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் புழுகின்' எனத் துவங்கும் 9  ஆம் பாடலுக்கு (பாலை; வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது)  தனது சிற்றுரையை  எழுதியுள்ளார் மாணிக்கவாசக முதலியார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

5. புத்தக மதிப்புரை
இதழாசிரியர்
உவேசா அவர்களின் 'புதியதும் பழையதும்',  'கனம் கிருஷ்ணையர்', கோபாலகிருஷ்ண பாரதியார்'  ஆகிய  மூன்று நூல்களும்;
R. V. இராமசுவாமி எழுதிய 'சிந்தனைக் களஞ்சியம்' என்ற கட்டுரைத் தொகுதியும்;
ஆ.  மாரிமுத்து அவர்களின் புத்தரின் அறவுரைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலான 'சமயங்களின் சக்கரச் சுழற்சி' என்ற நூலும் பொழிலின் வாசகர்களுக்கு  இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

6. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]


No comments:

Post a Comment