Friday, July 1, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 8

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 8
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 8

_________________________________________________________

1. சிலசொற்களின் பொருள்  (தொடர்ச்சி ...)
வே. வேங்கடராசலு ரெட்டியார்
[தமிழகராதியில் பொருள் தரப்பட்டுள்ள தொண்டு, பண்டு, பஞ்சு, முற்றும், வடி  ஆகிய சொற்களின் பொருள் விரிவாக விளக்கப்படுகிறது]

2. கன்னட நாட்டு ஹோய்சள அரசர்களின் சிற்பச் சிறப்புகள்  - ஹள பீட் ஹோய்சளேச்சுரர் ஆலயம்   (தொடர்ச்சி ...)
சி.கு. நாராயணசாமி முதலியார்
[தொடர் கட்டுரையின் இப்பகுதியில், 'ஹள பீட் ஹோய்சளேச்சுரர் ஆலயம்  முகமதியர்கள் படையெடுப்பினால் கொள்ளையடிக்கப்பட்டுச் சீர்குலைந்தது; இவ்வூரில் இருந்த  720 ஆலயங்களில் எஞ்சியிருப்பவை இக்கோவிலும்,  ஆதிநாதேசுரர், சாந்தீசுரர், மற்றும் பார்சுவநாதேசுரர் ஆலயங்கள் மட்டுமே என்ற தகவலும்;  ஆலயத்தின் சிற்பிகள் குறித்தும்,  மேலைநாட்டுச் சிற்ப அறிஞர் கோவிலின் சிற்பங்கள் குறித்துக் கூறிய கருத்துக்களும்; இக்கோவிலின் சிற்பக்கலையின் சிறப்பிற்குக் காரணம் ஹளபீட் பகுதியின் 'புஷ்பகிரி' என்ற மலையில் கிடைக்கும் "பலபக்கல்கள்" என்ற மாக்கற்களே காரணம் என்ற தகவல்களும் கொடுக்கப் பட்டுள்ளன]

3. வரருசி கதை (தொடர்ச்சி ...)
R. பொன்னுசாமி பிள்ளை
[வடமொழிப் புலவர் பாணினி முனிவர் எழுதிய 'அஷ்டாத்யாயீ' என்ற இலக்கண நூலுக்கு 'வார்த்திகம்' என்ற உரைநூலை எழுதியவர் வரருசி என்பவர். வரருசியாரின் வாழ்க்கை வரலாறு 'கதாசரித்சாகரம்' என்ற கதைநூலில் இடம்பெற்றுள்ளது. அக்கதையைத் தழுவி வரருசியாரின்  கதையை பொன்னுசாமி பிள்ளை எழுதியுள்ளார்.
இப்பகுதியில்; வரருசியார்  அமைச்சர் பதவி ஏற்று நடத்திய செயல்கள் குறிப்பிடப்படுகிறது, கதையின் போக்கு பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை போன்று நம்ப  இயலாத புனைவுகள் பல நிரம்பியவை]

4. நயன நூல் நவநீதம் (தொடர்ச்சி ...)
S. அமிர்தலிங்கம் பிள்ளை
[ஐம்பொறிகளில் முக்கியத்துவம் வாய்ந்த கண் குறித்த கட்டுரை: கண்ணின் அமைப்பு, தொழில் என உயிரியல் அடிப்படை கொண்ட விளக்கங்களுடன் விழிகள் குறித்த ஒரு  விரிவான விளக்கக் கட்டுரை.
கட்டுரையின் இப்பகுதியிலும்; கண் நோய்கள் குறித்த தகவல் தொடர்கிறது. இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

5. முல்லைத்தேர் - ஒரு சிறு நாடகம்
கு. நா. சுந்தரேசன்
[பாரி முல்லைக்கு வழங்கிய தேரை, கள்வர் இருவர் கவர முற்படும் செயலை பாரி முறியடிக்கும்  காட்சி]

6. தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி, கலைமகள் கல்லூரி  ஆண்டுவிழாக்கள்
சிவ. குப்புசாமி
[அக்டோபர் 1935 இல் இருநாட்கள் நடைபெற்ற கல்லூரி ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன]

7. செய்திகள்
இதழாசிரியர்
[1935 ஆம் ஆண்டின் திருக்குறள் நாட்குறிப்புக்கு மதிப்புரை  மற்றும்  இம்மாதத்தில் சங்கக் கல்லூரிக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களின் பெயர் , வழங்கிய தொகை விவரம் குறிப்பு]


________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment