Wednesday, March 23, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 1

   


வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில். 
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 1 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 1
________________________________________________
இதழாசிரியர் R. வேங்கடாசலம் பிள்ளை

1. ஒரு திருப்பாட்டிற்கு உரை
--பண்டிதர் L. உலகநாத பிள்ளை

2. சங்ககாலச் சோழ அரச பரம்பரை
(உறந்தை, புகார்ச் சோழர்கள் பற்றிய தகவல்கள்)
-- திரு. சோமசுந்தர தேசிகன்

3. தொல்காப்பியம்
-- பண்டிதர் மு. வேங்கடசாமி நாட்டார்

4. தமிழ்மொழியும் தமிழ் மக்களுயர்வும்
-- தி. க.  உலகநாத பிள்ளை

5. தனிச் செய்யுட்கள்
-- T.V. இரத்தினசாமி

6. மழவர் வரலாறு
-- T.V.  சதாசிவப் பண்டாரத்தார்

7. பாரதமகிமை
-- தண்டமிழ்த்தொண்டன்

8. கட்டுரைக்கோவை
-- சா. சிதம்பரன்
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


Tuesday, January 12, 2016

நாடார்குல மித்திரன் - 1923 - ஏப்ரல் மாதத்தின் 1 வது இதழ்



வணக்கம்.

நாடார்குல மித்திரன் மின்னிதழ் வழக்கமாக மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) மூன்று வெளியீடுகளாக வெளிவரும். 1923ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இதழ்கள், வழக்கத்திற்கு மாறாக ... 1 மற்றும் 21 ஆம் தேதிகளில் இரு முறையாக வெளிவந்தன. 22 ஆம் இதழ் 1 ஆம் தேதியிலும், 23&24 இதழ்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு 21 ஆம் தேதியும் வெளிவந்தன.
இனி இதழ்களின் பதிவுகள் பற்றியத் தகவல்கள்...

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும்....
முத்து நாடாரின் ....

நாடார்குல மித்திரன் மின்னிதழ் வரிசையில் இன்று ...
1923 ம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று வெளிவந்த முதல் இதழ்
(மலர் 4, இதழ் 22)

மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில் ...

1 ஆம் பக்கம்:
- விளம்பரங்கள்

2 ஆம் பக்கம்:
- ஸ்ரீ கிருஷ்ணலீலை (வீரமாமுனி எழுதுகிறார்)
- மனதுக்குத் திருப்தியான வாழ்க்கை மத்திம வாழ்க்கை (கட்டுரை)
- இலங்கை வர்த்தமானம்

3 ஆம் பக்கம்:
- புதிய போஷகப்பிரபுக்களின் தகவல்கள்
- சட்டசபை தேர்தலும் நமது கடமையும் (கட்டுரை தொடர்கிறது)

4 ஆம் பக்கம்:
- நடைபெறவிருக்கும் பங்குனித் திருவிழாவினால் அலுவலக விடுமுறை காரணமாக அடுத்த இதழ் குறித்த காலத்தில் வராது என்ற அறிவிப்பு
- சங்க நடவடிக்கை குறிப்புகள், ஆசிரியரின் வெளிநாட்டுப் பயணச் செய்திகளின் தொகுப்பு

5 ஆம் பக்கம்:
- ஜார்ஜ் மன்னர் தம் காலத்தை எங்ஙனம் செலவழிக்கிறார்
- வொய்.ஏ. அஸ்ரிய நாடார் என்ற பிரிட்ஷ் பட்டாளத்தின் மாவீரர் சென்னையில் புதிய பதவி ஏற்கிறார்
- ஐரோப்பாவின் நிலைமை போன்ற
தகவல்கள் இடம் பெற்றுள்ளன

6 ஆம் பக்கம்:
கடிதங்கள், குட்டிக்கதைகள் திரட்டு, தமிழகச் செய்திகள் திரட்டு, நாடார் சங்க செய்தித் திரட்டு

7 ஆம் பக்கம்:
- ஈகை (கட்டுரை தொடர்கிறது)
- சிந்தனை மொழிகள் (கட்டுரை)
- கிருஷிகக் களஞ்சியம்
- வியாபாரக் குறிப்புக்கள்
- போஷகப்பிரபுக்களின் தகவல்கள்

8 ஆம் பக்கம்:
- விளம்பரங்கள்

விசேஷ அனுபந்தம் என்ற சிறப்பு இணைப்பு பக்கங்கள்
இணைப்பு பக்கம் A:
- ஆசிரியரின் இரங்கூன் பயணக் கட்டுரை - "பிரயாணத்தில் கண்ட காட்சி - இரங்கூன்"

இணைப்பு பக்கம் B:
- சட்டசபை - உப்பு வரி
- நமது கிழச்சிங்கம் - ஸ்ரீமான் ஸ்ரீ விஜய துரைசுவாமி கிராமணி பற்றிய கட்டுரை
- பர்மா வர்த்தமானம்

இணைப்பு பக்கம் C:
- பலதிரட்டு - ஐரோப்பிய செய்திகள்
- சென்னை சட்டசபைக் குறிப்புக்கள் - ஒதுக்கி வைக்கப்பட்ட இனங்களின் முக்கிய புள்ளி விவரங்கள்

இணைப்பு பக்கம் D:
- பொதுவர்த்தமானம் (உள்நாட்டு, வெளிநாட்டு செய்தித் துணுக்குகள்)


நன்றி: திலகபாமா
மின்னிதழாக்கம்: தேமொழி



வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:
தமிழ் மரபு நூலகத்தில்

Monday, January 11, 2016

நாடார்குல மித்திரன் - 1923 - மார்ச் மாதத்தின் 3 வது இதழ்


வணக்கம்.

நாடார்குல மித்திரன் மின்னிதழ் 1923ம் ஆண்டு மார்ச் மாதத்தில், மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) என மூன்று வெளியீடுகளாக வெளிவந்துள்ளன.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும்....
முத்து நாடாரின் ....

நாடார்குல மித்திரன் மின்னிதழ் வரிசையில் இன்று ...
1923 ம் ஆண்டு மார்ச் 21 அன்று வெளிவந்த மூன்றாவது இதழ்
(மலர் 4, இதழ் 21)

மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில் ...

1 ஆம் பக்கம்:
- விளம்பரங்கள்

2 ஆம் பக்கம்:
- ஸ்ரீ கிருஷ்ணலீலை (வீரமாமுனி எழுதுகிறார்)

- ரேடியோ டெலிபோன் (என்ற கட்டுரை அப்பொழுது புதிய கண்டுபிடிப்பாக - பரவிவரும் தொலைக்காட்சி பற்றி விளக்க முற்படுகிறது) 

- சுதந்திரக் கோட்டை (நாடார்களின் மத்திய காலம் பற்றிய கட்டுரை)

3 ஆம் பக்கம்:
- சட்டசபை தேர்தலும் நமது கடமையும்

- மித்திரன் அபிமானிகளுக்கோர் விண்ணப்பம், மகாஜன சங்கத்தார் நியமித்த கமிட்டி போன்ற சங்கத்தின் தகவல்கள்

4 ஆம் பக்கம்:
- மதுவிலக்கைக் கொண்டு வருமாறு அரசிற்குக் கோரிக்கை !!!!!! - தலையங்கம்

- சங்க நடவடிக்கை குறிப்புகள்

5 ஆம் பக்கம்:
- தீண்டாமைக்குத் தீர்மானமா? என்ற பகுதி பிப்ரவரி 19, 1923 அன்று மகாராஷ்டிரத்தில் சங்கராச்சாரியார் தலைமையில் கூடிய குழு எங்கெங்கு தீண்டாமை இருக்கலாம், எங்கெங்கு கூடாது எனத் தீர்மானம் கொண்டுவர முயன்றதை, தீண்டாமை என்பது என்னவென்றே புரியாத அசட்டுத் தீர்மானம் என விமர்சிக்கிறது. கோவில்கள், பரிசுத்த தளங்கள், கிணறுகள் ஆக்கிய இடங்களைத் தவிர(?) தீண்டாமை கூடாது என்பதே அத்தீர்மானம் கூறுவது.

- நாடார் மகாஜன சங்கக் கவுன்சில் ஸ்பெஷல் மீட்டிங்கு, பத்திரிக்கை ஆசிரியர் நாடு திரும்பிய தகவலும் பயணம் பற்றிய விவரிப்பும் கொண்ட கட்டுரை

6 ஆம் பக்கம்:
- செய்தித் திரட்டு நாடார் சங்க செய்திகளையும்

- பொது வர்த்தமானம் உலக நடப்புகளையும் தருகிறது

7 ஆம் பக்கம்:
- ஈகை (கட்டுரை)

- வர்த்தகம் (கட்டுரை)

- இலங்கை சங்க வர்த்தமானங்கள்

- போஷகப்பிரபுக்களின் தகவல்கள்

முதல் பக்க விளம்பரங்கள்:
- சௌந்தரகாந்தி - நாவல்
- ஆங்கிலம் உரையாடல் கற்றுக் கொடுக்கும் நூல்
- கூந்தல் தைலம், மகாசந்தானாதி தைலம்
- பல் மருத்துவர்
- புதிய உணவகம்


நன்றி: திலகபாமா
மின்னிதழாக்கம்: தேமொழி



வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:
தமிழ் மரபு நூலகத்தில்

Friday, January 8, 2016

நாடார்குல மித்திரன் - 1923 - மார்ச் மாதத்தின் 2 வது இதழ்

வணக்கம்.

நாடார்குல மித்திரன் மின்னிதழ் 1923ம் ஆண்டு மார்ச் மாதத்தில், மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) என மூன்று வெளியீடுகளாக வெளிவந்துள்ளன.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும்....
முத்து நாடாரின் ....
நாடார்குல மித்திரன் மின்னிதழ் வரிசையில் இன்று ...
1923 ம் ஆண்டு மார்ச் 11 அன்று வெளிவந்த முதலாவது இதழ் 
(மலர் 4, இதழ் 20)
மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில் ...

1 ஆம் பக்கம்:
- விளம்பரங்கள்

2 ஆம் பக்கம்:
- தியாகராஜன் அல்லது திறமையுள்ள வாலிபன் தொடர் நிறைவுற்றது
சுபம்..சுபம்..சுபம்...

- நாம் எங்ஙனம் கைத்தொழிலை விரிவு செய்யக் கூடும்

- வாய்ப்பேச்சு (பினாங்கின் "தேசானுகூலன்" பத்திரிக்கையின் தலையங்கம்)

3 ஆம் பக்கம்:
- விருதுப்பட்டி வருஷப்பூர்த்திக் கொண்டாட்டம்

- கடிதங்கள்

- காலப்போக்கு (இந்திய சுதந்திரம் பெறுவது பற்றிய நாட்டுநடப்பு செய்திகள்)

- செய்தித் திரட்டு (தமிழக செய்தித் துணுக்குகள்)

4 ஆம் பக்கம்:
- வருகை (இதழின் ஆசிரியர் அயல்நாட்டுச் சுற்றுப்பயணம் முடித்துத் திரும்புகிறார்)

- நாடார் பாங்கு (தலையங்கம் - மிகப் பெரிய கட்டுரை பங்கு சந்தைத் தகவல்களும் உள்ளன)

5 ஆம் பக்கம்:
- குறிப்புக்கள் (சட்டசபை தேர்தலும் நமது கடமையும்)

- நாடார் மகாஜன சங்கக் கவுன்சில் மீட்டிங்கு மதுரை (மினிட்ஸ் ஆஃப் த மீட்டிங்)

6 ஆம் பக்கம்:
- சங்க விஷயங்கள் (செய்தித் தொகுப்பு)

- சட்டசபை குறிப்புகள் (இந்திய கவர்ன்மெண்ட் நிதிநிலை)

- இந்திய தேசத்தவர்கள் (கட்டுரை)

7 ஆம் பக்கம்:
- இலங்கை, பர்மா நாட்டார் சங்க வர்த்தமானங்கள்

- சுகாதாரக் குறிப்புகள் (அழகுக் குறிப்புக்கள் போன்ற தகவல்கள்)

- துண்டு துணுக்குகள் (பெரும்பாலும் கருத்தைக் கவரும் சில புள்ளிவிவரத் தகவல்கள்)

- போஷகப்பிரபுக்களின் தகவல்கள்

முதல் பக்க விளம்பரங்கள்:

- சௌந்தரகாந்தி - நாவல்
- ஆங்கிலம் உரையாடல் கற்றுக் கொடுக்கும் நூல்
- கூந்தல் தைலம், மகாசந்தானாதி தைலம்
- பல் மருத்துவர்
- புதிய உணவகம்




நன்றி: திலகபாமா
மின்னிதழாக்கம்: தேமொழி



வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:
தமிழ் மரபு நூலகத்தில்

Monday, November 30, 2015

நாடார்குல மித்திரன் - 1923 - மார்ச் மாதத்தின் 1 வது இதழ்

வணக்கம்.

நாடார்குல மித்திரன் மின்னிதழ் 1923ம் ஆண்டு மார்ச் மாதத்தில், மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) என மூன்று வெளியீடுகளாக வெளிவந்துள்ளன.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும்....
முத்து நாடாரின் ....

நாடார்குல மித்திரன் மின்னிதழ் வரிசையில் இன்று ...
1923 ம் ஆண்டு மார்ச் 1 அன்று வெளிவந்த முதலாவது இதழ் (மலர் 4, இதழ் 19) மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில் ...

1 ஆம் பக்கம்:
- பா. பி. இரத்தினபாண்டியர் அவர்கள் எழுதிய 'சௌந்தரகாந்தி' என்ற பாண்டிய வரலாற்றைக் கூறும் வரலாற்று நாவல், நாடார்குல மித்திரன் புத்தகசாலை, மல்லிகா ஆயில் கூந்தல் தைலம், 'ஆநந்தமகிளா நூல்', ஃபோட்டோ படங்கள், மூன்று மாதங்களில் ஆங்கிலம் கற்க 'புதிய இங்லீஷ் சம்பாஷணைப் புத்தகம்', தூத்துக்குடி 'நவீன சுகபோஜன சாலை' உணவு விடுதி ஆகியவற்றிற்கான விளம்பரங்கள்.

2 ஆம் பக்கம்:
- எஸ். வி எம். பாண்டியன் அவர்களின் "வாய்மை" என்ற கட்டுரை வாய்மையின் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறது.
- ஸர் சதாசிவ ஐயரின் பிரசங்கம்: "சமூக ஊழியமும் தீண்டாமையும்" என்ற கட்டுரை, உயர் நீதிமன்ற நீதிபதி சதாசிவ ஐயர் ஆந்திராவில் ஆற்றிய உரையில் தீண்டத்தகாதவர்களை கோயிலில் அனுமதிக்காத செயலைக் கண்டிக்கிறது.
- கொழும்பு ஞா. பா. வேதநாயக நாடார் அவர்களின் "நமது கைத்தொழில் நிலைமை" என்ற கட்டுரை பங்குகள் விற்று மூலதனம் சேர்த்து கூட்டுக் கம்பெனிகள் நடத்தும் அயல்நாட்டு வணிகமுறையை நம்நாட்டினரும் பின்பற்ற வேண்டும் என்ற ஆலோசனையை வழங்குகிறது.
- இலங்கை வர்த்தமானம் பகுதி அங்கு நடக்கும் தொழிலாளர் வேலை நிறுத்தம் பற்றியும், திருவாங்கூர் வர்த்தமானம் பகுதி நாகர்கோவில் நடப்புகளையும் விவரிக்கிறது.

3 ஆம் பக்கம்:
- 'நாடார் மகாஜனசங்கமும் பிரசாரமும்' பகுதி சங்கத்தின் செயல்பாடுகளைக் குறிப்பிடுகிறது.
- 'காலப்போக்கு' என்ற முருகதாசன் எழுதும் பத்தி அயல்நாட்டுத் துணுக்குகளையும் உள்நாட்டுத் துணுக்குகளையும் கொடுக்கிறது. ஐரோப்பிய செய்திகளுடன், பர்மா இந்தியாவை விட்டுப் பிரியப்போகிறது என்ற கவலையையும், சித்தரஞ்சன் தாஸ் வங்கத்திலும், ராஜகோபாலாச்சாரியார் சென்னையிலும் ஆங்கில அரசுக்கு எதிராகப் படை திரட்டுவதையும் கூறுகிறது.

4 ஆம் பக்கம்:
- தலையங்கம் பகுதி, கயாவில் கூடிய அகில இந்திய ஹிந்து மகாசபை மாநாட்டில் பண்டிதர் மதன்மோகன மாளவியா அவர்கள் முன்மொழிந்த தீர்மானங்களையும், உரையையும் அறியத்தருகிறது. இந்து முஸ்லீம் ஒற்றுமை வேண்டும் என்று கூறினாலும், இந்துக்கள் காலம் காலமாக அயல்நாட்டில் இருந்து உட்புகுந்த பிற மதத்தினரால் துன்புறுத்தப்படுவதாகவும், முஸ்லீம்களாக மதம் மாற்றப்பட்டவர்களை மீண்டும் இந்து மதத்திற்குக் கொண்டு வரவேண்டும் (அந்தக்கால 'ஹோம் கம்மிங்') போன்ற கருத்துகளும் இக்கட்டுரையில் இடம் பெறுகின்றன.
- 'குறிப்புகள்' பகுதி அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளையும், சட்டசபை நடவடிக்கைகளையும் அலசுகிறது.

5 ஆம் பக்கம்:
- "லஞ்சாய நாம:" என்ற பகுதி அக்கால அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் "பாதகாணிக்கை" பெற்றுக்கொண்டு லஞ்சலாவண்யம் தலைவிரித்தாட உடன் போவதையும், ஏழை மக்களை லஞ்சம் காரணமாக வாடுவதையும், இதை எப்படி ஒழிக்க வேண்டும் என்று சட்டசபையினர் அறியாமலிருக்கும் விந்தையையும் கண்டு வியக்கிறது. "குலைக்கும் நாய்க்குக் கொஞ்சம் கருப்பட்டி (இக்காலத்தில் பிஸ்கோத்து ?) போட்டால் அது வாலை ஆட்டுவது போல, கொஞ்சம் பணத்தை லஞ்சமாகக் கொடுத்தால் மக்கள் குழைந்து குழைந்து பணிவதைக் குறிப்பிடுவது 'பி.டிஆர். மேனிநாதன்' அவர்களின் கட்டுரை (சுமார்  நூறு ஆண்டுகளுக்கு முன்னரும் தமிழகத்தில் இதே கதிதானா?)
- 'சுதந்திரம்' பகுதி ஆத்ம சுதந்திரம், மத சுதந்திரம், தேச சுதந்திரம், நாடார்கள் சுதந்திரம் ஆகியவற்றை அலசுகிறது.

6 ஆம் பக்கம்:
- 'குலவர்த்தமானம்' பகுதி நாடார்குல நடவடிக்கைகள் பற்றிய செய்தித் துணுக்குகள் பலவற்றைத் தொகுத்தளிக்கிறது.

7 ஆம் பக்கம்:
- "நாம் பூமியில் பிறந்து வந்ததின் வேலை என்ன?" என்ற மனவளக்கட்டுரை இடம் பெறுகிறது. ஆசைகளைத் தவிர்த்து, பந்தபாசங்களை அறுத்து முக்தி பெற அறிவுரை கூறுகிறது. 'சந்திரனை மேகம் மறைப்பது போல மனிதர்களைப் பந்த பாசம் மறைப்பதால்' அவர்கள் வந்த வேலையை மறந்துவிடுகிறார்களாம்.
"மாணிக்க முத்து வயிர அணி பூண்டு,
ஆணிப்பொன் சிங்காதனத்தில் இருந்தாலும்
காணித்துடலை நமன் நமன் கட்டியே கைப்பிடித்தால்
கானிப்பொன் கூட வரக்காண்வதில்லை நெஞ்சமே"
எனவே புளியம்பழமும் அதன் ஓடும் போல உலக வாழ்வைக் கடைப்பிடிக்கச் சொல்கிறது.
- நாடார் குலமித்திரனின் கௌரவ மேனேஜர் கருப்பையா பிள்ளைக்கு பர்மா நாடார் சங்கம் வாசித்தளித்த வரவேற்புரையும், நாடார் குல மித்திரனின் 'போஷகப் பிரபுக்கள்' பட்டியலும் இடம் பெறுகிறது.

8 ஆம் பக்கம்:
- இக்கடைசி பக்கம் விளம்பரங்களுக்காக ஒதுக்கப்பட்டு லேகியம், நாடார் வங்கியின் பங்கு விற்பனை, 'நமது குலத் தொழில் யாது? மற்றும் 'நாடார் மகாஜன சங்கச் சங்கீத மஞ்சரி' என்ற நூல்கள், பெஸ்ட் இந்தியன் பிஸ்கட் ஃபாக்டரி, குற்றால தங்கும் விடுதியின் (உணவு உட்பட வசதி கொண்ட விடுதியின்) விளம்பரம் (இரண்டு மாதம் தங்க ரூபாய் 60, ஒரு வாரத்திற்கு 10 ரூபாய், நாளொன்றுக்கு 1.80 ரூபாய் கட்டணம்), 'விவேகானந்தம்', 'நாடார் நண்பன்' மாதாந்திர தமிழ்ப் பத்திரிக்கைகள் ஆகிய விளம்பரங்கள் இடம் பெறுகின்றன.





நன்றி: திலகபாமா மின்னிதழாக்கம்: தேமொழி


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:
தமிழ் மரபு நூலகத்தில்

Thursday, September 24, 2015

நாடார்குல மித்திரன் - 1923 - பிப்ரவரி மாதத்தின் 3 வது இதழ்



வணக்கம்.

நாடார்குல மித்திரன் மின்னிதழ்  1923ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) என  மூன்று  வெளியீடுகளாக  வெளிவந்துள்ளன.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும்....
முத்து நாடாரின் ....
நாடார்குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில்  இன்று ...
1923 ம் ஆண்டு பிப்ரவரி 21  வெளிவந்த மூன்றாவது  இதழ் (மலர் 4, இதழ் 18)  மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில் ...

பக்கம் 1:
வழக்கமான சௌந்தரகாந்தி நூல்,  அமரர் புராணம் நூல்,  ஆநந்தமகிளா,  நாடார்குல மித்திரன் புத்தகசாலை நூல்களுக்கான விளம்பரங்களும்,  தூத்துக்குடி நவீன சுகபோஜன சாலை உணவு விடுதிக்கான விளம்பரமும் உள்ளன. இவற்றுடன்,  புதிய சேர்க்கையாக "புதிய இங்கிலீஷ் சம்பாஷணைப் புஸ்தகம்" என்ற விளம்பரம் ஒன்று ஆரணி திருநாவுக்கரசு பிரஸ் வெளியீடான மூன்று பாகங்கள் உள்ள இந்த நூலைப் படித்தால் மூன்று மாதங்களில் இங்கிலீஷில் சம்பாஷிக்கலாம் என்று கூறுகிறது.

பக்கம் 2:
தியாகராஜன் அல்லது திறமையுள்ள வாலிபன் (10 ஆவது பாகம்)

ஆத்மானந்த யோகீஸ்வரரான சுவாமி இராமதீர்த்தர், "கல்வி அபிவிருத்திக்கு பத்திரிக்கையே சிறந்த சாதனம்"  என்று உரைத்த ஆழ்ந்த கருத்துள்ள உபதேசம்  என்ற பகுதி; அமெரிக்க, இங்கிலாந்து நாடுகளில்  பள்ளி செல்லாதவர்கள் கூட இந்தியக் கல்லூரிகளில் படித்த பட்டதாரிகளைவிட  அதிக பொது அறிவுள்ளவர்களாக இருப்பதற்கு அந்நாட்டில் வெளியாகும் தினசரிப் பத்திரிக்கைகளே காரணம் என்கிறது (இந்தியா சுதந்திரம் பெற்றதற்கும், சமுதாய முன்நேற்றதிற்கும்  பத்திரிக்கை வழி எழுச்சியூட்டும் கருத்துகள் பரவியதே காரணம் என்பதை நாமும் அறிவோம் அல்லவா?). உரையாற்றிவர் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இவர் தனது உரையில் பெண்கல்வியை வலியுறுத்துகிறார்.

கிரிஷ்ணலீலை (தொடர் ...)


பக்கம் 3:

செய்தித்திரட்டு
கடிதங்கள்
ரசத்திரட்டு


பக்கம் 4:
தலையங்கம்: இந்து தேவஸ்தான பரிபாலன மசோதா
(சென்னை மாகாண சட்டசபையில் பரிசீலனையில் இருக்கும் மசோதாவைப் பற்றிய மிக விரிவான கருத்து அலசல் இடம் பெறுகிறது)


பக்கம் 5:
ஐரோப்பிய வர்த்தமானம்: பிரான்சுக்கும் ஜெர்மனிக்குமான எல்லைத்தகராறு விவகாரம், பாரீஸ் மகாநாடு, பிரான்சின் பிடிவாதம், பிரான்சின் படையெடுப்பு, ரூர் பிரதேசத்தின் நிலைமை   ஆகியவற்றைப் பற்றிய செய்தி இடம்பெறுகிறது.

மிதவாதி, குக வேளாளர் பத்திரிக்கைகள் பற்றிய மதிப்புரைகள்


பக்கம் 6:
பர்மா வர்த்தமானம்: கல்வி அபிவிருத்தி சங்கத்தின் பொதுக்கூட்டம் பற்றிய செய்தி 

நாடார்குல சங்கங்கள் பற்றிய செய்திகள்


பக்கம் 7:
இலங்கை வர்த்தமானம் (இலங்கை நிகழ்வுகள்)

பர்மா பயணத்தில் பத்திரிக்கை ஆசிரியருக்கு பர்மாவில் வழங்கப்பட்ட வரவேற்புரை

.......... ஆகியவை இடம் பெற்றுள்ளன.



நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி


வாசிக்க இங்கே செல்க!




அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:
தமிழ் மரபு நூலகத்தில்


Wednesday, September 9, 2015

நாடார்குல மித்திரன் - 1923 - பிப்ரவரி மாதத்தின் 2 வது இதழ்




வணக்கம்.

நாடார்குல மித்திரன் மின்னிதழ்  1923ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) என  மூன்று  வெளியீடுகளாக  வெளிவந்துள்ளன.

நாடார்குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில்  இன்று ...
1923 ம் ஆண்டு பிப்ரவரி 11  வெளிவந்த இரண்டாவது   இதழ் (மலர் 4, இதழ் 17)  மின்தொகுப்பில் இணைகின்றது.

இந்த இதழில் ...

பக்கம் 1:
வழக்கமான சௌந்தரகாந்தி நூல்,  அமரர் புராணம் நூல்,  ஆநந்தமகிளா,  நாடார்குல மித்திரன் புத்தகசாலை நூல்களுக்கான விளம்பரங்களும்,  தூத்துக்குடி நவீன சுகபோஜன சாலை உணவு விடுதிக்கான விளம்பரமும் உள்ளன. இவற்றுடன்,  புதிய சேர்க்கையாக "புதிய இங்கிலீஷ் சம்பாஷணைப் புஸ்தகம்" என்ற விளம்பரம் ஒன்று ஆரணி திருநாவுக்கரசு பிரஸ் வெளியீடான மூன்று பாகங்கள் உள்ள இந்த நூலைப் படித்தால் மூன்று மாதங்களில் இங்கிலீஷில் சம்பாஷிக்கலாம் என்று கூறுகிறது.

பக்கம் 2:
இலங்கை வர்த்தமானம் (இலங்கை நிகழ்வுகள்)
கிரிஷ்ணலீலை (தொடர் ...)
கைத்தொழிலே செல்வம் (கட்டுரை)

பக்கம் 3:
பர்மா வர்த்தமானம்
கடிதங்கள்
செய்தித்திரட்டு

பக்கம் 4:
தலையங்கம்: அங்கும் இங்கும் எங்கும் உள்ள மனோபாவங்கள்
குறிப்புகள்

பக்கம் 5:
நூல் பத்திரிக்கை மதிப்புரைகள்
ஹிந்து தேவஸ்தான பரிபாலன மசோதா
ஐரோப்பிய வர்த்தமானம்: யுத்த முஸ்தீப்புகள், சமாதன மகாநாடு முறிந்துவிட்டது

பக்கம் 6:
உபாத்திமைத் தொழிலும் சில உயர் இலட்சியங்களும் (கட்டுரை)
நாடார் மகாமண சங்கமும் பிரசாரமும்சிற்சில தமிழக செய்திகள்

பக்கம் 7:
கல்வி (தொடர் ...)
குடும்பமும் அதன் பயனும் (கட்டுரை)
விடாமுயற்சி (கட்டுரை)

ஆகியவை இடம் பெற்றுள்ளன.


நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:
தமிழ் மரபு நூலகத்தில்