Tuesday, July 21, 2015

திருவாவடுதுறை ஆதீனத்தின் தலபுராணங்கள் பட்டியல் 18

1311 வரலாற்றில் வளவனூர்
1312 வேலூர் கோட்டை - ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் வரலாறு
1313 திருப்புகலூர் - அக்னீஸ்வரர் திருக்கோயில் வரலாறு
1314 வேலூர் - ஸ்ரீ ஜலகண்டேஸ்வ விஜயம் (ஒரு நினைவுச்சின்னத்தின் இரகசியம்)
1315 பொன்னூர் சிவத்தலவரலாறு
1316 அம்பலவாணனேந்தல் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயில் ஸ்தலபுராணம்
1317 ஜோதிர் லிங்கத் தலங்கள்
1318 Census of India (தஞ்சாவூர் - கோயில்கள்)
1319 அம்பைத் தலபுராணம் - மூலமும், வசனச் சுருக்கமும்
1320 திருப்புத்தூர்ப் புராணம்
1321 சூதவன புராணம்
1322 திருத்துருத்திப்புராணம்
1323 திராமங்கலம்
1324 புதுவைத் தலவரலாறு
1325 சூரியனார்கோயில் - தலவரலாற்றுச் சுருக்கம்
1326 திருக்கருகாவூர் அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோயில் வரலாறு
1327 ஸ்ரீ பயறணீச்சுரர் தலபுராணம்
1328 திருக்களர்ப் புராணம்
1329 கிருபாபுரீஸ்வரர் ஆலயம்
1330 திருமுறைத்தலங்கள்
1331 திருவலிவலம் அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில்
1332 நகுலேஸ்வரம்
1333 திருக்குராவடி அழகன் (திருவிடைக்கழி தலவரலாறு)
1334 அருள்தரும் பிட்டாபுரத்தம்மை திருக்கோயில் வரலாறு
1335 திருக்கோயில் வழிபாடு (திருவாரூர் தலவரலாறு)
1336 ஸ்ரீ வாஞ்சிநாதசுவாமி திருக்கோயில் - திருவாஞ்சியம் தலவரலாறு
1337 திருப்பைஞ்ஞீலி தலவரலாறு
1338 திருப்பைஞ்ஞீலி தலவரலாறு
1339 திருக்கழுக்குன்றம் தலவரலாறு
1340 ஆதிசைவர் மரபும் சான்றோர்களும்
1341 ஆதிசைவர் மரபும் சான்றோர்களும்
1342 கிரிவலங்களத் தலபுராணம்
1343 மண்ணிப்படிக்கரை ஸ்தலமஜாத்மியம்
1344 நவக்கிரக தோஷ பரிகார தலங்கள்
1345 மாசிமகமும் மங்கலநீர் விழாவும்
1346 திரிமூர்த்திமலை புராண வசனம்
1347 பொன்னூர் சிவத்தல வரலாறு
1348 ஸ்ரீ காந்திமதி அம்பாள் ஸ்ரீ நெல்லையப்பர் சுவாமி
1349 வேனுவனப் புராணம்
1350 திங்களூர் திருத்தல வரலாறு
1351 கதிராமங்களம் ஸ்ரீ வரதுர்க்காமரமேஸ்வரி
1352 பாவநாசத் தலபுராணம்
1353 பாவநாசத் தலபுராணம்
1354 நேரிசையாச்சிரியப்பா
1355 திருவீழிமிழலை திருத்தல மகிமை
1356 தணிகை புராணம்
1357 தேவாரத் தலங்கள்
1358 திருக்கழுக்குன்றம்
1359 விரிஞ்சிபுரம் திருத்தலவரலாறு
1360 வடவாரன்யேசுர சுவாமி திருக்கோயில் வரலாற்
1361 வெள்ளைவேம்பு மாரியம்மன் திருக்கோயில் வரலாறு
1362 வெள்ளியங்கிரி தெய்வீகம் உணர்த்தும் திருத்தலம்
1363 திருக்கோட்டியூர் தலவரலாறு
1364 அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில்
1365 வடவாரன்யேசுர சுவாமி திருக்கோயில் வரலாற்
1366 திருமயிலை சென்று பார்ப்போம்
1367 ஸ்ரீ வில்லிபுத்தூர் மடவார்வறளாகம் புதுவை தலவரலாறு
1368 சிவகங்கை சமஸ்தான தலவரலாறு
-. சேயாற்றின் மகிமை, தரிசனம்
- இளமையாக்கினார் திருக்கோயில் திருப்புலீச்சுரம்
1369 துருவலிவலத் தலவரலாறு
1370 ஏழூர் தலங்கள் வரலாறு
1371 திருவாவடுதுறை புராணம் (அ) துறைசை புராணம்


தட்டச்சியவர் திரு அன்புஜெயா!

அளித்தவர் சுபாஷிணி

Friday, July 3, 2015

திருவாவடுதுறை ஆதீனத்தின் தல புராணங்கள் பட்டியல் 17


1281 அருள்மிகு தியகராஜசுவாமி திருக்கோயில் -  திருவாரூர் தலவரலாறும் திருப்பதிகங்களும்
1282 தூத்துக்குடி - சங்கரராமேஸ்வரர் திருக்கோயில் வரலாறு 
1283 துவோ எங்கள் கோவை
1284 2004 மகாமகம் பழம்பெருமை வாய்ந்த 108 சிவ ஸ்தலங்கள்
1285 திங்களூர் திருத்தல வரலாறு (சந்திரன் தலம்)
1286 திருஎருக்கத்தம்புலியூர் தலவரலாறு
1287 திருத்துருத்தி எனும் குத்தாலம் திருத்தல வரலாறு
1288 வினைகளைத் தீர்க்கும் (பரிகாரத்) தலங்கள் 25 (பாகம் 1)
1289 ஸ்ரீ நவசக்தி ஸ்ரீ சாரதா தேவி திருக்கோயில் கூறைநாடு
1290 அம்பாசமுத்திரம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் தலவரலாறு 
1291 காரைநகர் - மணற்காடு - கும்பநாயகி முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் 2ம் நாள் உற்சவ மலர்
1292 திருத்துருத்தி எனும் குத்தாலம் திருத்தல வரலாறு
1293 திங்களூர் திருத்தல வரலாறு (சந்திரன் தலம்)
1294 தஞ்சாவூர் மாவட்ட நவக்கிரகத் தலங்களும் நவக்கிரகங்களின் வரலாறும்
1295 தேவி தபோவனம் என்கிற அம்மன்குடி கைலாச நாதசுவாமி திருக்கோயில்
1296 திருப்புடைமருதூர் தலச்சிறப்பு
1297 மகாமகம் 2004
1298 மகாமகம் 2004
1299 திருக்குறுக்கை தலவரலாறு
1300 திருக்கோயில் வழிபாடு - திருவாரூர் தலவரலாறு
1301 திருந்துதேவன்குடித் தலவரலாறு
1302 குமரமலை தலவரலாறு பாமாலை 
1303 திருபாம்புரம் - பாம்புநாதர் திருக்கோயில் தலவரலாறு
1304 திருக்கயிலை ஒரு கண்ணோட்டம்
1305 திருக்கயிலை ஒரு கண்ணோட்டம்
1306 திருஆப்பனூர் தலவரலாறு
1307 மயிலாடுதுறை ஐயாறப்பர் - அய்யாற்று பதிகங்கள்
1308 நாகம் பூசித்த ஸ்ரீ நாகபூஷணி அம்மன்
1309 பிள்ளையார்பட்டி வரலாறு
1310 12 ஜோதிர் லிங்கங்களின் கதை


சுபா

தட்டச்சி அளிப்பவர் திரு அன்பு ஜெயா

Thursday, June 25, 2015

திருவாவடுதுறை ஆதீனத்தின் தல புராணங்கள் பட்டியல் 16

254 திண்ணபுரத் திருக்கூத்தன் திருவிளையாடல்
1255 தக்ஷிணகைலாசபுராணம் பகுதி - 2 இலங்கை
1256 முத்திநகர் காஞ்சியின் மூர்த்தித்தலம் தீர்த்தங்கள் ஏகாம்பரநாதர் ஆலயமும் சிவகங்கையும்
1257 காசி க்ஷேத்திர மகிமை
1258 பாபநாசத்திலுள்ள அனைத்து ஆலயங்களின் தெய்வீக வரலாறு நூல் தஞ்சை மாவட்டம்
1259 அருள்மிகு முத்தாம்பிகை உடனாகிய அபிராமேசுவரப் பெருமான் திருக்கோயில் வரலாறு
1260 திருச்சிராப்பள்ளியை அடுத்துள்ள காவிர் - வடகரை, தென்கரைத் திருத்தலங்கள்
1261 மேலக்கடம்பூர் அருள்மிகு அமிர்தகடேசுவ்ர் திருக்கோயில் வரலாறு
1262 இந்து சமய வார வழிபாட்டு மன்ற 28ம் ஆண்டு விழா மலர்
1263 திருவையாறு தென்கயிலாய அற்புதங்கள்
1264 திருப்பனசைப்புராணம்
1265 மட்டக்களப்புச் சைவக்கோயில்கள் கொழும்பு
1266 சிவகாசி நகர் வரலாறு
1267 திருவானைக்காபுராணம் - ஞானஉபதேசப் படலம்
1268 தொண்டை நாட்டுத் திருமுறைத் தலங்கள் 32
1269 திருவாமாத்தூர் முத்தாம்பிகை உடனாகிய அபிரமேசுவரப்பெருமான் திருக்கோயில் வரலாறு
1270 காஞ்சியின் கவின்மிகு கோயில்க்ள
1271 திருக்கேதீஸ்வரம் (சிறு குறிப்பு)
1272 இறைவாச நல்லூர்த் தலபுராணம்
1273 நவக்கிரகத் திருக்கோயில்கள்
1274 உத்தரமேரூர்
1275 திருப்பெருந்துறை தலவரலாறு
1276 கங்கை கொண்டசோனேச்சமும் கருவூர்த்தேவரும்
1277 திருக்கழுக்குன்றம்
1278 திருக்குடந்தைத் திருமுறைத் தலங்களும் சைவ சமயக் கட்டுரைகளும்
1279 அறையணி நல்லூர் - ஸ்ரீ அதுல்யநாதேச்வரர் திருக்கோயில் (அரகண்ட நல்லூர் மகாகும்பாபிஷேக மலர்)
1280 வினைகளைத் தீர்க்கும் (பரிகாரத்) தலங்கள் 25 (பாகம் 1)

சுபா

தட்டச்சு செய்து அளித்தவர் திரு அன்பு ஜெயா அவர்கள்

Wednesday, June 17, 2015

நாடார்குல மித்திரன் - 1923 - பிப்ரவரி மாதத்தின் 1 வது இதழ்

வணக்கம்.

நாடார்குல மித்திரன் மின்னிதழ்  1923ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) என  மூன்று  வெளியீடுகளாக  வெளிவந்துள்ளன.


நாடார்குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில்  இன்று ...
1923 ம் ஆண்டு பிப்ரவரி 1  வெளிவந்த முதலாவது  இதழ் (மலர் 4, இதழ் 16)  மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில் ...
பக்கம் 1:
வழக்கமான சௌந்தரகாந்தி நூல்,  அமரர் புராணம் நூல்,  ஆநந்தமகிளா,  நாடார்குல மித்திரன் புத்தகசாலை நூல்களுக்கான விளம்பரங்களும்,  தூத்துக்குடி நவீன சுகபோஜன சாலை உணவு விடுதிக்கான விளம்பரமும் உள்ளன. இவற்றுடன்,  புதிய சேர்க்கையாக "புதிய இங்கிலீஷ் சம்பாஷணைப் புஸ்தகம்" என்ற விளம்பரம் ஒன்று ஆரணி திருநாவுக்கரசு பிரஸ் வெளியீடான மூன்று பாகங்கள் உள்ள இந்த நூலைப் படித்தால் மூன்று மாதங்களில் இங்கிலீஷில் சம்பாஷிக்கலாம் என்று கூறுகிறது.


பக்கம் 2:
வீரமாமுனி எழுதிய "ஸ்ரீகிருஷ்ணலீலை" என்ற தொடரில் தமிழ் வார்த்தைகளுக்குப் பஞ்சமோ பஞ்சம்.  இக்கால 'பண்ணி' தமிழ், 'செய்து' தமிழ் போல சென்ற நூற்றாண்டில் இதே காலக்கட்டத்தில் 'கொண்டு' தமிழ் என்றொரு கொடுமை இருந்திருக்கிறது.

"ஸ்ரீ பலராமகேசவ மூர்த்திகள் கோபால பாலவேஷஸ்வரூடர்களாய் சந்தோஷாதிசயமான மனோற்சாகங்களுடன்சகல பந்துக்களால் செய்யப்பட்ட ஸ்துதிகளைப் பெற்றுக்'கொண்டு' அளவிறந்த பசுக்களை சமரட்சணம் பண்ணிக்'கொண்டு' விளையாடிக்'கொண்டி'ருந்தார்கள்"

பரமன்குறிச்சி பாடசாலை கட்டட நிதிக்காக 1 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை பலர் நன்கொடை வழங்கிய விவரம் உள்ளது.

"தியாகராஜன் அல்லது திறமையுள்ள வாலிபன்" என்ற தொடரின் ஒன்பதாம்  பாகமும், இலங்கை நாடர் சங்க நிகழ்வு பற்றிய செய்தியும் இப்பக்கத்தில் இடம் பிடிக்கின்றன.


பக்கம் 3:
இப்பக்கத்தில்  நாடார்குல "சங்க விஷயங்கள்" பல இடம் பெறுகின்றன.

பக்கம் 4:
இலங்கை நாடார்குல சங்க செய்திகள் இப்பக்கத்தில்  இடம் பெறுகின்றன.

பக்கம் 5:
பத்திரிக்கை ஆசிரியர் முத்து நாடாரின்  பர்மா சுற்றுப்பயணம் பற்றியும், அங்கு நடைபெற்ற விழா, வரவேற்பு போன்ற தகவல்களும்,  செய்திகள், வாசகர் கடிதங்களும் இப்பக்கத்தில் இடம் பெறுகின்றன.

பக்கம் 6:
உலகச் செய்திகள், உள்நாட்டுச் செய்திகள் மற்றும் சுவையான தகவல்களுக்காக ஒதுக்கப்பட்ட இப்பகுதியில் உள்ள சில தகவல்கள் ...
  • சுவிட்சர்லாந்தில் சீட்டாட்டம் (சூதாட்டம்), பரிசுச்சீட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது
  • இங்கிலாந்தில் வெளியாகும் பத்திரிக்கைகளின் தகவலும் அவற்றின் வாசகர்களின் எண்ணிகையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகம் விற்பனையாகும் பத்திரிக்கைகள் குறைந்தது 7 இலட்சம் முதல் அதிகப்படியாக 18 இலட்சம் வாசகர்களைக் கொண்டுள்ளன.  ஆனால் இந்தியாவில் எந்த ஒரு பத்திரிக்கைக்கும் ஒரு இலட்சம் வாசகரகள்  கூடக் கிடையாது
  • உலகின் பல நிலநடுக்கங்களும்  அவற்றில் ஏற்பட்ட  உயிரழப்புகளும் அடங்கிய   தகவல் ஒன்றில், 1737 இல் இந்தியாவில் ஏற்பட்ட ஒரு நிலநடுக்கத்தி ஒன்றரை இலட்சம் மக்கள் உயரிழந்ததாகத்  தகவல் இடம் பெற்றுள்ளது.
  • மக்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு, நாடார்குல மக்களை பனை மற்றும் கள் விற்பனை தொழிலைக் கைவிட்டு உழவு, கைத்தொழில் மேற்கொள்ளும்படி அறிவுரை கூறப்பட்டுள்ளது.

பக்கம் 7:
கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கட்டுரை ஒன்றினை கே. கந்தசாமி என்ற கல்லூரி மாணவர் எழுதியிருக்கிறார்.  இது தொடராக வரும் என்ற குறிப்புள்ளது.  திருமங்கலம்,கல்லுப்பட்டி நாடார் வித்யாசாலைக்கு லோயர் செகண்டரி தேரிய ஆசிரியரோ, ஆசிரியையோ தேவை என்றும் குடும்பத்துடன் வரவேற்கப்படுகிறார்கள் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  நாடார்குல மக்கள் அளித்த நன்கொடை விவரங்களும் "போஷகப்பிரபுக்கள்" ஆகிய நன்கொடையாளர்கள் பற்றிய தகவலும் இப்பக்கத்தில் இடம் பெற்றுள்ளன.


நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி






அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:


Friday, June 5, 2015

நாடார்குல மித்திரன் - 1923 - ஜனவரி மாதத்தின் 3 வது இதழ்

வணக்கம்.

நாடார்குல மித்திரன் மின்னிதழ்  1923ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) என  மூன்று  வெளியீடுகளாக  வெளிவந்துள்ளன.


நாடார்குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில்  இன்று ...
1923 ம் ஆண்டு ஜனவரி 21  வெளிவந்த மூன்றாவது  இதழ் (மலர் 4, இதழ் 15)  மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில் ...
பக்கம் 1:
சௌந்தரகாந்தி நூல்,  அமரர் புராணம் நூல்,  ஆநந்தமகிளா,  நாடார்குல மித்திரன் புத்தகசாலை நூல்களுக்கான விளம்பரங்களும்,  தூத்துக்குடி நவீன சுகபோஜன சாலை உணவு விடுதிக்கான விளம்பரமும், பரமன் குறிச்சி நாடார் உயர்தர எலிமெண்டரி பாடசாலைக்காக நன்கொடை வேண்டுகோளும் வெளியிடப்பட்டுள்ளன
(இவை யாவும் சென்ற இதழிலும் எவ்வித மாற்றமும் இன்றி இடம் பெற்றவையே).

பக்கம் 2:
"தியாகராஜன் அல்லது திறமையுள்ள வாலிபன்" என்ற தொடரின் எட்டாம் பாகமும், "நம்பிக்கை" என்ற மனவளக்கட்டுரையும் இடம் பெற்றுள்ளன.

விஜயதுரைசாமிக்கிராமணி எழுதிய"குலத்தொழில் யாது?" என்ற (விலை 5 அணா, 64 பக்கம்) நூல் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.  அதில் நாடார்களின் பூர்வீகத் தொழில் என்ன என்று வேத கால, சங்க கால இலக்கியப் பதிவுகள் காட்டுவதென்ன என்ற ஆய்வு கொடுக்கப்பட்டுள்ளது எனவும்; பத்தொன்பதாம் நூற்றாண்டு அகராதியில் சாணன் = சான்றோன், ஒரு சாதிப்பிரிவு என்று பதிவான விவரம், பிற்பாடு இருபதாம் நூற்றாண்டு அகராதியில் சாணான் = மரமேறி, கள் விற்பவர் என்று குறிப்பிடும்  அளவிற்கு சாதீய எண்ணம் மக்களிடம் ஏற்பட்டுவிட்டது என அந்த நூல் விளக்குவதாகவும் தெரிகிறது. அத்துடன் கம்பராமாயணம், சுந்தரகாண்டம், ஊர் தேடும் படலத்தில் 110* செய்யுளின் துவசர் என்பதற்கு  சாணார் என்ற பொருளை உரைநூல் அளிப்பதாகவும், அவ்வாறு முற்கால உரைகளில் இல்லையென்றும், இவ்வாறு இல்லாத பொருளைத் திணிப்பது புராணப் புரட்டு என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஆலையில், மலையின் சாரல் முழையினில், அமுத வாரிச்
சோலையில், துவசர் இல்லில், சோனகர் மனையில், தூய
வேலையில், கொள ஒணாத, வேற்கணார் குமுதச் செவ் வாய்
வால் எயிற்று ஊறு, தீம் தேன் மாந்தினர் மயங்குவாரை- 110


பக்கம் 3 மற்றும் 4:
நாடார்சங்கங்ளின் நிகழ்வுகள் பற்றிய செய்திகள் இப்பக்கங்களில்   பதிவு செய்யப்பட்டுள்ளன. மகாநாடு நிகழ்வுகள்,  1921 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் 'மீள்பதிவும்' ஆகியவை  இடம் பெற்றுள்ளன.

பக்கம் 5 மற்றும் 6:
வழக்கமான 'பழமொழித்திரட்டு' பகுதி, நாட்டுநடப்பு விவரங்களை பழமொழிகளுடன் இணைத்து வழங்குகிறது. துணுக்குகள் மற்றும்  சங்கச்செய்திகளும் அறிவிப்புகளும் இப்பங்களிலும் தொடர்கின்றன.

பக்கம் 7
இப்பக்கத்தில்  இடம் பெறுவது உலக நடப்புகள் பற்றிய தகவல்கள், குடும்பத்திற்குப் பொதுவான மருத்துவக் குறிப்புகள் சில, நன்கொடை வழங்கியோர் (போஷகப் பிரபுக்கள்) தகவல்கள், எண்ணெய் வித்து வணிகத்தின் தகவல்கள். 

இந்த இதழில் தலையங்கம் எதுவும்  இடம் பெறவில்லை, அத்துடன், தமிழக, இந்திய அரசியல் செய்திகளின் எண்ணிக்கையும் வழக்கத்தைவிடக்  குறைவு. வழக்கமான  சில தொடர்களும் இந்த இதழில் இடம் பெறவில்லை.  இதற்குக் காரணம் இதழின் ஆசிரியர் அயல்நாட்டுப் பயணத்தில் இருந்ததால் எனவும் கருத வாய்ப்புள்ளது.

குறிப்பு: * இதழ் 112 என்று குறிக்கிறது.

நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி




வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:
தமிழ் மரபு நூலகத்தில்

Wednesday, May 27, 2015

நாடார்குல மித்திரன் - 1923 - ஜனவரி மாதத்தின் 2 வது இதழ்


வணக்கம்.

நாடார்குல மித்திரன் மின் சஞ்சிகை 1923ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) என  மூன்று  வெளியீடுகளாக  வெளிவந்துள்ளன.


நாடார்குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில்  இன்று ...
1923 ம் ஆண்டு ஜனவரி 11  வெளிவந்த இரண்டாவது  இதழ் (மலர் 4, இதழ் 14)
இதழ் மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில் ...
பக்கம் 1:
சௌந்தரகாந்தி நூல், அமரர் புராணம் நூல், ஆநந்தமகிளா, நாடார்குல மித்திரன் புத்தகசாலை நூல்களுக்கான விளம்பரங்களும்,  தூத்துக்குடி நவீன சுகபோஜன சாலை உணவு விடுதிக்கான விளம்பரமும், பரமன் குறிச்சி நாடார் உயர்தர எலிமெண்டரி பாடசாலைக்காக நன்கொடை வேண்டுகோளும் வெளியிடப்பட்டுள்ளன

பக்கம் 2:
வீரமாமுனி எழுதிய "ஸ்ரீகிரிஷ்ணலீலை" என்ற தொடரும், சுதேசபரிபாலினி எழுதிய "மனமும் எண்ணமும்" என்ற மனவளக்கட்டுரையும்  இரண்டாம் பக்கத்தில் இடம் பெறுகின்றன.

பக்கம் 3:
நாடார்குல மித்திரனின் தலையங்கம் மூன்றாம் பக்கத்தில்; அன்றைய ஜாதிக்கலவர நிகழ்வொன்றை விவரித்து கண்டனத்தைப் பதிவு செய்கிறது.  தனது கனவில் முருகன் கூறியதால் அக்கினிக்காவடி எடுத்து தென்திருவிதாங்கூரில் உள்ள குமாரக்கோயில் என்ற கோயிலுக்குள் நுழைய முற்பட்டார் நாடார் இன மக்களில் ஒருவர்.  இது வதந்தியாகப் பரவி, காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இருந்தும் கலவரம் வெடித்து, நாடார்குலமக்கள் பலமாகத் தாக்கப்பட்டு விரட்டப்பட்டிருக்கின்றனர்.  பலர் பலத்த காயங்களுடன், ஆடைகள் இழந்து அவமானப்பட்டு, உயிர்தப்பிக்க நீர்நிலைகளில் குதித்து நீந்தி தப்பிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.  

"அக்கினிக் காவடியும் அடிபிடியும்" என்ற தலைப்பில் இத்தாக்குதலைக் கண்டித்த "லெட்சுமணப் பிள்ளையின் வீரமொழி" என்று அவர் ஜாதித்துவேஷப் போலிகளுக்கு விடுத்த எச்சரிக்கை பாராட்டப்பட்டுள்ளது.

பரமசிவன் பார்வதிக்கிடையில் நடைபெறும் கற்பனை உரையாடலில், உமையவள் சிவனிடம் பிச்சை எடுக்கவேண்டாம் தொழில் புரியலாம் என வேண்டுகோள் வைக்கிறார் என்ற பதிவும் இப்பக்கத்தில் உண்டு.

பக்கம் 4 மற்றும் 5:
அயல்நாட்டு  நாடார்சங்கங்ளின் நிகழ்வுகள் இப்பக்கங்களில்  பதிவு செய்யப்பட்டுள்ளன.

பக்கம் 6:
இப்பக்கத்தில்  இடம் பெறும் "செய்தித்திரட்டு" பத்திகள் இந்தியச் செய்திகள், நாடார்சங்கச் செய்திகள், வாசகர் கடிதங்கள், மாநாடுகளின் அறிவிப்புகள், துணுக்குகள் ஆகியவற்றைத் தாங்கி வந்துள்ளன.

பக்கம் 7:
"வித்யாதானமே சிறந்தது" என்ற கல்வியின் மேன்மை கூறும் கட்டுரை ஒன்றும், "தியாகராஜன் அல்லது திறமையுள்ள வாலிபன்" என்ற தொடரின் ஏழாம் பாகமும், நன்கொடையாளர்களின் பட்டியலையும் இப்பக்கத்தில் காணலாம்.



நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி





அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:

Sunday, May 10, 2015

திருவாவடுதுறை ஆதீனத்தின் தலபுராணங்கள் பட்டியல்! 15


1221 வேதாரண்யம் புராணம்
1222 திருக்கோயில் தலவரலாறு
1223 சிவதிருப்பதிகங்கள்
1224 திருத்தல வழிகாட்டி
1225 திருப்பரம்பரம் வரலாறு
1226 வனதுர்க்காதேவி வரலாறு கதிரை
1227 திருவாமாத்தூர் தலவரலாறு
1228 திருக்கழிப்பாலைப்புராணம்
1229 இந்தியத் திருக்கோயில் தர்சனம்
1230 ண்டுசேர் குழலி சமேத பாம்புரநாதர் திருக்கோயில்
1231 ஆபத்து நிவாரண கணபதி கோயில் நெய்வேலி (ஆங்கிலம்)
1232 மாயூரநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக மலர்
1233 மாயூரநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக மலர்
1234 ஸ்ரீ ஜெய்சந்தோஷிமாதா திருக்கோயில் திருவெறும்பூர் கும்பாபிஷேகமலர்
1235 சேந்தங்குடி படைவெட்டிமாரியம்மன் கும்பாபிஷேகமலர்
1236 திருநெடுங்களநாதர் திருக்கோயில் கும்பாபிஷேகமலர்
1237 குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகமலர்
1238 Maha Kumbabisegam Malar - Hindu Sankarar Sri Kamatchi Ampal Temple
1239 திருவாவடுதுறை ஸ்ரீ கோமுக்தீஸ்வ்ர் திருக்கோயில் தலவரலாறு
1240 ஐயப்ப தரிசனம் இலங்கை
1241 பினாங்கு கொடிமலை - ஸ்ரீ அருளொளி திருமுருகன் கோயில் கும்பாபிஷேகமலர்
1242 குருமண்காடு - வவுனியா - கொழும்பு - காளியம்மன் தேவஸ்தானம் கும்பாபிஷேகமலர்
1243 திருவானைக்கா புராணம் - ஞானஉபதேசம் - உரை
1244 கண்டி - ஸ்ரீ செல்வவிநாயகர் - மீனாட்சி சோமசுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகமலர்
1245 பர்வதவர்த்தினி அம்மன் கோயில் தளவாய்சுவாமி கோயில் - ரெட்டியார்பட்டி
1246 பழனி - தண்டாயுதபாணிகோயில் (கும்பாபிஷேகமலர்)
1247 சித்திர திருவிளையாடல் புராணம்
1248 சித்திர திருவிளையாடல் புராணம்
1249 மகாமகம் - குறிஞ்சிமலர் (பல கோயில் வரலாறு)
1250 ஹிந்துமித்திரன் - தமிழத்திருக்கோயில் திருவிழாக்கள் சிறப்பு மலர்
1251 சதுர கிரித்தலபுராணம்
1252 சதுர கிரித்தலபுராணம்
1253 சதுர கிரித்தலபுராணம்

சுபா