Monday, July 4, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 11

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 11
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 11

_________________________________________________________

1. நெடுந் தொகைக் குறும்பொருள் (தொடர்ச்சி ...)
முத்து சு. மாணிக்கவாசக முதலியார்
[சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களுள் நெடுந்தொகை என்றும் கூறப்படும் அகநானூற்றுப் பாடல்களுக்கு சிற்றுரை வரைகிறார் மாணிக்கவாசக முதலியார்.
தொடர் கட்டுரையின் இப்பகுதியில்,  8  ஆம் பாடலுக்கு தனது சிற்றுரையை  எழுதியுள்ளார் மாணிக்கவாசக முதலியார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

2. கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[4 ஆம்  அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதி, பூர்வபதக் கள்ளநடை, 5, 6, 7, 8  ஆம் விதிகளின் விளக்கம்,   நிலைகள்  ஆகிய கருத்தாக்கங்களை விளக்குகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

3. மக்கள் வாழ்க்கை
அ. சிதம்பரநாதஞ் செட்டியார்
[செயலால் வாழ்கிறோம், ஆண்டினால் அன்று
உள்ளத்தால் வாழ்கிறோம் உயிர்ப்பினால் அன்று
உணர்ச்சியால் வாழ்கிறோம், நாழிகையால் அன்று...உண்டு உடுத்து உறங்குவதோடு வாழ்க்கை முற்றுவதில்லை, மனித இச்சையால் வாழ்க்கை தொடருகிறது. ஒருவரது உணர்ச்சி, சிந்தை, செயல்  ஆகியவற்றால் வாழ்க்கை நோக்கப்படும்  என்று கூறும் வள்ளுவர் கருத்துக்களின்  தொகுப்பு இக்கட்டுரை]

4. காவிரி
K. கோவிந்தன்
[மாணவர் ஒருவரது கட்டுரை.  காவிரியின் துவக்கம் முதல், அது கடலில் கலக்கும் வரை அதன் பாதையை விவரித்து, இலக்கிய மேற்கோள்களுடன் காவிரியின் சிறப்பைக் கூறும் கட்டுரை]

5. வள்ளல்  ஆய் அண்டிரன் - ஒரு சிறு நாடகம்
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[தமிழ்ப்பொழிலில் தமிழகமன்னர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை நாடக வடிவில் வழங்கிய சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்களால், இம்முறை வள்ளல்  ஆய் அண்டிரன் வாழ்க்கை வரலாறு  நாடக வடிவில் வழங்கப்படுகிறது.
இப்பகுதியில், ஆய் அண்டிரன் பொதிகைவேளின் மகள் பொற்பூங்கோதையை மணந்து கொள்ளும்  காட்சி  இடம் பெறுகிறது.  இந்நாடகத்தின் காட்சிகள் தொடரும்...]

6. புத்தக மதிப்புரை
இதழாசிரியர்
[- O.A. நாராயணசாமி ஐயர் அவர்களின் 'கிராம முன்னேற்றம்' என்ற நூல் கிராம மக்கள் நலத்தினை மேம்படுத்த நல்ல வழிமுறைகளைக் காட்டும் நூல் எனப் பாராட்டப் படுகிறது.
- அ. முத்துச்சாமி பிள்ளை 1843 இல் வெளியிட்ட "வீரமாமுனிவர் சரித்திரமும், பாடல் தொகுதிகள் முதலியனவும்" என்ற நூலின் பிரதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு,  ஆ.பொன்னுசாமி நாடாராலும், த. பொ. கை. அளகிரிசாமி பிள்ளையாலும் மறுபதிப்பாக வெளியிடப்பட்ட அந்நூல்  சிறப்புற அமைந்துள்ளதற்குப் பாராட்டுகள் கூறப்பட்டுள்ளது.
- சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பி. ஜெ. தாமஸ் ஆங்கிலத்தில் எழுதிய நூலை, பொருளாதார ஆய்வாளர் பா. நடராசன் தமிழில்  மொழிபெயர்த்து 'வேளாண்மைக்கடன்' என்ற தலைப்பில்  வெளியிட்ட நூல் காலத்தினால் செய்த பேருதவி எனப் பாராட்டப் பட்டுள்ளது.
- சிங்கப்பூர் அன்பு நிலையத்தார் வெளியிட்ட சுவாமி சுத்தானந்த பாரதியாரின் "பைந்தமிழ்ச்சோலை" சிறந்த தமிழ்ப்பணி என்று போற்றப்பட்டுள்ளது.

7.  செய்திகள்
[மற்றும்  இம்மாதத்தில் சங்கக் கல்லூரிக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களின் பெயர், வழங்கிய தொகை விவரம் குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment